உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்

அரசு பங்களாவை காலி செய்யாத முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கடிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதி பங்களாவில் இருந்து முன்னாள் நீதிபதி சந்திரசூட்டை காலி செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. முன்னாள் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சந்திரசூட். இவர், 2000ம் ஆண்டு மும்பை ஐகோர்ட்டின் நீதிபதியாக பணியாற்றினார். 2013ல் அலகாபாத் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆனார். 2016ம் ஆண்டு மே 13ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4zc3rlwk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=02022ல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். இவர் 2024ம் ஆண்டு நவ., மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அரசியல்சாசன அமர்வில் இடம்பெற்று இருந்த சந்திரசூட் அயோத்தி விவகாரம், தனியுரிமை, காஷ்மீர் சிறப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் ஆவார்.இந்நிலையில், சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதி பங்களாவில் இருந்து முன்னாள் நீதிபதி சந்திரசூட்டை காலி செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இவர் தலைமை நீதிபதியாக இருந்த போது வசிப்பதற்காக டில்லியில் 5, கிருஷ்ணா மேனன் மார்க்கில் உள்ள தலைமை நீதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம் அளிக்கப்பட்டு இருந்தது. நீதிபதிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி, ஓய்வு பெற்றவுடன் அடுத்த ஆறு மாதங்களில் தங்களின் அரசு இல்லத்தை காலி செய்து விட வேண்டும்.சந்திரசூட் தனது காலக்கெடுவை தாண்டி வசித்து வருகிறார். இதனால் அரசு பங்களாவை காலி செய்யுமாறு வலியுறுத்தப்பட்டு உள்ளது என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

GMM
ஜூலை 07, 2025 11:45

அரசு வாடகை வீட்டிற்கு நீதிபதிக்கு தனி வழிகாட்டு முறைகள் இருக்காது? ஓய்வு பெற்ற பிறகு காலி செய்ய வேண்டும். கல்வி, மருத்துவம் போன்ற காரணங்கள் அடிப்படையில் விண்ணப்பம் கொடுத்து மத்திய பொதுப்பணி அதிகாரியிடம் முன் அனுமதி பெற வேண்டும்?. பணியில் வாடகையாக HRA பிடிக்கப்பட்ட பின் ஓய்வில் இரு மடங்கு அல்லது சந்தை வாடகை அதிகாரியின் முடிவில் இருக்கும்? தற்போத நீதிபதி செயல் சட்ட விரோதம். சாதாரண ஊழியர்கள் என்றால் போலீஸ் உதவியுடன் வெளியேற்றி விடுவர். தலைமை நீதிபதி. இதில் உச்ச நீதிமன்றம் ஏன் கடிதம் எழுதுகிறது. வாடகை தாரர் நீதிபதி. உரிமையாளர் மத்திய பொது பணி துறை. பிறருக்கு இங்கு என்ன வேலை.?


Srinivasan Narayanasamy
ஜூலை 07, 2025 10:21

அந்த நீதிபதி காலிபண்ணிபோனால்தான் இப்போ உள்ள நீதிபதி அங்க போய் இருக்கமுடியும் .எல்லாம் பொறாமை தான் .


Nagarajan D
ஜூலை 06, 2025 21:52

ஊரார் காசிலேயே வாழ்ந்து பழக்கப்பட்ட ஒரு நீதி விற்பவர்


D Natarajan
ஜூலை 06, 2025 20:58

இவரெல்லாம் இந்தியாவின் தலைமை நீதிபதி. இவருக்கு என்று தனி சட்டம். உடனே வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டும்.


அப்பாவி
ஜூலை 06, 2025 20:46

ரிடையராகற முதல் நாள் வரைக்கும் நீதி, நேர்மைன்னு அடிச்சு உட்டாரு.


Kasimani Baskaran
ஜூலை 06, 2025 20:18

சம்பந்தம் இல்லாத நபர்கள் திராவிட மாடலில் அனுபவிக்கும் பொழுது - தலைமை நீதிபதியாக இருந்தவருக்கு அதிகமாகவே சலுகை கொடுக்கலாம்.


Anbuselvan
ஜூலை 06, 2025 19:00

இவர் மேல் தானாக முன் வந்து நீதிமன்றம் வழக்கு பதியுமா? மாட்டார்கள் நீதிபதிகளுக்கு வேறு எழுதப்பாடாத சட்டம் சாதாரண குடிமகனுக்கு எழுதப்பட்டிருக்கும் சட்டம். வாழ்க பாரதம்.


Srinivasan Krishnamoorthy
ஜூலை 06, 2025 17:55

has anyone studied background of this guy Chandrachud, how became supreme court judge etc. only wokes are allowed to become judges


Srinivasan Krishnamoorthy
ஜூலை 06, 2025 17:54

what can you expect from collegium judges who sell judgement for money, they protect corrupt and anti indian group. Only god to rescue india on dharmic path


Mani . V
ஜூலை 06, 2025 17:52

காவலரை Security வைத்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ள வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை