உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜார்க்கண்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு அனுமதி

ஜார்க்கண்டில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பங்கேற்க ஹேமந்த் சோரனுக்கு அனுமதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: ஜார்க்கண்ட் அரசு மீது நாளை மறுநாள்(பிப்.,05) நடக்கும் நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.நில மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கடந்த ஜன.,31(புதன்கிழமை) இரவு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.இதனைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகினார். புதிய முதல்வராக சம்பய் சோரன் பதவியேற்றார். அவர் நாளை மறுநாள், சட்டசபையில் அரசு மீதான பலத்தை நிரூபிக்க வேண்டும்.இந்நிலையில், சட்டசபையில் நடக்க உள்ள நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என ராஞ்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், நம்பிக்கை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ