உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள்: போலீஸ் கமிஷனர் கோபம்

போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள்: போலீஸ் கமிஷனர் கோபம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹைதராபாத்: '' போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகளை போன்றவர்கள். அவர்களின் அலட்சியத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது,'' என ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் விஎஸ் சஜ்ஜானார் கூறியுள்ளார்.தெலுங்கானாவின் ஹைதராபாதில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு நோக்கி, நான்கு குழந்தைகள் உட்பட 44 பயணியருடன் கடந்த 23ம் தேதி இரவு ஆம்னி பஸ் புறப்பட்டது. இந்த பஸ், ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தின் சின்னதேகுரு பகுதிக்கு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை, 2:45 மணியளவில் சென்றபோது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிறிது துாரம் இழுத்துச் செல்லப்பட்ட பைக், பஸ்சின் அடியில் சென்று டீசல் டேங்கில் மோதியது. இதில், பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், பஸ்சில் இருந்த, 19 பயணியர் மற்றும் பைக் மோதி விபத்தை ஏற்படுத்திய நபர் என மொத்தம், 20 பேர் உயிரிழந்தனர்.https://www.youtube.com/embed/lwTkP8qybRkஆம்னி பஸ் மீது பைக் மோதி விபத்தை ஏற்படுத்திய சிவசங்கர், விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் தன் நண்பருடன் அங்குள்ள பெட்ரோல் பங்க்கிற்கு சென்றது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இந்த வீடியோ பதிவில், பெட்ரோல் பங்க்கில் யாரும் இல்லாததால், தன் பைக்கை தனியாக எடுத்துச் சென்றார். அப்போது, அவர் நிதானமற்ற சூழலில் பைக்கை ஓட்டிச்சென்றது தெரியவந்தது. இதனால், அவர் குடிபோதையில் இருந்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக சிவசங்கரின் நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜானார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பயங்கரவாதிகள். அவர்களின் செயல், சாலைகளில் பயங்கரவாத சம்பவத்துக்கு ஒப்பானது. 20 அப்பாவி மக்களின் உயிரைபறித்த கொடூரமான கர்னூல் பஸ்விபத்து ஒரு விபத்து கிடையாது. இது ஒரு படுகொலை. குடிபோதையில் வாகனம் ஓட்டியவரின் பொறுப்பற்ற நடத்தையால் ஏற்பட்டது. இது ஒரு சாலை விபத்து அல்ல. ஆனால், சில நொடிகளில் முழு குடும்பங்களையும் அழித்த ஒரு அலட்சியச் செயல். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Mani . V
அக் 27, 2025 03:45

ஆனால், அதை விற்பனை செய்பவர்கள் நாட்டுக்காக போராடிய தியாகிகள் அப்படித்தானே அப்ரண்டிஸ்களா ஸாரி ஆபீசர்களா?


Pandi Muni
அக் 26, 2025 23:21

மது மற்றும் போதை பொருட்களை விற்பவன் தீவிரவாதி.


Vasan
அக் 26, 2025 21:53

We need to deeply understand the implied meaning of statement given by Hyderabad police commissioner. I request the President of India to issue an order to transfer this Hyderabad police commissioner to Tamilnadu, and give him all the powers to close the TASMAC industry in Tamilnadu. If drunkard is a terrorist, those who produce, market and sell the product are also terrorists. I appreciate the boldness of the Hyderabad police commissioner.


V Venkatachalam, Chennai-87
அக் 26, 2025 21:17

ஐயா நீங்க எங்க திராவிட அரசை வந்து பாருங்க. நாங்க டிராஃபிக் அதிகமாக உள்ள இடங்களில் இத்தனை லட்சம் பேரு ஹெல்மெட் அணியாமல் இறந்து விட்டார்கள் ன்னு போஸ்டர் அடிச்சு ஒட்டியிருக்கோம். அதே சமயம் எங்களுக்கு வேண்டாத ஆளுங்களை ஒழித்து கட்ட இந்த மாதிரி ஒரு டீமையும் கை வசம் வச்சிருக்கோம். மோட்டார் சைக்கிளில் போறவுங்க ரொம்ப டஃப் குடுக்குறாங்க.


Theni Saaral
அக் 26, 2025 20:54

விக்கிறவுங்க புண்ணியவாங்களா ஐயா ?


Anantharaman Srinivasan
அக் 26, 2025 20:47

உண்மை. ஒருவனின் குடிபோதையால் 19 உயிர்கள் அநியாயமாக போச்சு ..


சசிக்குமார் திருப்பூர்
அக் 26, 2025 20:47

நான் கூட பயங்கரமாக ஷாக் ஆகி விட்டேன். அரசின் கொள்கைக்கு எதிராக பேச எப்படி ஒரு ஏவல்துறைக்கு தைரியம் வந்தது என்று. பிறகு தான் தெரிந்தது அவர் தெலுங்கானா


Ram pollachi
அக் 26, 2025 20:28

ஐயா நீங்கள் குற்றவாளிகளுக்கு சிறிதும் கருணை காட்டாத அதிகாரி என்பது அனைவருக்கும் தெரியும்... குடிக்காத வர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு கூலி தொழிலாளி முதல் அலுவல் வேலை செய்பவர்கள் வரை முழு அரை போதையுடன் தான் பணி செய்கிறார்கள்.... மக்களிடம் வரியை வசூலித்து ஆட்சி செய்ய வேண்டிய அரசாங்கம் மதுவை விற்று கஜானாவை நிரப்பினால் இது தான் கதி....


Nagamani Nagarajan
அக் 26, 2025 20:24

டாஸ்மாக் கடையிலிருந்து வெளிவரும் அனைவரும் பயங்கரவாதிகள்தான் . தமிழ் நாட்டில் ஒரு நாளைக்கு எத்தனை ஆயிரம் பயங்கரவாதிகள். கமிஷனர் பதில் என்ன ? மக்களை காப்பாற்ற என்ன நடவடிக்கை ?


Vasan
அக் 26, 2025 20:21

குடி போதையில் வாகனம் ஓட்டியது CCTV யில் தெரிந்ததென்றால், போலீஸ் ஏன் அவரை தடுக்கவில்லை? கண்காணிப்பு போதவில்லை என்று தான் தோன்றுகிறது.


V Venkatachalam, Chennai-87
அக் 26, 2025 21:42

பெட்ரோல் பங்கில் உள்ள சிசிடிவி யில் பார்த்து சொல்லப்பட்ட தகவல். ஆன்லைனில் பார்த்த தகவல் இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை