உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அனில் அம்பானி மீதான பண மோசடி வழக்கு 35க்கும் மேற்பட்ட இடங்களில் ஈ.டி., சோதனை

அனில் அம்பானி மீதான பண மோசடி வழக்கு 35க்கும் மேற்பட்ட இடங்களில் ஈ.டி., சோதனை

புதுடில்லி: தொழிலதிபர் அனில் அம்பானியை மோசடியாளர் என எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்த நிலையில், 'எஸ் வங்கி' தொடர்பான பண மோசடி வழக்கில், அவருக்கு சொந்தமான 35க்கும் மேற்பட்ட இடங்களில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். நம் நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி. இவரது சகோதரர் அனில் அம்பானி, 66. இவர், 'ராகாஸ்' எனப்படும் ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்தின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் உட்பட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார் . கடந்த 2017 - 19 வரையிலான காலக்கட்டத்தில், அனில் அம்பானிக்கு சொந்தமான ராகாஸ் நிறுவனங்களுக்கு, எஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் வழங்கியது. ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன், சட்டவிரோதமாக பிற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அனில் அம்பானி மீது குற்றச்சாட்டு எழுந்தது. பெரிய அளவிலான, எவ்வித பாதுகாப்பற்ற கடன்களை எளிதாக்குவதற்காக, எஸ் வங்கியின் அதிகாரிகள், இயக்குநர்கள் என பல்வேறு தரப்பினருக்கு அனில் அம்பானி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், பெரிய அளவிலான முறைகேடு தொடர்ச்சி 7ம் பக்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rathna
ஜூலை 25, 2025 12:19

நாட்டின் தலைமை அம்பானியை ஆதரிக்கிறது என்று ஒருத்தர் சொன்னாரே. அதெல்லாம் பொய்யா?? இப்படி ED யா அவித்து விட்டுருக்காங்க??


shyamnats
ஜூலை 25, 2025 07:36

தமிழ் நாட்டில் அரசியல் வாதிகள் மீதான அமலாக்க துறை சோதனைகளை ஒன்றொண்டாக நீதிமன்றம் தடை செய்வது போல இவர் மீதான சோதனைகளையும் தடை செய்ய வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை