உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபத்தான உணவு பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; தர கட்டுப்பாடு, ஆண்டுதோறும் ஆய்வு கட்டாயம்

ஆபத்தான உணவு பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; தர கட்டுப்பாடு, ஆண்டுதோறும் ஆய்வு கட்டாயம்

புதுடில்லி: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மினரல் வாட்டரை அதிக ஆபத்துள்ள உணவு பிரிவில் வகைப்படுத்தி, கடுமையான பரிசோதனைகளை செய்ய இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது.இதுகுறித்து எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்திருப்பதாவது: சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், அதிக ஆபத்துள்ள உணவு பிரிவாக மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இதையடுத்து, கடுமையான ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் மற்றும் ஆண்டுதோறும் சுத்திகரிப்பு ஆலைகளில் ஆய்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆகவே, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர்கள், தங்கள் தயாரிப்பை கட்டாயம் உணவு பாதுகாப்பு தணிக்கைக்கு உட்படுத்திக் கொள்வதுடன், மேம்படுத்தப்பட்ட தர நிர்ணயங்களுக்கு இணக்கமாக செயல்பட வேண்டும். இதற்கான மத்தியஉரிமம் வைத்திருப்போர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியுடன் தொடர்புடைய சுகாதார அபாயங்களை குறைக்கும் நோக்குடன், ஆண்டு ஆய்வுகளை சமர்ப்பிக்கவேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளது.

நுகர்வோருக்கு என்ன பயன்?

பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்க உரிமம் பெறுவதற்கு முன், பதிவு செய்வதற்கு முன், ஆலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். அதிக ஆபத்து வகையில் ஒரு உணவுப்பொருள் சேர்க்கப்பட்டால் ஆய்வுகள் கடுமையாக நடைபெறும். இது நுகர்வோர் உடல் நலனை பாதுகாக்க உதவும். பாட்டில் குடிநீர் நிறுவனங்கள், பி.ஐ.எஸ்., மற்றும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., இரண்டில் இருந்தும் இரட்டைச் சான்றிதழ் பெற வேண்டும். இதை நீக்கக்கோரி நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. எனவே, பி.ஐ.எஸ்., சான்றிதழ் நீக்கப்பட்டு எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தனது கட்டுபாட்டை கடுமையாக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

shyamnats
டிச 07, 2024 10:32

இந்த தரக் கட்டுப்பாடுகள் பாட்டிலில் தரப்படும் தண்ணீருக்கு மட்டும்தானா, அல்லது கார்பொரேஷன்கள், மாநகராட்சிகள், முனிசிபாலிடிகள் பொது மக்களுக்கு வழங்கும் குடிநீருக்கும் விரிவாக்கம் செய்வார்களா? முழு வருடத்திற்கும் , தண்ணீருக்காக பணம் செலுத்துகிறோம். ஆனாலும் , பல ஊர்களிலும் மக்கள், தரமான தண்ணீர் வேண்டி போராட்டம் நடத்துவதை அறிவோம்.


Mummoorthy Ayyanasamy
டிச 06, 2024 10:30

தர கட்டுபாடு வரவேற்கதக்கது. நன்றி


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 13:40

வாட்டர் பியூரிஃபயர் அனைவருமே வைத்துக்கொள்வது நல்லது ....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 04, 2024 14:09

Because I once had observed that a male dog was urinating by lifting his back foot on plastic water container, meant for usage in homes and industries.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
டிச 04, 2024 10:23

எல்லாமே உத்தரவில்தான் இருக்கும் ஆனால், ஒன்றுமே செயல்படாது. நமது நாட்டில் சட்டங்களுக்கு பஞ்சமில்லை. செயல்படுத்துவதில்தான் பிரச்சனையே. ஒழுங்காக செயல்படுத்தியிருந்தால் இந்தியா எப்போதோ வல்லரசாகியிருக்கும்.


orange தமிழன்
டிச 04, 2024 10:05

இப்ப தான் இதையே சொல்கிறார்களா...... எல்லாம் நம் தலை எழுத்து.....


Bye Pass
டிச 04, 2024 08:54

பாட்டிலுக்கு ஐந்து ரூபா விலை அதிகரிக்கும்


அப்பாவி
டிச 04, 2024 08:24

எல்லோருக்கும் ஜல்ஜீவன் குடிநீர் கொடுங்கோ. ப்ளாஸ்டிக்கை ஒழிங்கோ.


Bye Pass
டிச 04, 2024 10:26

தொன்னையில் வாங்கி குடியுங்கள்


Muguntharajan
டிச 04, 2024 08:06

மினரல் வாட்டர் ஆபத்தான உணவு பொருள் என்பது சரிதான். ஆகவே இதை நம் நாட்டில் தடை செய்ய வேண்டும். தரக் கட்டுப்பாட்டு ஆய்வு எல்லாம் இங்கே வேஸ்ட். எல்லாம் ஏமாற்று வேலை. லஞ்சம் கொடுத்து சர்டிபிகேட் வாங்கி விடுவார்கள். உலகின் பல நாடுகளில் இதை தடை செய்துள்ளனர். இங்கும் இதற்கு தடை விதிப்பதே பயன் தரும்.


Ramesh
டிச 04, 2024 08:25

தரக் கட்டுப்பாடு கொண்டு வருவதற்கு காரணமே லஞ்சம் வாங்குவதற்கு தானே


R S BALA
டிச 04, 2024 08:02

இது இன்னும் நன்மையினை நோக்கி சென்றால் நல்லது அதுவன்றி வழக்கம்போல ஆய்வு அதிகாரிகளுக்கு அந்த விஷயத்திற்கு சாதகமாகிவிடக்கூடாது..


சமீபத்திய செய்தி