வாசகர்கள் கருத்துகள் ( 8 )
விரைவில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் கெட்டுவிடும் காரணம் மாசுகாசுகட்டுப்பாட்டு வாரியம்
நான் முதன் முதலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் கங்கையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நம் கூவம் ஆறு போல் இருந்தது.
44 மாவட்டங்கள் வேண்டுமானால் நன்றாயிருக்கும். அதுவும் மக்கள் அடர்த்தியற்ற மலை, லடாக் மற்றும் ராஜஸ்தான் பாலைவன மாவட்டங்கள். மற்ற மாவட்டங்கள் எல்லாம் முற்றிலும் மாசுபட்டிருக்கும்.
மத்திய அரசு வயல்களில் உரத்தை உபயோகிப்பது தடை செய்ய வேண்டும்.
அப்புறம் ஒவ்வொருவீட்டிற்கும் ஒரு கைப்பிடி உருண்டை சோறு மட்டுமே ரேஷன் கொடுக்க முடியும். பசுமை புரட்சி இல்லையென்றால் இங்க பில்லர் வைத்து நாக்கில் சொட்டு சொட்டாய் தான் பால் வைத்து கொள்ள முடியும். அவ்வளவு மக்கள் தொகை.
முதலில் இயற்கையை ஒட்டி வாழ பழகவேண்டும். வயிறார உண்ணுவதைவிட அளவோடு உண்ணுவது முக்கியம். அப்போதுதான் உணவுப்பொருள்கள் தேவை குறையும். இதனால் நிலத்திற்கு ஓய்வு கிடைக்கும் ரசாயன உரத்தின் தேவை குறையும். ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு வீட்டிலும் உர குழி இருக்கும் ஆடு மாடுகள் சாணங்கள் கிடைக்கும். நிலத்திற்கு உபயோகப்படும். நிலத்தில் கிடைக்கும் பயிர்கள் ருசியாய் சத்துள்ளதாய் இருக்கும். இப்போது ரசாயன உர விளைச்சல் சக்கையை தான் சாப்பிடுகிறோம் என்பதனை மறக்கக்கூடாது. சத்துள்ள உணவு பொருள்கள் அரைவயிற்றிக்கு சாப்பிட்டால் போதுமானது.
இதுல அதிர்ச்சியடைய என்ன இருக்கு? தொழிற்சாலை கழிவுகள், சாக்கடையெல்லாம் டைரக்டா ஆத்துல கலக்குது. நுரையா பொங்குது. மக்களின் சோப், ஷாம்பு, டிடர்ஜெண்ட் உபயோகம் அதிகமாயிடுச்சு. தொழிற்புரட்சி நடந்த நாம வல்லரசாயிட்டோம். எப்புடி சாவறோம்னு தெரியாமலேயே மர்மநோய் வந்து மக்கள் சாவுறாங்க.
தன் வினை தன்னைச் சுடுகிறது!!
மேலும் செய்திகள்
32 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!
31-Dec-2024