உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அருணாச்சல பிரதேசத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம்

அருணாச்சல பிரதேசத்தில் ஆயுதப்படைகள் சிறப்பு சட்டம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம்

புதுடில்லி; அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதுவடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதிகள், உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு மத்திய அரசின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த சட்டம் மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மாநிலங்களில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.இந்த ஆயுதப்படைகளுக்கு, பதற்றம் மிகுந்த பகுதிதிகளாக அறிவிக்கப்படும் இடங்களில் நீதிமன்றம் அனுமதியின்றி தேடுதல், கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந் நிலையில் அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில், ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நம்சாய் மாவட்டத்தில் உள்ள திராப், சாங்லாங், லாங்டிங் மாவட்டங்கள், நம்சாய் மாவட்டத்தில் நம்சாய், மகாதேவ்பூர், சௌகாம் ஆகிய காவல் நிலையங்களின் அதிகார வரம்புக்குள் வரும் பகுதிகளில் இந்த சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 1, 2025 முதல் ஆறு மாத காலத்திற்கு இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மீண்டும் ஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த நீட்டிப்பு, மார்ச் 31, 2026 வரை அமலில் இருக்கும் என்று கூறி உள்ளது.அருணாச்சல பிரதேசத்தின் 3 மாவட்டங்கள், நம்சாயின் சில பகுதிகள் அஸ்ஸாம் எல்லைக்கு அருகில் உள்ளதால் சமீப காலமாக சிறப்பு அதிகார சட்டம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருவது, குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !