உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்ஸ்ட்ராங் கொலை : சி.பி.ஐ., விசாரணைக்கான உத்தரவை திரும்ப பெறும்படி தமிழக அரசு மனு

ஆம்ஸ்ட்ராங் கொலை : சி.பி.ஐ., விசாரணைக்கான உத்தரவை திரும்ப பெறும்படி தமிழக அரசு மனு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ., விசாரணை தொடரும் என்ற உத்தரவை திரும்ப பெறக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி, சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகே வைத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து சென்னை, செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விவகாரத்தில் பல கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருப்பதால் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக்கோரி, ஆம்ஸ்ட்ராங்-கின் சகோதரர் இம்மானுவேல், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ.,-க்கு மாற்றி கடந்த மாதம் 24ல் உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, சி.பி.ஐ., விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய மறுத்ததோடு, குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய வேண்டும் என்ற உத்தரவுக்கும் தடை விதித்தது. இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திரும்பப் பெறக்கோரி தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சிட்டுக்குருவி
நவ 19, 2025 06:34

ஒரு கொலை வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் ஒரு அரசின் குறிக்கோளாக இருக்கவேண்டும் .ஒரு வழக்கை யார் விசாரிக்கலாம் ,யார் விசாரிக்கக்கூடாது என்பதெல்லாம் நிர்ணயிப்பது அரசின் அதிகாரத்திற்குள் வாராது .இதில் எல்லாம் அரசு தலையிட்டு மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை அரசு நிறுத்தவேண்டும் .உச்சநீதிமன்றம் இதுபோன்ற தலையீடுகளையெல்லாம் கடுமையான அபராத தண்டனைக்குட்படுத்தவேண்டும் .மனுவை சமர்ப்பிக்கும்போதே அபாராததோடு தள்ளுபடிசெய்யவேண்டும் .தமிழக அரசு ஒன்றுதான் எதெற்கெடுத்தாலும் சட்டத்திற்குபுறம்பான மனுக்களை உச்சநீதிமன்றத்தின் சமர்ப்பித்து appeals கோர்ட்டை விசாரணை கோர்ட்டாக மாற்றி சாதனைப்படைகின்றது .அதற்கும் அங்கு ஆதரவு இருப்பதுதான் ஆச்சிரியமாக இருக்கின்றது .உச்சநீதி மன்றத்தின்மீது மக்களின் நம்பிக்கையை இழைக்க செ ய்கின்றது .


காலின்ஸ்
நவ 19, 2025 06:19

யார் வந்து விசாரிச்சாலும் துப்பு என்ன பல்லு கூட வெளக்க முடியாது. எதுக்கு பணம், நேரம் வேஸ்ட் பண்ணிக்கிட்டு?


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ