உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு குறித்து விவாதம்: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம்

நீட் தேர்வு குறித்து விவாதம்: பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம்

புதுடில்லி: ‛‛ மாணவர்கள் நலன் கருதி நீட் தேர்வு குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் எனவும், அதனை நீங்கள் தலைமையேற்று நடத்த வேண்டும் '' என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளதாவது : நீட் தேர்வு குறித்து பாரலிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் எனக்கூறி இந்த கடிதத்தை எழுதுகிறேன். கடந்த 28 ம்தேதி எதிர்க்கட்சிகளின் இந்த கோரிக்கை பார்லிமென்டின் இரு அவைகளிலும் ஏற்கப்படவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். நேற்றும், நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இது குறித்து அரசுடன் விவாதிப்பதாக சபாநாயகர் உறுதி அளித்து உள்ளார். இந்தியா முழுவதும் நீட் தேர்வு எழுதும் 24 லட்சம் மாணவர்களின் நலன்களே எங்களது கவலையாக உள்ளது. தங்கள் குழந்தைகளுக்காக லட்சகணக்கான குடும்பங்கள் தியாகம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும் என, மக்களின் பிரதிநிதிகளாகிய எங்களிடம், அந்த மாணவர்கள் மற்றும் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.நீட் தேர்வு குறித்த விவகாரத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை கேள்வித்தாள் கசிந்துள்ளது. இதனால் 2 கோடி மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மத்திய தேர்வு அமைப்பின் தோல்வியை மூடி மறைக்கவே, தேர்வு ஒத்திவைப்பு மற்றும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் மாற்றம் போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபடுகிறது.நமது மாணவர்கள் பதிலை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு பார்லிமென்டில் விவாதம் நடத்துவது முதல் வழி. அவசரத்தை புரிந்து கொண்டு, நாளை, நீட் தேர்வு விவாதத்திற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களின் நலன் கருதி, இந்த விவாதத்தை நீங்கள் தலைமையேற்று நடத்தினால், அது பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராகுல் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

kulandai kannan
ஜூலை 03, 2024 08:37

NEET விரிவாக்கம் ராகுலுக்குத் தெரியுமா?


தாமரை மலர்கிறது
ஜூலை 02, 2024 20:47

நாட்டில் வேறொரு முக்கிய பிரச்சனை இல்லையென்பதால், ராகுல் நீட் பிரச்னையை பற்றி நீட்டி முழங்குகிறார். படித்தால் நீட் பாஸ் செய்யலாம். படிக்காவிடில் பாஸ் பண்ணமுடியாது. இதில் ஒன்றும் பெரிதாக பேசுவதற்கு ஏதுமில்லை. நீட் பாஸ் பண்ணமுடியாவிட்டால் என்ன? வாழ்க்கை முழுகிபோய்விடுமா? டாக்டர் வேலை மட்டும் தான் வேலையா? நூறு சதவீத மக்கள் டாக்டர் ஆகமுடியாது. கலெக்டர் ஆகவேண்டியது தானே. படித்தால் டாக்டர் வேலை. படிக்காவிடில் கம்பவுண்டர் வேலை. அவ்வளவு தான். அதனால் கடுகை கரப்பான் பூச்சியாக்கி, பின்னர் யானை, டைனோசர் போன்று பெரிதாக்க ராகுல் நினைக்கிறார். மக்களுக்கு அன்றாட வேலை, சாப்பாடு, உடை, வீடு இருக்கும்போது நீட் ஒரு பெரிய விஷயமே அல்ல.


Swaminathan L
ஜூலை 02, 2024 20:31

இவர் இப்படிப் போக இவர் கட்சி ஆளும் கர்நாடக மாநில அரசு என்ஆர்ஐ கோட்டா என்று 15% அதிகமான இருக்கைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கடிதம் எழுதுகிறது. அப்போது தானே, என்ஆர்ஐ கோட்டாவிற்கு தனி கட் ஆஃப் மார்க், மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்க்க கேட்கும் கட்டணம் பெறலாம்


N Sasikumar Yadhav
ஜூலை 02, 2024 19:26

விவாதமெல்லாம் வேண்டாம் உங்களுக்கு தெம்பு திராணி இருந்தால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடுங்கள் .


GMM
ஜூலை 02, 2024 19:24

நீட் தேர்வில் உள்ள குறைபாடுகள் என்ன? அதனை முறைப்படுத்த ராகுல் எழுத்து பூர்வ கருத்து என்ன? அரசு கட்டணம் என்பதால், நீட் தேர்வு நடத்த சொல்லி ஏராளமான மாணவர்கள் விரும்புகிறார்கள். முதல் கசிவில் மாற்று சொல்லவில்லை. 70 கசிவு வரை மாற்று கருத்து கூற முடியவில்லை. கேள்வி கசிவு உங்கள் வேலையாக கூட இருக்கலாம். விசாரணை அமைப்புகள், உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் நிலையில் பாராளுமன்றத்தில் விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? அரசியல் குழப்ப வேலையில் காங்கிரஸ் படு கில்லாடி. நீரெல்லாம் எதிர்கட்சி தலைவர். எங்கள் விதி?


Anand
ஜூலை 02, 2024 18:52

வடக்கு தெற்கு இரண்டு தத்திகளும் கடிதம் எழுத ஆரம்பித்து விட்டது, இவிங்க எழுதும் கடிதத்தை படித்தவர்கள் மூர்ச்சையாகி விழுவார்கள்.


Vathsan
ஜூலை 02, 2024 18:35

நீங்க அம்பானியா அடானியா ?? நீங்க சொல்லுவதை நான் கேட்க...


hari
ஜூலை 03, 2024 09:09

ஆமாம்


மேலும் செய்திகள்











புதிய வீடியோ