உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதா; தாக்கல் செய்தார் அமித்ஷா

அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதா; தாக்கல் செய்தார் அமித்ஷா

புதுடில்லி: 30 நாட்கள் சிறையில் இருந்தால், பிரதமர், முதல் அமைச்சர்கள், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆக., 5ல் மத்திய பா.ஜ., அரசு ரத்து செய்தது. இதையடுத்து அம்மாநிலம், ஜம்மு -- காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=l6qet7hl&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை 2023ம் ஆண்டு டிசம்பரில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது; விரைவில் மாநில அந்தஸ்து வழங்கும்படி வலியுறுத்தியது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளால், அது நிறைவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், பார்லி.,யின் மழைக்கால கூட்டத்தொடரில் ஜம்மு - காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டது.கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலோ, பிரதமர், மத்திய அமைச்சர் அல்லது மத்திய இணையமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்த மசோதா சபையால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பின்னர் லோக்சபா மாலை 5 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 37 )

vbs manian
ஆக 20, 2025 21:21

பல அரசியல்வாதிகளுக்கு வியர்த்து கொட்டும்.


தாமரை மலர்கிறது
ஆக 20, 2025 21:01

இந்த மசோதாவால், மீண்டும் ஜெயித்து வர இனி ஸ்டாலின் கூட விரும்ப மாட்டார். திமுக ஆட்சி முடிவுக்கு வருகிறது. விரைவில் ஸ்டாலின் ஓய்வு பெறுவார்.


தாமரை மலர்கிறது
ஆக 20, 2025 20:52

சூப்பர் திட்டம். ஊழலை ஒழிக்க இதுபோன்ற சட்டங்கள் அவசியம். திமுகக்காரனுக்கு எதுக்கு பயம் அல்லுது?


spr
ஆக 20, 2025 20:20

"கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டாலோ அல்லது தடுப்பு காவலில் வைக்கப்பட்டாலோ, பிரதமர், மத்திய அமைச்சர் அல்லது மத்திய இணையமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கான புதிய சட்ட மசோதாவை லோக்சபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்" இது மட்டுமே போதாது மாநிலத்து அமைசர்களுக்கும் இது பொருந்தும் என்று சொல்லியிருக்க வேண்டும். மாநில முதலமைச்சர் மற்றும் இதர அமைசர்களும் குற்றம் செய்து சிறையிலடைக்கப்பட்டால், அவர்களையும் பதவி விலக்கம் செய்ய வேண்டுவது காலத்தின் கட்டாயம் என்பதனை ஏற்கனவே நாம் அறிந்திருக்கிறோம் அவசரத்தில் எடுத்த அரைகுறை முடிவு ஆனால் "பிரதமர், மத்திய அமைச்சர் அல்லது மத்திய இணையமைச்சரைதானே பதவி நீக்கம் செய்வதாக இம்மசோதா சொல்கிறது எதிரிக்கட்சிகள் என் ஆட்சேபணை எழுப்புகிறது அவர்கள்தான் மத்தியில் ஆட்சிக்கே வரப்போவதில்லையே


ManiMurugan Murugan
ஆக 20, 2025 19:55

இப்போது இருக்கும் சூழலில் சிறிது காலம் சென்ற பிறகு இன்னும் போர் முடிவுக்கு வராத நிலையில் மாநில அந்தஸ்து என்பது தவிர்க்க வேண்டிய ஒன்று அங்கு கட்சிகளுக்குள் தலைவர்களுக்குள் ஒற்றுமை இல்லை இது பல பிரச்சனைகளை உருவாக்கும் என்பதால் காலதாமதம் ஆவது நன்று முடிந்தால் ராகுல் பாகிஸ்தான் சென்று பயங்கரவாத ஒழிப்பு பிரச்சாரம் செய்யலாம்.


Raj
ஆக 20, 2025 19:55

சட்டம் புத்தகத்திற்கு மட்டும் தான், அதை அமுல் படுத்துவதற்கு அல்ல.


ManiMurugan Murugan
ஆக 20, 2025 19:47

இந்த மசோதாவில் எந்த தவறுமில்லை.கண்டிப்பாக நிறைவேற்றப்பட வேண்டும். ஒருவர் தவறு செய்தது நிருபணம் ஆனால் தானே தண்டனை.பிறகு எதற்கு எதிர்க்கட்சிகள் ஒப்பாரி.அதே போல் வாய்தாவிற்கும் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.


Rajasekar Jayaraman
ஆக 20, 2025 19:11

இந்த சட்டத்தையும் எதிர்க்க இந்தி கூட்டணி தயாராக இருக்கும் மடியில் கணம் கண்டிப்பாக வழியில் பயம் இருக்கத்தான் செய்யும்.


SUBBU,MADURAI
ஆக 20, 2025 18:57

Who will the Constitutional Amendment Bill target? Corrupt PMs, CMs, and Ministers. Who is opposing it? Congress, TMC, SP, RJD, DMK and the entire INDI Alliance. Do we still need more Proof to expose Indias most corrupt parties?


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஆக 20, 2025 18:11

அரசியல்வாதி தவறு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு பதிவுசெய்து, விசாரணை கைதியாக ஜெயிலில் இருந்தாலும் அவர்களை பதவிநீக்கம் செய்யும் இப்படி ஒரு சட்டம் தேவைதான். நீதிமன்றத்தில் குற்றமற்றவர் என்று நிரூபித்து பின்னர் மீண்டும் பதவி ஏற்றுக்கொள்ளட்டும். மற்றவர்களுக்கு என்ன நீதியோ அதேதான் அரசியல்வாதிகளுக்கும். அதுதான் சரி. ஜெயிலில் இருந்துகொண்டு ஆட்சி செய்வேன் – கெஜ்ரிவால், பெயிலில் வந்து மந்திரி ஆவேன் – பத்து ரூபாய் பாலாஜி, என்ற திருட்டு வேலைகளுக்கு இனி இடமில்லை. நல்ல சட்டம். மக்கள் வரவேற்க வேண்டும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம், இதுதான் உண்மையான சமூக நீதி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை