உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட்டது இந்திய தேர்தல் கமிஷன்

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை வெளியிட்டது இந்திய தேர்தல் கமிஷன்

புதுடில்லி: தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., ரூ.6,986.5 கோடியும், பாரத் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி ரூ.1,322 கோடி, சமாஜ்வாதி கட்சி ரூ.14.05 கோடியும், அகாலிதளம் ரூ.7.26 கோடியும், தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சமும் பணம் பெற்றுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்தது. இதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டு ரகசியம் காக்கப்பட்டன.இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது' என தீர்ப்பளித்தது. அது தொடர்பான தகவல்களை தேர்தல் கமிஷனுக்கு அளிக்க வேண்டும். அந்த விபரங்களை தன் இணையதளத்தில் தேர்தல் கமிஷன் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. முதல் பகுதி (பர்ஸ்ட் பார்ட்) 327 பக்கம் ஆகவும், 2வது பார்ட் 426 பக்கங்களை கொண்டதாகவும் உள்ளன.கடந்த இரு தினங்களுக்கு முன்பு, பர்ஸ்ட் பார்ட்டில் தேதி மற்றும் மாதம், ஆண்டு வாரியாக நன்கொடை தந்த நிறுவனங்கள் விவரங்களும், 2வது பார்ட்டில் தேதி, மாதம் ஆண்டு வாரியாக கட்சிகள் பணம் பெற்ற விவரங்களை தேர்தல் கமிஷன் தனது இணையதளத்தில் பதிவேற்றியது.

புதிய தரவுகள் வெளியீடு

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் கமிஷன் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. 2018-19ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

தி.மு.க.,வுக்கு ரூ.509 கோடி அள்ளிக்கொடுத்த மார்ட்டின்

தேர்தல் கமிஷன் வெளியிட்டு தரவுகளின் படி, தி.மு.க., பெற்ற மொத்த தேர்தல் நிதி 650 கோடி ரூபாயில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனம் மட்டுமே 509 கோடி ரூபாய் கொடுத்துள்ளது. அ.தி.மு.க.,வுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் 4 கோடி ரூபாய் தேர்தல் நிதி அளித்துள்ள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., ரூ.6,986.5 கோடியும், பாரத் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி ரூ.1,322 கோடி, சமாஜ்வாதி கட்சி ரூ.14.05 கோடியும், அகாலிதளம் ரூ.7.26 கோடியும், தேசிய மாநாட்டு கட்சி ரூ.50 லட்சமும் பணம் பெற்றுள்ளன. திரிணமுல் காங்கிரஸ் கட்சி ரூ.1,397 கோடியும், பிஜூ ஜனதா தளம் ரூ.944.5 கோடியும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ரூ.442.8 கோடியும், காங்கிரஸ் ரூ.1,334.35 கோடியும் பணம் பெற்றுள்ளன. 2019-20ம் ஆண்டில் அதிகபட்சமாக பணம் பெற்றுள்ள கட்சிகள் பட்டியலில் பா.ஜ., முதல் இடத்தில் உள்ளது. 2ம் இடத்தில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஏற்கனவே, 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024ம் ஆண்டு பிப்,15ம் தேதி வரை பெற்ற தேர்தல் பத்திரங்கள் விவரங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

D.Ambujavalli
மார் 18, 2024 03:59

லாட்டரியால் சீரழிந்த குடும்பங்கள் , தற்கொலை செய்துகொண்டவர்களுக்காக ஒரு பக்கம் ஒப்பாரி, மறுபக்கம் லாட்டரி ‘அதிபரிடம்’ ‘நன்கொடை’ சபாஷ் திராவிட மாடல் இதில் ஒருவர் ‘விருப்பபட்டு ‘ பலனை எதிர்பார்க்காமல் கொடுத்தார்களாம் கோவில் உண்டியலில் பத்து ரூபாய் போடுவது போலவா கொடுக்கிறார்கள் இது ஒரு முதலீடு, கிடைக்கப்போகும் ஒப்பந்தம் முதலியவற்றுக்கு மறைமுக லஞ்சம்


M Ramachandran
மார் 18, 2024 00:27

தேர்தல் கமிஷன் வெளியிட்டு தரவுகளின் படி, தி.மு.க., பெற்ற மொத்த தேர்தல் நிதி 650 கோடி ரூபாயில், லாட்ட..ரூபாயில், லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனம் மட்டுமே 509 கோடி ரூபாய் கோடி ரூபாய் கொடுத்துள்ளது....ஒரு மணிலா கட்சிக்கு இவ்வளவு பணம்


Madhu
மார் 17, 2024 22:02

'ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' எனும் முதுமொழிக்கேற்ப தேர்தல் பத்திரங்களை கம்பெனிகளிடமிருந்தும்/கார்ப்பரேட்டுகளிடமிருந்தும்/தனிநபர்களிடமிருந்தும் கோடிக் கணக்கில் பெற்றுக் கொண்டு ரொக்கமாக்கிக் கொண்ட அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் சாடிக் கொள்வதும், இழிவாகப் பேசுவதையும் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. இந்தத் தேர்தல் பத்திரங்கள் நடைமுறை தொடர்பாகத் தாங்களாகவே அனைவரும் வலையில் வீழ்ந்துள்ளார்கள். உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சொல்வது சிந்திக்க வேண்டிய விஷயம். தேர்தல் பத்திரங்கள் வரும் முன்பாக என்ன நடைமுறை இருந்தது? அது இதைவிட வெளிப்படையாக இருந்த்தா என்பதைச் சொல்லாமல், அனைத்து எதிர்க்கட்சிகளும் பிஜேபி அதிக அளவில் பெற்றுள்ளது என்று முழக்கத்தை மட்டும் முன்னெடுத்து வைக்கின்றன. இது ஒரு அரசியல் குதிரைப் பந்தயம் எனில், ஜெயிக்கும் எனக் கருதிய குதிரையின் மேல் அதிகம் பணம் கட்டியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.


Velan Iyengaar
மார் 18, 2024 08:30

நீ தான் யோக்கியமானவனாச்சே நீ எதுவும் வாங்காம இருந்து இருக்கவேண்டியது தானே??


M Ramachandran
மார் 17, 2024 21:17

வாய்கிகழிய பேசும் ஊபீஸ்கள் கவனத்திற்கு. ஒரு மாநிலத்தில் அரசியல் செய்யும் கட்சிக்கு Rs. 509/- கோடி. இவ்வளவு நன்கொடை அதுவும் யாரிடமிருந்து? லாட்டரி மார்டீனிடமிருந்து


sundarsvpr
மார் 17, 2024 20:45

நன்கொடை என்பது விருப்பட்டு கொடுப்பது. நல்ல நோக்கத்திற்கு கொடுக்கப்படுவது. பலன் எதிர்பாராமல் கொடுப்பது.. நீதிமன்றம் இதில் ஏன் நிர்பந்தத்தை கொடுக்கிறது என்பதனை நீதிமன்றம் கூறவேண்டும். இல்லை என்றால் நீதிமன்றமும் அரசியல் செய்கிறதா என்று மக்கள் சந்தேகம் கொள்வர்.


SANKAR
மார் 17, 2024 21:03

megha engineering " viruppa pattu" koduththatha?!


SANKAR
மார் 17, 2024 21:05

" palan ethlrpaaraamal " koduththathaa megha engineering?!


jeyaprakash
மார் 17, 2024 21:27

அரசியல் காட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுபது நல்லதா? கெட்டதா? அது எந்த நோக்கத்தில் கொடுக்கபடுகிறது? அப்படி கொடுத்தால் தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கிறது? ஒரு கட்சி ஒரு கம்பெனியிடம் வாங்கும் பணம் அதன் தேர்தல் செலவுக்காக (கூட்டம் போட போன்ற இதர் செலவுக்காக) இருக்க வேண்டுமே தவிர மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் அளவுக்கு இருக்க கூடாது. 1000 வாங்கினால் அது நன்கொடை இலட்சம் கொடுப்பவன் அதற்க்கு பலன் எதிர்பார்பான்


SANKAR
மார் 17, 2024 22:17

megha engineering " viruppa pattu palan ethum ethirpaaraamal nalla nokkathukkaaha " koduththatha?!.I know this will not be published.


sridhar
மார் 17, 2024 19:52

கஞ்சா ஏற்றுமதி போன்றவன் , சாராயம் காச்சறவன், லாட்டரி டிக்கெட் விக்கறவன் எல்லாம் யாருக்கு பணம் தராங்க பாத்துக்குங்க.


venugopal s
மார் 17, 2024 19:41

தேர்தல் கமிஷன் ஒவ்வொரு கட்சியும் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு தொகை பெற்றனர் என்ற விபரங்களை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அதன் பிறகு தானே உண்மை நிலவரம் என்ன என்பது மக்களுக்கு தெரியும்.பாஜகவின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற பயமா?


ஆரூர் ரங்
மார் 17, 2024 18:39

ரம்மி ரவி என கிண்டல் செய்த திமுக பெரும்பாலும் லாட்டரி சூதாட்ட கம்பெனியிடமே நிதி பெற்றுள்ளது.???? முன்பே இதே நிறுவனம் கருணாநிதி கதை வசனத்தில் இரண்டு படங்களைத் தயாரித்து அவருக்கு பெரும் தொகை அளித்தது. ஆக கவர்னரை குறைகூற இவர்களுக்கு சற்றும் தகுதியில்லை.


Velan Iyengaar
மார் 18, 2024 09:25

மார்ட்டின் வாங்கிய மொத்த தேர்தல் பத்திரம் எவ்வளவு?? திமுக வுக்கு கொடுத்தது போக வேறு யாருக்கு கொடுத்தார்?? எப்போது கொடுத்தார்? லாட்டரி சூதாட்டமா??


PRAKASH.P
மார் 17, 2024 18:11

All parties are frauds


அருண் குமார்
மார் 17, 2024 17:33

2 ஆண்டுகளில்யே மாநில கட்சி 650 கோடி


Velan Iyengaar
மார் 18, 2024 09:29

திமுக வாங்கிய விவரத்த பகிரங்கமா தெரிவித்து விட்டது நீங்க தான் யோக்கிய சிகாமணிகள் ஆச்சே நீங்களும் பகிரங்கமா சொல்ல வேண்டியது தானே??


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை