உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு நாடு ஒரு தேர்தல் அமல்படுத்தினால் எவ்வளவு செலவாகும் : தேர்தல் ஆணையம் மதிப்பீடு

ஒரு நாடு ஒரு தேர்தல் அமல்படுத்தினால் எவ்வளவு செலவாகும் : தேர்தல் ஆணையம் மதிப்பீடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ஒரு நாடு, ஒரு தேர்தல் அமல்படுத்தப்பட்டால் ஒவ்வொரு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரூ. 10 ஆயிரம் கோடி செலவாகும் என தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோக்சபா மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒன்றாக தேர்தலை நடத்தும், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15வது நிதி கமிஷனின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே ஆகியோரை கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது. இக்குழு பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பிலும் கருத்துக்களை கேட்டு வருகிறது.இந்நிலையில் தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒரு நாடு ஒரு தேர்தல் அமல்படுத்தப்பட்டால், 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சுழற்சி முறையில் புதுப்பிக்க ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவாகும் .மேலும் இந்தாண்டு நடக்க உள்ள பாராளுமன்ற லோக்சபா தேர்தலையொட்டி 11.8 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடத்துவற்கான மதிப்பீடும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

g.s,rajan
ஜன 21, 2024 19:20

வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் பிரிண்ட் அவுட் சீட்டை எடுத்துச் செல்லாமல் தடுக்க கண்காணிப்புக் கேமராவைப் பொருத்திக் கண்காணியுங்கள்.....


g.s,rajan
ஜன 21, 2024 18:53

தகவல் தொழில் நுட்பம் பெருமளவு வளர்ந்த நாடுகளில் கூட இன்னும் வாக்குச் சீட்டு முறையே நடைமுறையில் உள்ளது ....


g.s,rajan
ஜன 21, 2024 12:43

இந்தியாவில் ஒரே கட்சிதான் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது ,எதிர்க்கட்சிகளும் இருக்காது என்றால் எதற்கு பல ஆயிரம் கோடியில் வெட்டி தண்டச் செலவு ....


vijay
ஜன 21, 2024 11:54

//..வாக்கு சீட்டு முறை இன்னும் நம்பக தன்மையுள்ளது...// உலகமகா அறிவாளி நீர்தான்.


s.sivarajan
ஜன 21, 2024 09:58

தற்போதுள்ள தேர்தல் முறையே சிறந்த முறையாக உள்ளது. வாக்கு சீட்டு முறை இன்னும் நம்பக தன்மையுள்ளது. EVM முடிவுகள் பல மாநிலங்களில் கருத்துக்கணிப்புகளுடன் சிறிதும் ஓத்துபோகவில்லை.


Suppan
ஜன 21, 2024 14:54

கருத்துக் கணிப்பு மிகச்சிறிய எண்ணிக்கையில் உள்ள வாக்காளர்களின் கருத்தின் அடிப்படையில் அனுமானிக்கப்படுகின்றது. பல நேரங்களில் அது கருத்துத் திணிப்பாகத்தான் உள்ளது. வாக்குச்சீட்டு முறை இருந்தபொழுது பல வாக்குச்சாவடிகளில் ரவுடிகள் புகுந்து ஒட்டு மொத்தமாக "வாக்களித்ததை" மறந்துவிட்டீர்களா? வாக்கியந்திரத்தை அதிகாரி பூட்டிவிட்டால் ஒன்றும் செய்யமுடியாது. அதனால்தான் திருட்டுக் கட்சிகள் திரும்பவும் வாக்குச்சீட்டு முறை வேண்டும் என்கிறார்கள்.


Dharmavaan
ஜன 21, 2024 09:56

தேசவிரோத ஊழல் கட்சிகளுக்கு வசதிப்படாது இது


Priyan Vadanad
ஜன 21, 2024 01:48

அப்படின்னா பாஞ்சு வருஷம் பாஜக ஆட்சிதானா? பாஜககிட்ட ரொம்ப பணம் இருக்கு போல தெரியுது.


g.s,rajan
ஜன 21, 2024 01:10

இந்தியாவில் இனி வரப் போகின்ற லோக்சபா மற்றும் சட்ட மன்ற தேர்தல்களில் இருந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பிரிண்டரை இணைத்து பிரிண்ட் அவுட் வரும் படி நிச்சயம் மாறுதல்கள் கொண்டு வர வேண்டும் வாக்காளர்கள் மட்டும் அதனை ரகசியமாக வாக்களித்த வேட்பாளர் ,கட்சியை ,சின்னத்தை சரி பார்த்துவிட்டு அந்த பிரிண்ட் அவுட் சீட்டை அருகில் வாக்குப் பெட்டிகளை வைத்து அதில் போடுமாறு வலியுறுத்த வேண்டும்,மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எண்ணப்படும் எண்ணிக்கையும் ,பிரிண்ட் அவுட் வரும் சீட்டின் எண்ணிக்கையும் ஒரே மாதிரி இருக்க வேண்டும் ,தேர்தல் ஆணையம் மற்றும் நீதி மன்றங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகளில் நம்பகத் தன்மை குறித்து மக்களின் சந்தேகங்களை கட்டாயம் போக்க வேண்டும் .


Suppan
ஜன 21, 2024 15:01

ராசா "பிரிண்ட் அவுட்" வாக்காளர் பார்த்ததும் தானாகவே வாக்கியந்திரப்பெட்டிக்குள் சென்றுவிடுகிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?. வாக்காளர் கையில் அது அகப்பட்டால் அவர் பெட்டியில் போடாமல் அதை எடுத்துச்சென்றுவிட்டால் மேற்கொண்டு பிரச்சினைதான். தற்பொழுது ஐந்து சதவீத வாக்கு எந்திரங்களில் VPAT என்ற பிரிண்டர் இணைக்கப்படுகிறது. இந்த முறை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுவிட்டது.


g.s,rajan
ஜன 20, 2024 23:24

It is a Must that the Voters Should insist for Print Outs in the EVMs to cross check their ing of the Particular Party or the Candidate who are Contesting in the Elections.It is also important that the Secret should be maintained after ensuring the Print Out it Should Collected in the Ballot Boxes and it Should also be Counted and Must Tally Exactly with the Countings of the EVMs.Will the Election Commission try to do implement this Suggestion to Clarify the Fool Proof functioning of the EVMs???


Godyes
ஜன 20, 2024 21:24

வீட்டிலிருந்தபடியே ஆதார் எண் வழியில் வாக்களித்தால் செலவு மிச்சம்.அதை சாலை மேம்பாடு களுக்கு பயன் படுத்தலாம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை