உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அப்பட்டமான பொய்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம்: பிரியங்கா பேட்டி

அப்பட்டமான பொய்: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்போம்: பிரியங்கா பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

க்னோ: 'எதிர்க்கட்சிகள் (இண்டியா கூட்டணி) ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள் எனக் கூறுவது அப்பட்டமான பொய். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம்' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.உ.பி., மாநிலம் லக்கிம்பூர் கெரி பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், எதிர்க்கட்சிகள் (இண்டியா கூட்டணி) ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியிருந்தார். இந்நிலையில், ரேபரேலியில் நிருபர்கள் சந்திப்பில் பிரியங்கா கூறியதாவது: 400 தொகுதிகள் வெற்றி பெற பா.ஜ., விரும்புகிறது. இதனால் அவர்கள் எதிர்க்கட்சிகள் (இண்டியா கூட்டணி) ஆட்சிக்கு வந்தால், ராமர் கோயிலுக்கு பாபர் பூட்டு போடுவார்கள் எனக் கூறுகின்றனர். இது அப்பட்டமான பொய். காங்கிரஸ் மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிப்போம்.

ஓவைசியை சாடிய பிரியங்கா

நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன். அசாதுதீன் ஓவைசி நேரடியாக பாஜவுடன் இணைந்து செயல்படுகிறார். பா.ஜ., எங்கு வேண்டுமானாலும் யாரையாவது வேட்பாளராக நிறுத்தட்டும். ஆனால் எதிர்க்கட்சிகள் பா.ஜ.,வை தோற்கடிக்கும் என தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் மிகவும் தெளிவாகிவிட்டது. இவ்வாறு பிரியங்கா கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

R SRINIVASAN
மே 10, 2024 09:23

ராஜிவ் காந்தி கொல்லப்பட்டவுடன் சோனியா இந்தியாவைவிட்டே போய்விடுகிறாம் என்று சொன்னார்கள் ஆனால் சீதாராம் கேசரி என்பவர் சோனியாவை தடுத்து விட்டார் இந்திரா காந்தி -ல் பார்லியமெண்டைக்கலைக்காமல் ஒரு வருடம் நீட்டித்தார் அந்த ஒரு வருடத்தில் வாங்க தேசத்தில் இருந்து வந்த முஸ்லிம்களுக்கு குடியுரிமையும் ஓட்டுரிமையும் கொடுத்து அஸ்ஸாமில் முஸ்லிம்களின் எண்ணிக்கையைக் கூட்டினார் -ல் தொத்ரூபோனாலும் மொரார்ஜி தேசாயின் அமைச்சரவையில் அங்கம் வகித்த சரண்சிங்கிறகு ஆசை காண்பித்து அந்த ஆட்சியைக் கவிழ்த்தார் இந்த மானங்கெட்ட தேசத்துரோக கும்பலை தேசத்தை விட்டே துரத்தி அடித்து தேசத்தின் மீது பத்ரு உள்ள காங்கிரெஸ்க்காரரான கமல் நாத்தை காங்கிரஸின் தலைவராக நியமித்தால் காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்கும்


Venuviswanathan
மே 09, 2024 17:31

முதலில் கணவர் வதேராவின் ஊழல் பணத்தையெல்லாம் ராமர் கோவிலுக்கு டொனேஷனாக கொடுத்தால் மக்கள் மனம் மாறலாம்


vidhu
மே 09, 2024 17:02

அதாவது பிரியங்கா என்ன சொல்லவரங்கனா அவங்களுக்கே புரியல


Velan Iyengaar
மே 09, 2024 16:55

இவற்றை தவிர இவனுங்களிடம் பிரச்சாரம் செய்ய ஒண்ணுமே இல்லையா ?? பத்து வருஷம் ??


krishnamurthy
மே 09, 2024 16:32

அரசியலே தெரியாது குடும்ப பின்னணி தைரியத்தில் எதை வேண்டுமானாலும் பேசுகிறாள் அரசியல் அறிவோ முதிர்ச்சியோ இல்லை


R Kay
மே 09, 2024 16:16

இந்த வாரிசுகளின் முகங்களை பார்க்கவே பிடிக்கவில்லை


R Kay
மே 09, 2024 16:14

அத்தைக்கு மீசை முளைத்தால்தானே கனவு காணலாம் ஆட்சிக்கு வருவதெல்லாம் உங்கள் குடும்பம் அரசியல் சன்யாசம் பெறும் வரை சாத்தியமே இல்லை


அருண் பிரகாஷ் மதுரை
மே 09, 2024 15:32

அடேங்கப்பா...சிறுபான்மை மக்கள் மனம் நோகி விடும் என்பதற்காக உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்று மட்டும் கூறுகிறார்.ஏன் ஶ்ரீராமரை நம்புகிறோம் என்று கூற மறுக்கிறார்.இதில் இருந்தே உங்கள் வேடம் புரிகிறது. தேர்தலுக்கு முன்னர் தீர்ப்பு கொடுக்க வேண்டாம் என்று கூறியது ஏன் என்று விளக்கம் கொடுக்க முடியுமா??? இதுவரை ஏன் ராமர் கோவிலுக்கு செல்லவில்லை என்று காரணம் கூற முடியுமா???


rsudarsan lic
மே 09, 2024 15:00

அம்மணி என்ன சொல்ல வராங்க?


Rajeswaran
மே 09, 2024 14:42

சரிங்க


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ