வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் போது இனி சாதிகள் இரட்டிப்பு ஆகிவிடும். இந்துக்களிலும் பல்வேறு ஜாதிகள் உள்ளன. அதே பெயர்களில் கிறிஸ்துவத்திலும் ஜாதிகள் வரும். முஸ்லிம் மதத்திலும் வரலாம். ஆக ஜாதியை ஒழிக்கிறேன் என்று கூறிக்கொண்டு நாம் ஜாதிகள் வளர்த்து கொண்டு உள்ளோம்.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் போது, குடும்பத்தலைவர்/குடும்பத்தலைவி ஆகியோரிடம் அவர்கள் சொந்தமாக வீடு எத்தனை வீடுகள், கார்கள், இதர சொத்துக்களின் மதிப்பு, எத்தனையாவது தலைமுறையாக இவர் இட ஒதுக்கீடு மூலம் பலனடைந்திருக்கிறார்? போன்ற விபரங்களையும் கேட்டு பதிவு செய்ய வேண்டும். தற்போதைய இட ஒதுக்கீடு முறை மூலம் கோடீஸ்வரர்கள் ஏராளமான ஏழைகளை எளிதில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக இட ஒதுக்கீட்டுப் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், முதல் முறையாக இட ஒதுக்கீடு மூலம் முயற்சி செய்கிறவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஏராளமான ஏழை மக்களை ஏமாற்றுவதற்கு வழிவகை செய்கிறது. ஏராளமான ஏழை ஜனங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த பின்பு தற்போதைய இட ஒதுக்கீட்டு முறையையே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அடித்தட்டில் இருப்பவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அம்பேத்கர் அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாது போகும். அம்பேத்கர் அவர்கள் தற்போது உயிருடன் இருந்து மேற்கூறிய தவறுகள் இருப்பதைக் கண்டால், இட ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு கடுங்கண்டனம் தெரிவிப்பார். தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை அம்பேத்கர் அவர்களே கண்டிக்கும் வகையில் படுமோசமாக அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த ஏழை மக்களை ஏமாற்றுகிறது.
அரசியல் அதிகமாகிவிட்டதால் இனிமேல் எவ்வித சென்ஸசும் சாத்தியமில்லை. பொய் வாக்குறுதி கொடுத்து ஊரை ஏமாற்றலாம்.