உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து; தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் 42 அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து; தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி; தேர்தலில் போட்டியிடாத, தேர்தல் கணக்கை தாக்கல் செய்யாத 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 42 அரசியல் கட்சிகளும் அடங்கும்.இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது; 1.நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்(RUPP) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29A இன் விதிகளின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) பதிவு செய்யப்பட்டுள்ளன.2.சட்ட விதிகளின் கீழ்,அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு சங்கமும், சின்னம், வரி விலக்குகள் உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் சலுகைகளைப் பெறுகிறது.3. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். 4. 2019ம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறிய பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்கும் நாடு தழுவிய நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.5. இந்நடவடிக்கையின் முதல் கட்டத்தில், ஆகஸ்ட் 9, 2025 அன்று 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது6. தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத்தில், 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய தேர்தல்களில் போட்டியிடாததன் அடிப்படையில், செப்டம்பர் 18, 2025ல் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இவ்வாறு, கடந்த 2 மாதங்களில் 808 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. 7. இந்த நடவடிக்கைகைய மேலும் முன்னெடுக்க, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் (அதாவது 2021/-22, 2022/-23, 2023/-24) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தங்கள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்காததற்காகவும், தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாததற்காகவும் 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளிள் (RUPP) அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் உள்ள 23 வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை. 8. எந்தவொரு கட்சியும் தேவையற்ற முறையில் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் இந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு (RUPP) நோட்டீஸ் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முதன்மை செயல் அதிகாரிகளால் விசாரணை மூலம் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.9. முதன்மை செயல் அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் (RUPP) பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கிறது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், தேர்தல் ஆணையம் தமது அறிவிப்பில் எந்தெந்த மாநிலங்களின் எத்தனை கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கைகையும் வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 121 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து 2ம் இடத்தில் மஹாராஷ்டிரா(44 கட்சிகள்), 3ம் இடத்தில் தமிழகம் 42 கட்சிகள்) உள்ளன. 4ம் இடத்தில் புதுடில்லி உள்ளது. இங்கு 40 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது.359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP)அடையாளம் காட்டியுள்ள தேர்தல் ஆணையம், எந்த மாநிலத்தில் எத்தனை கட்சிகள் இவ்வாறு உள்ளன என்பதையும் பட்டியலுடன் தேர்தல் ஆணைய இணையதளத்தில் விரிவாக வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

theruvasagan
செப் 19, 2025 22:06

பதிவு செய்யப்பட்ட கட்சியை நடத்திக் கொண்டே பெரிய கட்சியிடம் காசு வாங்கிக் கொண்டு அவர்கள் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடும் மோசடியை செய்யும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.


V Venkatachalam
செப் 19, 2025 20:22

ஜாதி பேரை கட்சிக்கு வைத்துக்கொண்டு ஜாதியை ஒழிக்கிறேன் பேர்வழி ன்னு அடாவடி பண்றவனுங்க மத மாற்றத்துக்குன்னே கட்சியை உருவாக்கி அதுக்குள்ள யாருக்கும் தெரியாமல் மதமாற்றம் செய்யுற கட்சி பணம் வசூல் பண்றதுக்கு ன்னே கட்சி கட்ட பஞ்சாயத்து பண்றதுக்குன்னே கட்சி தலித் பேரில் கட்சி இவனுங்களை ஒழித்து கட்டினால் மட்டுமே நாடு நலம் பெறும். சுடாலின் தோளில் உட்கார்ந்து கொண்டு சுடாலினையே மிரட்டும் கட்சியில் இப்போ எத்தனை போச்சுன்னு தெரியலை. கட்சி அங்கீகாரம் நீக்கியாச்சுன்னா ஒண்ணும் நஷ்டமில்லே. அதே ஆளு அதே அடிமைகளை வைத்துக்கொண்டு புதுப்பேரு வச்சி இன்னொரு கட்சி ரெடி பண்ணிட்டா போதும். மத்தபடி எல்லாமே ஆஸ் யூசுவல்.மறுபடி ஆறு வருஷம் ஓட்டலாம்..


Palanisamy Sekar
செப் 19, 2025 19:59

இதோ அந்த கட்சிகளின் பெயர்களில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளேன். All India Athithanar Makkal Katchi Restored All India Women Democratic Freedom Party Ambedkar People’s Movement Anaithindiya Samuthaya Makkal Katchi Anna MGR Jayalalithaa Dravida Munnetra Kazhagam Appamma Makkal Kazhagam India Makkal Munnetra Katchi Indian Victory Party Kamarajar Makkal Katchi Mahabharath Mahajan Sabha Makkal Neethi Katchi Meenavar Makkal Munnani Nalvazhikkagam Nationalist Charity Congress New Life People’s Party Pasumpon Makkal Kazhagam Samuga Makkal Katchi Tamil Maanila Katchi Tamil Nadu Peasants and Workers Party Tamilaga Sthabana Congress Youth and Students பார்ட்டி இந்த கட்சிகள் அவ்வப்போது அறிவாலயம் சென்று தேர்தல் பீஸ் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு ஆதரவு நிலைப்பாடு என்று அவர்கள் தொலைக்காட்சியில் பேட்டியும் கொடுப்பார்கள்.


VSMani
செப் 19, 2025 19:30

தமிழகத்தைச் சேர்ந்த 42 அரசியல் கட்சிகளின் பெயரென்ன?


Sundar R
செப் 19, 2025 18:27

அசகாய ஊழல்கள் செய்யும் கட்சிகள், தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோத அரசியல் கட்சிகளையும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி சிறப்பு அதிகாரங்கள் பெற்ற ஜனாதிபதி, கவர்னர், தேர்தல் ஆணையம், ஈடி, சிபிஐ, வருமான வரி அதிகாரி ஆகியோரை பணி செய்ய விடாமல் தடுக்கும் அரசியல் கட்சிகளையும், பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் நாட்டு நலன் சார்ந்த, ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறுவதை சீர்குலைக்கும் அரசியல் கட்சிகளையும்,அரசியல்வாதிகளும் இனி முதல் எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாதவாறு நிரந்தரமாக தடைசெய்ய வேண்டும் .


Vasan
செப் 19, 2025 18:22

அந்த 42 தமிழக காட்சிகள் எவையென்று இங்கே போட்டால் தான் என்னவாம்?


GMM
செப் 19, 2025 18:21

தேர்தல் ஆணையம் சட்ட விதிகளின் கீழ், பதிவான அரசியல் கட்சி, சங்கம் போன்றவை வரி விலக்கு பெறும். போட்டி போடாமல் வரி விலக்கு சட்ட விரோதம். கட்சி அங்கீகார ரத்து சரியான முடிவு. இதில் வசூல் ராஜா வக்கீல் மூலம் நீதிமன்றம் குறுக்கிடாமல் தேர்தல் ஆணையம், மத்திய அரசு தடுக்க வேண்டும். வழக்காடும் கட்சிகள் பண இருப்பை மத்திய அரசு வழக்கிற்கு முன் பறிமுதல் செய்ய வேண்டும். நிர்வாக பணியை நீதிமன்றம் கைபற்றி விடுவர். நீண்டகால நீதி விசாரணை மூலம் பெருமளவு பணம் விரயமாகி வருகிறது. முடியவில்லை என்றால், தனி நபர் வருமான வரி விருப்பம் அடிப்படையில் இருக்க வேண்டும்.


spr
செப் 19, 2025 18:19

இந்தியாவில் ஏறக்குறைய 2000த்திற்கும் மேல் கட்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு 22 கட்சிகள்தான் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதுவும் ஒன்றிணைந்து இரண்டு பிரிவுகளாகவே போட்டியிடுகின்றன. பின் எதற்கு இத்தனை கட்சிகள்? இத்தனை கட்சிகள் உருவாவதற்கு காரணமே நேருதான் காங்கிரசுக்கு எதிரே ஒரு வலுவான எதிர்க்க கட்சி உருவாகக் கூடாதென்று கருத்துரிமை சுதந்திரம் என்ற போர்வையில் கட்சிகள் தொடங்க அனுமதித்ததால்தான் இத்தனை கட்சிகள். அவர்களுக்கென்று சில சலுகைகளும் தரப்பட்டன தேர்தலில் வெல்ல அறவே வாய்ப்பில்லாத அந்தக் கட்சிகள் நிறைவேற்ற முடியாத பல கோரிக்கைகளை முன் வைப்பதுவும், மக்களை ஜாதி மதம் இனம் மொழியென்றெல்லாம் பிரிப்பதுவும் அதன் உண்மை அறியாத மக்கள் அக்கட்சிகளுக்கு வாக்களிப்பதனால் வாக்கு வங்கியைப் பிரித்து பெரிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பைக் குறைக்கவே உதவுகிறார்கள் அதனால் ஆதாயம் பெறுவது அந்த உதவாக்கரை கட்சிகளே. மோடியை எப்படியும் எதிரிக் கட்சிகள் குறை சொல்லத்தான் போகிறார்கள் எனவே இந்த ஆட்சி காலத்திலேயே பத்தோடு பதினொன்றாக இரண்டு அல்லது மூன்று கட்சிகளே என்ற நிலையை சட்ட வடிவாக உருவாக்குவதே நாட்டுக்கு நல்லது நீதிமன்றம் உதவினாலும் கட்சிகள் குறைய வாய்ப்புள்ளது.


ஜெகதீசன்
செப் 19, 2025 17:39

தமிழகத்துல பெரிய கட்சிகளை அண்டி பிழைக்கும் ஜாதி, இன, குடும்ப ரீதியான கொசுறு கட்சிகளையும் நீக்கி இருக்கலாம்.


திகழ்ஓவியன்
செப் 19, 2025 19:03

அப்போ நோட்டா வுடன் போட்டி போடும் கட்சியை தமிழகத்தில் நீக்கி வைக்கலாமே


Sundaran
செப் 19, 2025 17:06

உடனே லெட்டர் பட கட்சிகள் உச்ச நீதிமன்றத்துக்கு போவார்கள். அது உங்கள் ஆணையை ரத்து செய்துவிடும் .மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தை விட உச்ச நீதிமன்றம் தான் அதிக அதிகாரம் மிக்கது என்கிறார்கள். அனைத்தையும் நீதிமன்றம் தான் தீர்மானிக்கும் என்றால் பின்னர் நாடாளுமன்றம் எதற்கு என்பது சாமானியனுக்கு புரியவில்லை


சமீபத்திய செய்தி