| ADDED : ஜன 06, 2024 06:53 AM
சித்ரதுர்கா: கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில், வாலிபர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள ஐந்து பேரை போலீசார் தேடுகின்றனர்.சித்ரதுர்கா ஒசதுர்கா நாகநாயக்கனஹட்டி கிராமத்தில் வசித்தவர் மனோஜ், 21. நேற்று முன்தினம் இரவு கிராமத்தில் உள்ள, அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவிற்கு ஹிரியூரின் சோமனஹள்ளி தாண்டாவைச் சேர்ந்த ரகு, 23, என்பவர் வந்திருந்தார். அம்மன் ஊர்வலம் சென்றபோது, நடனமாடுவது தொடர்பாக, மனோஜிக்கும், ரகுவிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ரகுவும், அவரது உறவினர்கள் நான்கு பேரும் சேர்ந்து, மனோஜை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய மனோஜை, கிராம மக்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலன் அளிக்காமல் மனோஜ் இறந்தார். ஸ்ரீராம்புரா போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மனோஜிக்கும், ரகுவுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும், இதனால் கொலை நடந்ததும் தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள ரகு உட்பட, ஐந்து பேரையும் போலீசார் தேடுகின்றனர்.