உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விமான சேவையை 10 சதவீதம் குறைக்கும்படி இண்டிகோவுக்கு மத்திய அரசு உத்தரவு

விமான சேவையை 10 சதவீதம் குறைக்கும்படி இண்டிகோவுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: 'இண்டிகோ' விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையால், நாடு முழுதும் விமான சேவை முடங்கி உள்ள நிலையில், குளிர் கால அட்டவணையில், 10 சதவீத சேவையை குறைக்கும்படி, அந்நிறுவனத்துக்கு, டி.ஜி.சி.ஏ., எனப்படும், சிவில் விமான போக்கு வரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. விமானி மற்றும் விமானப் பணியாளர்களுக்கான பணி நேரம், விடுப்பு உள்ளிட்டவற்றில் விமான போக்குவரத்து அமைச்சகம் தி ருத்தம் செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ckxohsze&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அனுமதி

இந்த புதிய நடைமுறை, நவ., 1ல் அமலுக்கு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவுக்கு, நம் நாட்டில் அதிக விமான சேவைகளை வழங்கும், தனியார் துறையைச் சேர்ந்த பிரபல நிறுவனமான இண்டிகோ இணங்கவில்லை. இதனால் முன்னெப்போதும் இல்லாத வகையில், அந்நிறுவனத்தின் விமான சேவைகள் நாடு முழுதும் பாதிக்கப் பட்டுள்ளன. கடந்த ஒரு வாரமாக முடங்கி உள்ள சேவையால், லட்சக்கணக்கான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக விமான சேவை மீண்டு வருவதாக இண்டிகோ தெரிவித்தாலும், கள நிலவரம் அப்படி இல்லை. இந்நிலையில், இண்டிகோ நிறுவனத்துக்கு டி.ஜி.சி.ஏ., நேற்று பிறப்பித்த உத்தரவு: குளிர் கால அட்டவணை யின் கீழ், நவம்பரில், 15,014 வாராந்திர புறப்பாடுகளுடன், மொத்தம், 64,346 விமானங்களை இயக்க இண்டிகோவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்நிறுவனம், 59,438 விமானங்களை மட்டுமே இயக்கியதுடன், 951 விமான சேவைகளை ரத்து செய்தது. கோடை காலத்துடன் ஒப்பிடுகையில், குளிர் காலத்தில், அதை விட 6 சதவீதம் அதிகமான விமானங்களை இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. எனினும் அந்நிறுவனம் திட்டமிட்டபடி விமானங்களை இயக்கவில்லை.

அட்டவணை

தற்போதைய நெருக்கடி காரணமாக, குளிர் கால அட்டவணையில், 10 சதவீத விமான சேவையை குறைக்கும்படி இண்டிகோவுக்கு உத்தரவிடப் படுகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் வழித்தடங்களில் பாதிப்பு ஏற்படாதபடி, விமான சேவையை குறைக்க வேண்டும். திருத்தப்பட்ட அட்டவணை பட்டியலை, இன்று மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இயல்புநிலை!

இண்டிகோ நிறுவனம் மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பி விட்டது. எங்கள் அதிகாரிகள் 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து டிக்கெட் முன்பதிவு செய்த பயணியருக்கு நன்றி. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட பாதிப்புக்கு பயணியரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். - பீட்டர் ஆல்பர்ஸ் தலைமை செயல் அதிகாரி, இண்டிகோ

அமைச்சர் உறுதி

லோக்சபாவில் நேற்று, விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேசியதாவது: தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு, இண்டிகோ நிறுவனமே முழு பொறுப்பு. முறையாக திட்டமிடாமல் அலட்சியமாக இருந்ததே தற்போதைய நெருக்கடிக்கு காரணம். இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, அந்நிறுவனத்துக்கு ஏற்கனவே நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பயணியரை பரிதவிக்கவிட்ட இண்டிகோவுக்கு எதிராக கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். விமான போக்குவரத்து துறையை பொறுத்தவரை, பயணியர் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பயணியருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு விமான நிறுவனமும், அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அனுமதிக்கப்படாது. இவ்வாறு அவர் பேசினார்.

விமானத்துக்கு மிரட்டல்!

டில்லியில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, 138 பயணியர், ஆறு ஊழியர்களுடன், நேற்று முன்தினம் நள்ளிரவில், 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் வந்தது. இதில், உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி, தற்கொலைப் படையினர், வருவதாக, சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு, 'இ - மெயில்' வாயிலாக மிரட்டல் வந்தது. சோதனை செய்ததில் தற்கொலைப் படை மிரட்டல் புரளி என, தெரி ய வந் தது.

சென்னையில் 41 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில், நேற்று காலையில் இருந்து நள்ளிரவு வரை, டில்லி, மும்பை, கொல்கட்டா, பெங்களூரு, கொச்சி, திருவனந்தபுரம், பாட்னா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல இருந்த 18 விமானங்கள், மற்ற நகரங்களில் இருந்து, சென்னைக்கு வர இருந்த, 23 விமானங்கள் என, மொத்தம், 41 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

திகழ்ஓவியன்
டிச 10, 2025 12:01

சபாஷ்


V.Mohan
டிச 10, 2025 09:06

என்னங்கப்பா இவுனுங்க. வயத்தெரிச்சல் எதை எடுத்தாலும் அம்பானி, அதானி, மோடின்னு ஜல்லியடிக்கிறாங்க. தமிழ்நாடு நாறிட்டு கிடக்கு அதெல்லாம் உட்டாங்க விமான சேவை விஷயத்தில கருத்து... இருங்க 2026 ல விஜய் வருகிறார், ரெடியா பொட்டியை கட்டுங்க


Svs Yaadum oore
டிச 10, 2025 08:11

கார்பொரேட் சாராய கம்பெனி நடத்தறவன் எல்லாம் தமிழ் நாட்டில் விடியல் மந்திரி ....அப்படி இருந்தும் விடியல் போலீசுக்கு மாமூல் கொடுத்து தமிழ் நாட்டில் கள்ள சாராயம் சக்கை போடு போடுது .....இந்த லட்சணத்தில் விடியல் ஆட்சி ..இதில் மத்திய அரசு விமான கம்பெனி ஏன் நடத்தவில்லை என்று கேள்வி கேட்க விடியலுக்கு என்ன யோக்கியதை இருக்குது??......


Gokul Krishnan
டிச 10, 2025 07:49

What happened to Showcause notice sent by DGDC to Indigo CEO. Can central government on this


Indian
டிச 10, 2025 07:14

உலகத்துல 3 வது பொருளாதாரம் அப்படி இப்படி என்று தம்பட்டம் மட்டும் அடிப்போம். ஸ்ரீலங்கா கூட அவனுக்கு என்று ஒரு சொந்தமான விமான நிறுவனம் வைத்துள்ளான். அவனிடம் கேட்டு படிக்கலாம்


Indian
டிச 10, 2025 07:12

எதுக்கு 10 சகிதவிகிதம் குறைக்கணும் .மொத்தமா ஊத்தி மூடிருங்க. உங்களையெல்லா தேர்தெடுத்த மக்கள் நொந்து சாகட்டும். நாட்டை ஒரு வழியாகாம விடமாடீங்க . இந்த மாதிரி செய்த எவன் இந்த நாட்டில் தொழில் தொடங்கிவான்.


Modisha
டிச 10, 2025 12:35

உனக்கு என்ன கவலை. தொழில் நடந்தா என்ன நடக்காட்டி என்ன, vara வேண்டிய free எல்லாம் வருதில்ல .


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
டிச 10, 2025 06:20

விரைவில் அதானி வசம் இண்டிகோ நிறுவனம். பிஜேபி அரசு சூப்பர். ஷேர் மொத்தம் 3000 துக்கு இறக்கி அதானி 40% வாங்கிடுவார். FSTC ல ஏற்கனவே 73% வாங்கிட்டார்,பைலட் சப்ளை இனி அவர் சொல்படி நடக்கும். மோடிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை மக்களே நம்புங்க


ஜெய்ஹிந்த்புரம்
டிச 10, 2025 07:04

ஆமால்லே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை