உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைசூருக்கு அஸ்வமேதா பஸ்கள் வருகை

மைசூருக்கு அஸ்வமேதா பஸ்கள் வருகை

மைசூரு : பயணியருக்கு சிறப்பான போக்குவரத்து சேவை வழங்க, 15 புதிய 'அஸ்வமேதா' பஸ்கள் மைசூருக்கு வந்துள்ளன. இவற்றுக்கு பயணியரிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.பயணியருக்கு குறைந்த கட்டணத்தில், சுகமான போக்குவரத்து சேவை வழங்கும் நோக்கில், 100 புதிய பஸ்களை கடந்த வாரம், கே.எஸ்.ஆர்.டி.சி., துவக்கியது. இந்த சொகுசு பஸ்களுக்கு, 'அஸ்வமேதா' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவற்றில் 15 பஸ்கள் வந்துள்ளன. அதி நவீன வசதிகள் கொண்ட பஸ்கள், மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன.தற்போது இவற்றை, மைசூரு - பெங்களூரு இடையே கே.எஸ்.ஆர்.டி.சி., இயக்குகிறது. மைசூரில் இயங்கும் கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் 120 பஸ்களுக்கு, விரைவில் 15 ஆண்டுகள் பூர்த்தியடையப் போகிறது. எனவே பயணியரின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, போக்குவரத்துத் துறை, 15 அஸ்வமேதா பஸ்களை மைசூருக்கு வழங்கியது. புதிதாக 100 மின்சார பஸ்களை வழங்கும்படி, மத்திய அரசிடம் கோரியுள்ளது.இதுகுறித்து கே.எஸ்.ஆர்டி.சி., அதிகாரிகள் கூறியதாவது:மைசூரு சுற்றுலா நகராகும். அரண்மனை, சாமுண்டி மலை, கே.ஆர்.எஸ்., அணை, மிருகக் காட்சி சாலை என பல்வேறு பிரபலமான சுற்றுலா தலங்கள் உள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர். 'சக்தி' எனும் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச திட்டம் செயல்படுத்திய பின், சுற்றுலா பயணியர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. எனவே கூடுதல் பஸ்கள் தேவைப்பட்டன. அஸ்வமேதா பஸ்கள் சுற்றுலா பயணியருக்கு, மிகவும் உதவியாக உள்ளன.இப்பஸ்கள், வெவ்வேறு நகரங்களில் இருந்து, பெங்களூருக்கு இணைப்பு ஏற்படுத்தும் பாயின்ட் டு பாயின்ட் எக்ஸ்பிரஸ் பஸ்சாகும். 3.42 மீட்டர் நீளம் கொண்ட பஸ், அதிநவீன வசதிகள் கொண்டது. மொபைல் போன் சார்ஜிங்குக்கு, ஆறு சார்ஜிங் பாயின்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. பயணியர் லக்கேஜ் வைக்கவும் தனி வசதி உள்ளது. ஜி.பி.எஸ்., சாதனம், பானிக் பட்டன்கள் உள்ளன.இரண்டு நகரங்களுக்கு இடையே, தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் பயணிக்கின்றனர். மைசூரு - பெங்களூரு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதால், வெறும் 90 நிமிடங்களில் பெங்களூரை அடையலாம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை