உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு குண்டுவெடிப்பு: சதிகாரர்கள் இருவர் மே.வங்கத்தில் கைது

பெங்களூரு குண்டுவெடிப்பு: சதிகாரர்கள் இருவர் மே.வங்கத்தில் கைது

பெங்களூரு: பெங்களூரு ‛ராமேஸ்வரம் கபே' என்ற ஹோட்டலில் குண்டு வைத்தவர் மற்றும் அதற்கு மூளையாக செயல்பட்ட நபர் என இரண்டு பேரை மேற்கு வங்க மாநிலத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர்.

அடையாளம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில், ‛ராமேஸ்வரம் கபே' என்ற ஹோட்டலில், மார்ச் 1ல் குண்டு வெடிப்பு நடந்தது. இதில், ஹோட்டல் ஊழியர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். இது குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். குண்டுவெடிப்பு குற்றவாளிகளாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முஸாவிர் ஹூசைன் ஷாகிப், 30, அப்துல் மதீன் தாஹா,30, ஆகியோரை அடையாளம் கண்டுள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lls2benp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சோதனை

இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் தலா 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் கூட்டாளி முஸாமில் ஷெரீப்,32 ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பல இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கைது

இந்நிலையில், முஸாவிர் ஹூசைன் ஷாகிப் மற்றும் அப்துல் மதீன் தாஹா ஆகியோரை மேற்கு வங்க மாநிலத்தில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைது செய்தனர். இதில், முஸாவிர் ஹூசைன் ஷாகிப், ஹோட்டலில் குண்டு வைத்ததும், அப்துல் மதீன் தாஹா என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க வைப்பதற்கு மூளையாக செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

பேசும் தமிழன்
ஏப் 13, 2024 08:05

நன்றாக விசாரியுங்கள்..... இந்தியா கூட்டணி ஆட்கள் தொடர்பு இருக்க வாய்புள்ளது....


ArGu
ஏப் 12, 2024 18:50

மர்மம் விலகியதோ ??? இல்லை இல்லை பிடிபட்டதோ?


A1Suresh
ஏப் 12, 2024 18:04

மனிதர்களே அல்ல இவை மிருகங்கள் உச்சபட்ச தண்டனையை தாமதமின்றி தரவேண்டும்


N.Purushothaman
ஏப் 12, 2024 16:49

இவிங்களுக்கும் திருட்டு திராவிட கட்சிக்காரனுக்கும் தொடர்பு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை


Palanisamy Sekar
ஏப் 12, 2024 15:45

இதில் என்ன சாதித்தார்கள் இந்த மர்ம குரூப் நபர்கள்? இவர்களின் போதனையின் லட்சணம் இப்படி இருக்கிறது மம்தா கருணையால் பங்களாதேசத்திலிருந்து வந்தவர்களாக இருக்கக்கூடும் விசாரணை என்கிற பெயரில் காலம் கடத்திடாமல் தண்டனையை நிறைவேற்ற வேண்டும்


Mohan
ஏப் 12, 2024 13:13

நல்ல வேலை இன்னும் கொஞ்ச தூரம் விட்டுருந்தீங்க பங்கலதேஸ்ஷுக்கு தப்பிச்சிருப்பானுக நன்றி வாழ்த்துக்கள் அய்யா


RAMESH
ஏப் 12, 2024 13:01

இந்த கழிசடைகளுக்கு பின்புலத்தில் இருக்கும் அரசியல் சாக்கடைகளை உடனடியாக NIA விசாரணை வளையத்தில் கொண்டு வரவேண்டும் மற்றொரு தகவல் , நடிகர் சூர்யாவின் அகரம் ஜாபிர் சாதிக்கிடம் பணம் பெற்று இருக்கிறது குள்ளனும் விரைவில் விசாரணை வளையத்தில்


rsudarsan lic
ஏப் 12, 2024 13:00

முதலில் எப்படி இத்தனை மாநிலங்களுக்கு யார் உதவியுடன் செல்ல முடிந்தது என்று விசாரியுங்கள் இந்தியா சீராகி விடும்


duruvasar
ஏப் 12, 2024 12:54

இவர்கள் பற்றி ஆமைக்கறி அறிவாளனின் கருத்தே இறுதி கருத்தாக இருக்கும் எனவே அவரின் இறுதி தீர்ப்பிற்க்கு காத்திருப்போம்


Jysenn
ஏப் 12, 2024 12:43

It is very frightening to note that some states are promoting and condoning terrorism as a means to consolidate their vote bank politics without caring an iota about the plight of the possible victims Such state sponsored terrorism must be ruthlessly eliminated even if it involves invoking the article


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை