உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தர்மஸ்தலாவில் தொடர் சோதனை 7 மண்டை ஓடுகள் சிக்கின

தர்மஸ்தலாவில் தொடர் சோதனை 7 மண்டை ஓடுகள் சிக்கின

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தட்சிண கன்னடா: தர்மஸ்தலாவின் பங்களாகுட்டா வனப்பகுதியில் எஸ்.ஐ.டி., அதிகாரிகள், இரண்டாவது நாளாக நேற்று சோதனை நடத்தினர். இதில், இரண்டு மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள், மரத்தில் தொங்கிய கயிறுகள், சேலைகள் மீட்கப்பட்டன. கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக பொய் புகார் அளித்த சின்னையா என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில், நேற்று முன்தினம் பங்களாகுட்டா வனப்பகுதியில் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், ஐந்து மண்டை ஓடுகள், ஏராளமான எலும்புகள் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக, சோதனை நடந்தது. இதில், இரண்டு மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள் சிக்கின. சிக்கிய மண்டை ஓடுகளை, பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து, எஸ்.ஐ.டி., ஊழியர்கள் வெளியே எடுத்து வந்தனர். இவை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. வனப்பகுதியில் மரத்தில் தொங்கிய கயிறுகள், சில சேலைகளையும் எடுத்தனர். ஒரு மண்டை ஓட்டின் அருகில் ஆதார் அட்டை ஒன்றும் கிடந்தது. அது, குடகின் விராஜ்பேட் கோணிகொப்பாவை சேர்ந்த அய்யப்பா, 65, என்பவருடையது. இவர், 2017ல் காணாமல் போய் உள்ளார். அய்யப்பாவின் அடையாள அட்டை, எட்டு ஆண்டுகளுக்கு பின், சிக்கி உள்ளது. அவர் இங்கு வந்து தற்கொலை செய்து இருக்கலாம் என்றும், சந்தேகம் எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
செப் 19, 2025 11:17

எங்கிருந்தோ மண்டை ஓடு எலும்புகளை எடுத்துக் கொண்டு போயி புதைத்துவிட்டு விளையாட்டு நடக்கிறது. ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் என்ற திராவிட உருட்டு இன்னும் சிலரால் நம்பப்படுகிறது


Shekar
செப் 19, 2025 09:34

அய்யா எங்க ஊர் புளியந்தோப்பில் பலர் இறந்து புதைக்கப்பட்டதாக கேள்வி. அதையும் அந்த தர்மசாலா கணக்கில எழுதிக்கொள்ளுங்கள். அப்புறம் ஊருக்கு வடக்கால ஒரு இடத்தில ஒரு காலத்தில் புதை காடு இருந்துச்சாம் அங்கேயும் மண்டை ஓடு கிடைக்கும் அதையும் அவங்க கணக்குல எழுதிக்கீங்க


திகழ்ஓவியன்
செப் 19, 2025 09:14

தர்மஸ்தலாவில் தொடர் சோதனை 7 மண்டை ஓடுகள் சிக்கின இது எப்படி வந்தது இதும் பொய் என்று சொல்லுவார்களா, அந்த பிஜேபி ஆளை சரியாய் விசாரியுங்கள் , கோயில் விஷயம் சமரசம் வேணாம்


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2025 06:41

அந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இன்னமும் அடங்காமல் ஆடுவது அசிங்கமா இருக்கு , அவனை கிருஸ்துவனா நம்பவே முடியவில்லை , அவன் வாழும் இடத்தை நரகமாக்குவான்


Kasimani Baskaran
செப் 19, 2025 03:36

கதை வசனம் எழுதிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை கைது செய்து விசாரித்தால் உண்மைகள் வெளிவரும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை