மேலும் செய்திகள்
தொடர் மழையால் மஞ்சள் ஏலம் ரத்து
16-Oct-2024
1 பூசணிக்காய் அல்வா செய்யும்போது பூசணிக்காயை, பிரிஜ்ஜில் அரைமணி நேரம் மூடி வைத்து பிறகு எடுத்துத் துருவினால் ஒரே சீராக எளிதாக வரும்.2 கீரையை சமைக்கும்போது, மஞ்சள் கலந்த வெந்நீரில் நனைத்து எடுத்து விட்டு, சமைத்தால் நிறமும் மாறாது; ரசாயன தெளிப்பிலிருந்து பாதுகாப்பும் கிடைக்கும்.3 தேங்காயை இரண்டாக உடைப்பதற்கு முன், காஸ் அடுப்பில் லேசாக சூடு காண்பித்து விட்டு உடைத்தால், சரி பாதியாக உடையும்.4 எலுமிச்சை பழத்தின் மீது தேங்காய் எண்ணெயை தடவி வைத்தால், எலுமிச்சை பழம் நீண்ட நாட்கள் அழுகாமல் இருக்கும்.5 பேரீச்சம் பழக்கொட்டையை பதமாக வறுத்து பொடியாக்கினால், காபி துாளுக்கு பதிலாக அதையே பயன்படுத்தலாம்.6 கோதுமை மாவில் சிறிதளவு உப்பை கலந்து வைத்தால் எளிதில் வண்டு வராது.
16-Oct-2024