உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட்டையொட்டி ‛அல்வா கிண்டும் நிகழ்வு: மத்திய அமைச்சர் பங்கேற்றார்

பட்ஜெட்டையொட்டி ‛அல்வா கிண்டும் நிகழ்வு: மத்திய அமைச்சர் பங்கேற்றார்

புதுடில்லி: மத்திய பட்ஜெட்டை தாக்கலையொட்டி அல்வா கிண்டும் நிகழ்ச்சியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராம் துவக்கி வைத்தார்.பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31ல் துவங்குகிறது. அன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்த உள்ளார்.லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், 2024 - 25ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய முடியும். அதன்படி, பிப்., 1ல், அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.இதையடுத்து இன்(24-ம் தேதி) ''அல்வா கிண்டும்'' நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் அனைவருக்கும் அல்வா விநியோகித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்