வாசகர்கள் கருத்துகள் ( 18 )
எல்லாத்துறைகளிலும் நிறைய சீர்திருத்தம் செஞ்சிருக்கோம்னு பெருமிதப் படறாரு. இதுக்குத்தானா கோவாலு?
லஞ்சமெல்லாம் இந்த யுகத்தில் ஒழிய போவதில்லை.. ஒவ்வொரு தனிமனிதனும் லஞ்சம் ஒழிந்ததாக கற்பனை வேண்டுமானால் செய்துகொள்ளலாம்..அல்லது ஒழிப்பதாக சினிமாவில் ஹீரோ வசனம் பேசலாம் .
ஆச்சரியமான செய்தி. அனைத்து அரசு அலுவலகங்களிலும் அனைத்து வேலைகளும் கட்சிக்காரகளுக்கே ஒதுக்கப் படுகின்றன. அனைத்து மாநில நிலைமையும் இதுவே. அப்படியிருக்க இதில் மூன்றில் இரண்டு பங்கு கட்சிக்காரர்களுக்கும் லஞ்சம் பெற்றுக்கொண்டு தான் வேலையை முடித்துக்கொடுக்கின்றனர் என்ற செய்தி பதவியில் அமர்ந்துவிட்டால் கட்சிக்காரர்களும் கப்பம் செலுத்தித்தான் ஆகவேண்டும் போல இருக்கிறது.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. தனியார் துறையில் கூட இந்த லஞ்சம் தற்போது அதிகமாகி விட்டது. காரணம் ஆசை. ஆசையை பேராசையாக மாறி லஞ்சத்தை அதிகரிக்கிறது. இலவசங்கள் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் குவாட்டர் பிரியாணி கால் கொலுசு புடவை சேலை குக்கர் லேட்டஸ்ட் நாற்காலி இது போன்றவைகள் எப்போது இல்லாமல் போகிறதோ அப்போது தான் லஞ்சம் ஒழியும். மிஸ்டர் கிளின் என்ன எந்த கொம்பன் வந்தாலும் மக்கள் திருந்தா விட்டால் மக்கள் மாக்கள் ஆவார்கள்.
மிஸ்டர் க்ளீன் பிரதமராக இருக்கும்போது கூட இப்படியா ????
திருடானாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இலவச பஸ் ஆயிரம் ரூபாய் ஓட்டுக்கு ஆயிரம் குவாட்டர் பிரியாணி கால் கொலுசு சேலை குக்கர் இவைகள் மேல் எப்பொழுது ஆசை ஒழிகிறதோ அப்போது லஞ்சம் தானாக ஒழிந்து விடும்.
லஞ்சம் எங்கும் பரவிவிட்ட புற்றுநோயாகிவிட்டது. லஞ்சம் ஊழல் வழக்குகளில் மரணதண்டனைதான் கொடுக்கவேண்டும். ஓரளவு குறையலாம்.
"ஊழலற்ற மத்திய அரசு" என்பது ஒரு காலத்தில் கனவாக இருந்தது. கடந்த 11 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் அந்த கனவை நிறைவேற்றி உள்ளதே பெரும் சாதனை தான். இருப்பினும், மாநில அரசுகளின் ஊழல், லஞ்சம் தாறுமாறாக இருந்து கொண்டே தான் இருக்கிறது. நம் நாடு முன்னேறுவதற்கு பெரும் முட்டுக்கட்டையே இந்த ஊழல் தான். ஊழல், லஞ்சம் இவைகளைவிட மிகப்பெரும் முட்டுக்கட்டை கடும் தண்டனையற்ற சட்டங்களும், மிக மிக தாமதமாக வழக்குகளை நடத்தும் நீதிமன்றங்களுமே ஆகும். துறை ரீதியான நடவடிக்கை என்பதை ஒழிக்க வேண்டும்.
ஊழல்னா மத்திய மாநில அனைப்புகள் எல்லாத்தையும் சேத்துதான் கல்யாணம்.
செய்தி லஞ்சத்தை பற்றியது...பேசறது ஊழலை பத்தினது......
லஞ்சம் இல்லாமல் அரசு சேவைகளை பெறுவது நடைமுறையில் சாத்தியமில்லை. என்னதான் ஆன்லைன் சேவை, ஆன்லைன் ஒப்பந்தம் என பல டிஜிட்டல் வழிகளை அரசு ஏற்படுத்தினாலும் அரசு அதிகாரிகளை நேரில் சென்று பார்த்து கொடுக்கவேண்டியதை கொடுத்தால்தான் வேலை நடக்கின்றது. இல்லையேல் அலைக்கழிப்பும் கால விரயமும்தான். இவை எல்லாவற்றையும் தாண்டி மத்திய அரசின் ஒரு துறை நேர்மையாகவும் தனியார் துறைக்கு இணையாக சேவையை அளித்துவருகின்றது. அது பாஸ்போர்ட் வழங்கும் அலுவலகம். மிகவும் பாராட்டத்தக்கது.
இயற்கை தண்டனை இல்லாத நாட்டில் உண்மைக்கும், நல்லவர்களுக்கும் இப்படித்தான் மரியாதை கிடைக்கும்.மீதி 32% உள்ள நல்லவர்களால் தான் இந்த நாடு இப்படியாவது இருக்கிறது, விரைவில் நல்ல இளவு காலம் பிறக்கப்போகும் 80% ஊழல் வரும்போது
லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும் ...அதே போல் அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் குறைந்த பட்சம் இருபத்தைந்து ஆண்டுகளுக்காவது அரசு வேலையை பெற முடியாத அளவிற்கு சட்டத்தை கடுமையாக்க வேண்டும் ...இது ஒரு சமுதாய புற்றுநோய் ... கடுமையான சிகிச்சை தேவை ...