உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி உஷ்ஷ்ஷ்: நேரம் வர காத்திருக்கும் மோடி

டில்லி உஷ்ஷ்ஷ்: நேரம் வர காத்திருக்கும் மோடி

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாக்., பயங்கரவாதிகளின் தாக்குதல், நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 'பாகிஸ்தானுக்கு எதிராக மோடி ஏதாவது செய்ய வேண்டும்' என, மக்கள் விரும்புகின்றனர். இந்த தாக்குதல் நடந்தபோது, சவுதி அரேபிய பயணத்தில் இருந்த பிரதமர் மோடி, தன் பயணத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டு டில்லி திரும்பினார்.பிரதமர், விமான நிலையத்திலிருந்து லோக் கல்யாண் சாலையிலுள்ள தன் வீட்டிற்கு வந்ததுமே அதிகாரிகள் கூட்டம் இருக்கும் என்பதால், தாக்குதல் தொடர்பான விபரங்களை, அந்த கூட்டத்தில் பிரதமருக்கு தெரிவிக்க அதிகாரிகள் தயாராக காத்திருந்தனர். ஆனால், அவர்களுக்கு ஒரு உத்தரவு வந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g1xqum0i&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'காலை 6:00 மணிக்கு பாலம் விமானப்படை விமான நிலையத்திற்கு வரவும்; பிரதமர் மோடி, விமான நிலையத்திலேயே அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்துவார்' என, சொல்லப்பட்டதாம். டில்லியில் இறங்கியதும், விமான நிலையத்திலேயே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார் மோடி. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் உளவுத்துறை, 'ரா' அமைப்பின் அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.அதன்பின், அமைச்சரவைக் கூட்டம் என பல ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன. இதில், பாகிஸ்தானுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாம். இதற்கிடையே, பாகிஸ்தான் தன் படைகளை இந்திய எல்லை பகுதியில் குவித்து வருகிறது.'உடனடியாக எதையும் செய்ய மாட்டார் மோடி. தகுந்த நேரத்திற்காக காத்திருப்பார். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், இதன் பின்னால் இருந்தோர், அத்துடன் பாகிஸ்தானுக்கும் நிச்சயம் பெரிய அடி காத்திருக்கிறது' என்கின்றனர்.'கடந்த 2019ல் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவப் படையினர் கொல்லப்பட்டனர். அந்த ஆண்டு பிப்ரவரியில் லோக்சபா தேர்தல் நடக்க இருந்தது. எனவே, தாக்குதல் நடந்த 10 நாளில், இந்திய விமானங்கள், பாகிஸ்தானின், 'பாலகோட்' என்ற இடத்தில் இருந்த பயங்கரவாதிகளின் கூடாரத்தை அடித்து நொறுக்கியது. அதனால், விரைவில் ஏதாவது அதிரடியை நடத்துவார் மோடி' என, டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Palanisamy T
ஏப் 27, 2025 08:16

இந்திய நாடு இந்த பயங்கரவாதிகளுக்கு இனிமேல் கொடுக்கப் போகும் அடி பாகிஸ்தானுக்கு கொடுக்கப் ஆகும் மரண அடி எச்சரிக்கை மணியாக இருக்கவேண்டும். இன்று பாகிஸ்தான் அணுஆயுத நாடாக இருக்கின்றதென்றால் அன்று நெதர்லாந்து நாட்டில் அணுசக்தி துறையில் வேலை செய்த பாகிஸ்தான் நாட்டு விஞ்ஞானி அணு ரகசியங்களை திருடி பாகிஸ்தானுக்கு தப்பியோடிய செய்தியை நாளிதழில் படித்தேன். இவர்களிடம் நேர்மையோ நியாயமோ மனச் சாட்சியோ இல்லாதவர்கள். யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில் பயங்கரவாதியாக பின் லண்டனை தங்கள் நாட்டிற்குள்ளே பாதுகாப்பாக வைத்தவர்கள்தானே. இந்தியா இவர்களுக்கு என்றும் மறக்கமுடியாத மன்னிக்கமுடியாத தண்டனையை கொடுக்கவேண்டும். இந்திய நாட்டை சீண்டிவிட்டார்கள்.


Venkataraman Subramania
ஏப் 27, 2025 06:54

He is the Leader... He will win... we will win the War and there will not a country the name of Pakistan, that is for sure....I love my PM


Indian
ஏப் 27, 2025 15:27

மிகவும் சரி. பாகிஸ்தான் என்னும் புளுகிஸ்தானின் மந்திரி அவர்களிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகவும் அவை நம்மை நோக்கிக்குறி வைப்பதற்கே என்று உளறுகிறார். இவர்கள் அடிக்கும் வரை நம் இராணுவம் கைகட்டிக்கொண்டிருக்குமா? அவர்களுக்கு வெறி மட்டும்தான் உண்டே ஒழிய மண்டையில் ஒன்றும் கிடையாது. அந்தக்காலம் போல் அல்லாமல் இந்தியா பலவழிகளிலும் தனது இராணுவபலத்தை பெருக்கி இருக்கிறது. ஆளில்லா போர் விமானங்கள், ட்ரோன்கள், ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் முதலிய தொழில்நுட்பம் நிறைந்த வான்வழித் தாக்குதலில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருக்கிறது. புளுகிஸ்தான் மடையர்களுக்கு சீனா எவ்வளவுதான் ஆயுத உதவி செய்தாலும் அவற்றை உபயோகிக்கும் தேர்ச்சி இல்லை. அதுபோல மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கே உள்ளவர்களுக்கு உற்சாகம் இல்லை. குதிரையைப்பட்டினி போட்டு வேலை வாங்குவது போலத்தான். இந்தியா நினைத்தால், பாகிஸ்தான் சவக்கிடங்காகி விடும். ஜெய்ஹிந்த்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை