மேலும் செய்திகள்
தங்க அங்கி இன்று வருகை: நாளை மண்டல பூஜை
1 hour(s) ago
போலி திருமண மையம் நடத்தி ரூ.1.50 கோடி அபேஸ்
2 hour(s) ago
தேசிய எழுச்சி தலம்; உ.பி., லக்னோவில் திறப்பு
2 hour(s) ago
சென்னை: 'வந்தே பாரத்' உட்பட, அனைத்து விரைவு ரயில்களிலும், இன்று முதல் புதிய கட்டண உயர்வு அமலாகிறது. குறைந்தபட்சமாக, 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக, 45 ரூபாய் வரை உயரும்' என, ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வேயில் ஊழியர்களின் சம்பள உயர்வு, ஓய்வூதிய செலவு, முதலீட்டு செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால், வரும் 26ம் தேதி முதல், சிறிய அளவில் கட்டணம் உயர்த்தப்படும் என, கடந்த 21ம் தேதி ரயில்வே அறிவித்தது. அதன்படி, முதல் 215 கி.மீ.,துாரத்துக்கு மேல் செல்லும் ரயில்களுக்கு மட்டும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. புறநகர் மின்சார ரயில்களில், கட்டணம் உயர்வு இல்லை. மாதாந்திர சீசன் டிக்கெட்டிலும், கட்டணம் உயர்த்தப்படவில்லை. மெயில், விரைவு ரயில்கள், வந்தே பாரத், சதாப்தி, ராஜ்தானி, தேஜஸ் உட்பட அனைத்து விரைவு, அதிவிரைவு ரயில்களிலும், இன்று முதல் கட்டண உயர்வு அமலாகிறது. இவற்றில், 215 கி.மீ.,க்கு அதிகமான துாரம் செல்லும், அனைத்து வகையான ரயில்களிலும், முன்பதிவு இல்லாத பெட்டிகளில், ஒரு கி.மீ.க்கு ஒரு பைசா, ஸ்லீப்பர் மற்றும் 'ஏசி'க்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டண உயர்வால், ரயில்வேக்கு ஆண்டுக்கு, 600 கோடி ரூபாய் கிடைக்கும். ஏற்கனவே, முன்பதிவு செய்துள்ள பயணியருக்கு, புதிய கட்டண உயர்வு பொருத்தாது. இன்று முதல் டிக்கெட் முன்பதிவு செய்வோரிடம், புதிய கட்டணம் வசூலிக்கப்படும் என, ரயில்வே அறிவித்துள்ளது. தென்மாவட்ட ரயில்களில் உயர்வு எவ்வளவு? ரயில்வேயின் புதிய கட்டண உயர்வுபடி, சென்னையில் இருந்து, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, கோவை செல்லும் ரயில்களில், முன்பதிவு இல்லாத பெட்டிகளில், 5 ரூபாய்; ஸ்லீப்பர் மற்றும் 'ஏசி' பெட்டிகளில், 15 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, ஓய்வு பெற்ற ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் கட்டண உயர்வில், சாதாரண ரயில்களுக்கு 751 கி.மீ., துாரத்தில் இருந்து 1,250 கி.மீ. துாரம் வரை, கட்டணம் உயர்வு 10 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு, ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதுவே, 851 கி.மீ துாரம் பயணம் செய்தால், கூடுதல் கட்டணம் ஆறு ரூபாய் வசூலிக்காமல், 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். கட்டண நிர்ணயம் 5 ரூபாய், 10 ரூபாய், 15 ரூபாய் என 'ஸ்லாப்' முறையில் உயர்த்துவது, மறைமுக கட்டண உயர்வாக இருக்கும். அதுபோல், வந்தே பாரத் ரயில்களுக்கு, தனி கட்டண முறை இருந்தாலும், வழக்கமான கட்டண உயர்வுக்குள் கொண்டு வந்துள்ளதும், வருவாய் ஈட்டும் கணக்கில் தான். மேலும், 'ஏசி' கட்டணம் உயரும் போது, ஜி.எஸ்.டி., வரி வசூலிப்பதால், ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago