உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  நீதிபதிக்காக ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய கோர்ட் குமாஸ்தா கைது

 நீதிபதிக்காக ரூ.15 லட்சம் லஞ்சம் வாங்கிய கோர்ட் குமாஸ்தா கைது

மும்பை: மும்பை செஷன்ஸ் கோர்ட் நீதிபதிக்காக, 15 லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்ற கோர்ட் குமாஸ்தாவை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மஹாராஷ்டிராவின் மும்பையை சேர்ந்த தொழிலதிபரின் மனைவிக்கு சொந்தமான நிலம் பாந்த்ரா பகுதியில் உள்ளது. இதை மற்றொரு நபர் ஆக்கிரமித்துள்ளதால் அதை மீட்டுத்தரக்கோரி தொழிலதிபரின் மனைவி மும்பை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர் நீதிமன்றம், 10 கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய நிலம் தொடர்பான வழக்கை மும்பை கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்நிலையில், தொழிலபதிபர் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க வேண்டுமெனில், 25 லட்சம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என, மும்பை கூடுதல் செஷன்ஸ் கோர்ட் நீதிபதி சலாலுதின் காஜி சார்பில் கோர்ட் குமாஸ்தா சந்திரகாந்த் வாசுதியோ, தொழிலதிபரை கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பேரம் பேசி, 15 லட்சம் ரூபாயாக இந்த தொகை குறைக்கப்பட்டது. லஞ்சம் தர விரும்பாத தொழிலதிபர் இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் தந்த ஆலோசனையின் படி ரசாயனம் தடவிய, 15 லட்சம் ரூபாயை குமாஸ்தா வாசுதியோவிடம் தொழிலபதிபர் நேற்று தந்தார். லஞ்ச பணத்தை பெற்றுக் கொண்டதாக நீதிபதி சலாலுதின் காஜியிடம் குமாஸ்தா தெரிவித்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குமாஸ்தா வாசுதியோவை கைது செய்தனர். குமாஸ்தா வாசுதியோ மற்றும் நீதிபதி காஜி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிபதியை தேடப்படும் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Thomas Gnanathickam
நவ 19, 2025 21:14

தமிழில்தான் தாங்கள் செய்தி வெளியிட்டுள்ளீர்கள்


Thomas Gnanathickam
நவ 19, 2025 21:08

கருத்து விதிமுறை சரி. நீதிக்கு விதிமுறை?


Thomas Gnanathickam
நவ 19, 2025 21:06

காசு கொடுத்தால் சட்டம் என் பையில்.


Gajageswari
நவ 18, 2025 20:37

வாழ்க வளமுடன்.


duruvasar
நவ 14, 2025 12:02

இனிமேலாவது உச்ச நீதிமன்றம் அரசியல் பேச்சுக்களை குறைத்துக்கொள்ள வேண்டும் நேற்று போட தேய் கருத்துதான். முதலில் வேட்டை ஒட்டடை அடித்து பெருக்கி சுத்தமாக வைத்துக்கொள்ள பாருங்கள்.


Ramesh Sargam
நவ 14, 2025 09:52

வேலியே பயிரை மேயும் என்று கூறுவார்கள். அது இதுதான். நீதி வழங்கவேண்டிய நீதிபதியே லஞ்சம் வாங்குகிறார். இப்பொழுது அவரை தேடும் பணியில் காவலர்கள். நாடு எப்படி உருப்படும் நீதிபதிகளே இப்படி லஞ்சம் வாங்கி குற்றங்கள் செய்தால்? இவ்வளவு வருடங்களாக அந்த நீதிபதி தீர்ப்பு வழங்கிய வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படவேண்டும். சத்தியமாக அந்த தீர்ப்புக்கள் நேர்மையான தீர்ப்புக்கள் ஆக இருக்க வாய்ப்பில்லை.


Perumal Pillai
நவ 14, 2025 09:22

இவன் நீதியை கூறு போட்டு கூவி கூவி விற்பான். அவனது தீர்ப்பை விமசரித்தால் அது அவமதிப்பு ஆக ஆகிவிடும் .இவனுகளுக்கு காசு கொடுத்தால் அது கம்பெனியை கட்டுப்படுத்தாது என அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் .


VENKATASUBRAMANIAN
நவ 14, 2025 08:13

நாடு எவ்வளவு மோசமாக போய்விட்டது. நீதிபதியையே தேடும் நிலைமை.


Krishna
நவ 14, 2025 06:32

Encounter Both PowerMisusing Justice MegaLoot DreadedConspiring Criminals. Show No Mercy


R VENKATARAMANAN
நவ 14, 2025 06:12

இது ஒன்றும் புதியதோ அல்லது அதிர்ச்சியோ இல்லை. நீதிபதிகளும் மனிதர்களே அவர்களுக்கும் ஆசாபாசஙகளும் தேவைகளும் இருக்கும் . இதற்கு கோர்ட்டு குமாஸ்த்தார்கள் ஏஜென்ட் களாக மாறுகிறார்கள். நீதிபதி பெரும் தொகையில் நீதிபதி தனக்கு விசுவாசமாகவும் , வெளியில் சொல்லாமல் இருப்பதற்கும் குமாஸ்த்தவுக்கு கொஞ்சம் பகிர்ந்து நீதிபதி கொடுப்பார். இது உலகம் அறிந்த உண்மை. அதனால் பல வழக்குகளில் உண்மைக்கு மாறாக தீர்ப்புகள் வருகிறது. லஞ்சம் பெறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் துர் மரணமே அடையவேண்டும். இறக்கும் தருவாயில் தான் செய்த குற்றஆண்களை தன வாயாலையே சொல்லவேண்டும்.


chennai sivakumar
நவ 14, 2025 22:18

S. This is the technique. Even a honest guy would be bought.