உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்

பீஹார் தேர்தல் முடிவுக்கு எஸ்ஐஆர்-ஐ காரணம் சொல்வது துரதிர்ஷ்டவசமானது: ஒவைசி காட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: ''பீஹார் தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணம் என அகிலேஷ் யாதவ் கூறுவது துரதிர்ஷ்டவசமானது'' என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆர்ஜேடி தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படும்தோல்வி அடைந்துள்ளது. அதேநேரத்தில், 5 தொகுதிகளில் ஒவைசி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து, நிருபர்களிடம் அசாதுதீன் ஒவைசி கூறியதாவது: நான் அவ்வளவு பெரிய அரசியல்வாதி இல்ல, ஆனால் இந்த முடிவுக்கான சாத்தியக்கூறு என்னன்னு எனக்குப் புரியுது. அவங்க 200ஐத் தொடுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவில்லை.இப்போது அவங்க (மஹாகட்பந்தன் கூட்டணி) யோசிக்க வேண்டும். ஒவைசி பொறுப்புன்னு அவங்க பழைய பதிவுகளை மீண்டும் போட்டா போடட்டும். அந்தப் பாட்டைப் பாடட்டும். அகிலேஷ் யாதவ் பீஹார் தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்ததுக்கு, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணம் என சொல்ல ஆரம்பித்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இது தவறு. நாங்களும் தேஜ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று விரும்பவில்லை. நாங்க எல்லா முயற்சிகளையும் எடுத்தோம். நீங்கள் தயாராக இல்ல. இது பீஹார் மக்களின் தீர்ப்பு, அதை மரியாதையா ஏற்றுக்கொள்ள வேண்டும். பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு வாழ்த்துக்கள். பீஹாரில் அவர் உண்மையிலேயே வளர்ச்சி அடைய விரும்பினால், சீமாஞ்சலில் நீதி நிலைநாட்ட ஆக்கபூர்வமான ஒத்துழைப்பைச் செய்வோம். இவ்வாறு அசாதுதீன் ஒவைசி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

naranam
நவ 16, 2025 04:55

இவர் இப்படி அரசியல் செய்து கொண்டிருப்பதற்கு பிஜேபியும் மத்திய அரசும் ஒரு காரணம்.


மணிமுருகன்
நவ 15, 2025 23:50

வாக்காளர் பட்டியல் சீரமைப்பினால் பிரச்சனை என்றால் 60% ஓட்டு எப்படி வந்தது


Kalyanasundaram Linga Moorthi
நவ 16, 2025 02:27

he is a thulukkan, will talk and comment like this else he will be in trouble as well he is not able to do so many things like the one happened in Delhi


Barakat Ali
நவ 15, 2025 17:49

துக்ளக்காருக்கு உங்க மேல கோவம் வரும் .......


Moorthy
நவ 15, 2025 17:38

ஒவைசியின் kyc யை பிஜேபி பாதுகாப்பது அவசியம். ஒரு நாள் உதவும்


ஆரூர் ரங்
நவ 15, 2025 17:05

SIR மூலம் இஸ்லாமிய வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டது உண்மையானால் ஓவைசி கட்சி 5 இடங்களில் வெற்றிபெற்றிருக்க வாய்ப்பேயில்லை. ராகுல் பொய்யின் மொத்த உருவம்.


Modisha
நவ 15, 2025 16:56

நீங்க பிஜேபியில் சேர்ந்துடுங்க , நல்ல எதிர்க்காலம் உண்டு.


Iyer
நவ 15, 2025 16:44

ஆமாம் ஐயா - SIR தான் ஒரே காரணம் . சார் செய்யாமல் தேர்தல் நடத்தி இருந்தால் 1. 40 லக்ஷம் பங்களாதேஷி வோட்டளித்திருப்பார்கள் ௨. 20 லக்ஷம் இறந்தவர்கள் பெயரில் கள்ள வோட்டு விழுந்திருக்கும் 3. 5 லக்ஷம் புலம் பெயர்ந்தவர்கள் பெயரில் கள்ள ஓட்டுக்கள் பதிவாயிருக்கும் 65 லக்ஷம் கள்ள ஓட்டுக்கள் கழியப்பட்டதால் தானே RJD தோற்றது


duruvasar
நவ 15, 2025 16:43

இங்ககூட ஒன்னு என்னன்னு ததெரியாமலலே கூட்டத்தை கூட்டுங்கள்னு சொல்லிக்கிட்டு கிளம்பியிருக்கிறது. எண்ணத்தை சொல்ல.


Venkat esh
நவ 15, 2025 16:38

நீங்கள் தான் மானங்கெட்ட மாடல் கூட்டம் இஸ்லாமிய ஆதரவு தானே... இப்போது உங்கள் வாயை திறந்து பேசுவீர்களா


Balasubramanian
நவ 15, 2025 16:23

S.I.R. க்கும் தேர்தல் முடிவுக்கும் எதுவும் சம்பந்தம் இல்லை - என்பதை அழுத்தம் திருத்தமாக எங்கள் முதல்வரிடம் எடுத்து சொல்லுங்கள்!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை