உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமலாக்கத்துறை, சி.பி.ஐ., கேட்டால் ஆவணங்களை பகிர கூடாது: ஜார்க்கண்ட் அரசு புது உத்தரவு

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., கேட்டால் ஆவணங்களை பகிர கூடாது: ஜார்க்கண்ட் அரசு புது உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் ஆவணங்களை பகிர கூடாது என ஜார்கண்ட் மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டிய வழக்கில், மாநில முதல்வர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ., ஒருவரையும் அமலாக்கத்துறையினர் கைது செய்து உள்ளனர்.இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வருக்கு 7முறை அமலாக்க துறை சம்மன் அனுப்பி உள்ளது. இதுவரை ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. இந்நிலையில், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுடன் ஆவணங்களை பகிர கூடாது என ஜார்கண்ட் மாநில அரசின் அனைத்து துறைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை