உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு

பாட்னா: பீஹாரில் காங்கிரஸ் எம்எல்ஏயும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். அவருடன் முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.பீஹார் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து, போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 'இறந்து போனவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரண்டு இடத்தில் பெயர் இருந்தவர்கள் என 65 லட்சம் பேரின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் கமிஷன் நீக்கியுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்னையாக்கி மக்கள் மத்தியில் கொண்டு சென்றன.இதன் தொடர்ச்சியாக, 'வாக்காளர் பட்டியலில் குளறுபடி செய்து, பீஹார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ., முயற்சிக்கிறது' என குற்றஞ்சாட்டி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், பீஹாரில் கடந்த 17ம் தேதி முதல் பிரசார நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.இதில் பங்கேற்கும்படி, 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும், இண்டி கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதை ஏற்று, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில், பாட்னா புறப்பட்டு சென்றார். பீஹாரில் ராகுல் மேற்கொள்ளும் இன்றைய நடைபயணத்தில் பங்கேறார். நடைபயணத்தில் பங்கேற்ற பின், மாலை சென்னை திரும்ப திட்டமிட்டு உள்ளார். கடந்த, 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, கன்னியாகுமரியில் ராகுல் துவங்கிய, 'பாரத் ஜோடோ' யாத்திரையை, முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Minimole P C
ஆக 28, 2025 08:08

For Ragul and Stalin peoples innocence is the only hope. They make so much noice is every issue particularly in Voters list, but they never approach court. When ED comes Stalin sends a big team of high paid lawyers to SC to get stay and at the same time tells outside that central Govt. misuses ED. If he is honest he can prove it at court but he approaches court maximum to get stay against the any proceedings of ED, IT and CBI etc. Stalin never conducts any case either at HC or SC to prove his honesty. Always get stay wait until to get appropriate time to close the case.A third rated CM and similar opposition leader at parliament join hands again just to cheat and loot.


ஆரூர் ரங்
ஆக 27, 2025 19:03

ஜப்பான் துணை முதல்வர் விஜயம்ன்னு விளம்பரம் போட்டிருப்பாங்க.


எஸ் எஸ்
ஆக 27, 2025 16:33

பிஜேபி கூட்டணிக்கு இப்போது ஒரு நல்ல வாய்ப்பு. ஹிந்து மத விரோதி ஸ்டாலினுடன் தேஜஸ்வி, ராகுல் கூட்டு. இவர்களுக்கா உங்கள் ஓட்டு என்று இம்மூவரும் சேர்ந்து இருக்கும் இன்றைய போட்டோவை போஸ்டராக ஒட்டி பிரச்சாரம் செய்வார்கள்! ஸ்டாலினை ஏண்டா அழைத்தோம் என்று நொந்து கொள்ளும் நிலை வரும்!


Indhuindian
ஆக 27, 2025 16:28

மறக்காம ஓரிஜினல் பாணி பூரி சாப்பிடவும் பார்சல் செஞ்சு இங்கு இருக்கற மந்திரிகளுக்கு கொடுக்கவும்


Kanagaraj M
ஆக 27, 2025 16:09

திருடர்கள் இணைந்துவிட்டனர்.........


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 27, 2025 16:05

தமிழகத்தில் இருக்கும் வேங்கை வயல் விவகாரம், திருப்பவனம் காவலாளி அஜித்குமார் இறப்பு விவகாரம், கல்வராயன் மலை கள்ளச்சாராய இறப்பு விவகாரம் இவற்றிற்கெல்லாம் செல்லாத கால்கள் பீகாருக்கு செல்கிறதென்றால்.... இவர் தமிழகத்திற்கு முதல்வரா ??? அல்லது பிகாருக்கு முதல்வரா ???


R.MURALIKRISHNAN
ஆக 27, 2025 14:31

அரசு வேலையையே ஆசுபத்திரியில்தான் பாக்க வேண்டியுள்ளது. முதல்வர் பிசியோ பிசி. தமிழ்நாட்டின் தலையெழுத்து. அடுத்த வருஷம் திமுக வேண்டாம் போப்பா. அங்க போய் சனாதானம் பத்தி பேச வேண்டியதுதானே. நல்ல மரியாதை கிடைக்குலே.


தனவேல்
ஆக 27, 2025 13:55

வருங்கால பிரதமருடன், தளபதி ஸ்டாலின்... சூப்பர்....வாழ்க ஜனநாயகம் ..... வாக்கு திருட்டு மோசடி அம்பலமாகட்டும்


vivek
ஆக 27, 2025 17:45

இப்படிக்கு ஓசி கேட்டார் கொத்தடிமை தண்டனக வேல்


GMM
ஆக 27, 2025 13:37

தேர்தல் ஆணைய பீகார் வாக்குரிமை தணிக்கை வெளிப்படை தன்மை கொண்டது. தொகுதி முகவரிக்கு கேஸ் இணைப்பு, வங்கி, ஆதார்.... அல்லது நிரூபிக்க தன்னிடம் இருக்கும் சான்றை இணைக்க வேண்டும். ராகுல் காந்தி என்று பெயர், பிறந்த தேதி நிரூபிக்க மூல சான்று தேவை. மேலும் தனது மொபைல் எண் அல்லது பெற்றோர், உறவினர். இங்கு தான் காங்கிரஸ், திமுக போலி வாக்காளர்கள் இணைக்க முடியவில்லை. ஆணையம் மின் ஓட்டு பதிவு மற்றும் உண்மையான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மிகுந்த வெளிப்படை தன்மைக்கு வந்து விட்டது. புதிய வாக்காளர் உணர்வு கணிக்க முடியாது. இதில் பிஜேபி கூட்டணிக்கும் பாதிப்பு இருக்கும். ராகுல், ஸ்டாலின் நடை பயணம் தேவையில்லை. பிஜேபி வென்றால் வழக்கு. காங்கிரஸ் வென்றால் நீதி நிலை பெற்றது. நீதிமன்றம் வெளிப்படை தன்மைக்கு வர எவ்வளவு காலம் ஆகும் என்று தெரியவில்லை. சட்ட விதிகள் படி இயங்கும் அரசு துறைகளை தான் அனைத்து நீதிமன்றமும் ஆர்வமுடன் விசாரித்து வருகின்றன.


Anand
ஆக 27, 2025 12:45

இவருக்கு ஊமை பாஷை நல்லா தெரியும் விளாசி விடுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை