உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  பொய் வித்தை வேண்டுமானால் தி.மு.க.,விடம் கேளுங்கள்: பா.ஜ.,

 பொய் வித்தை வேண்டுமானால் தி.மு.க.,விடம் கேளுங்கள்: பா.ஜ.,

சென்னை: 'பீஹார் தோல்விக்கு, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை கை காட்டலாம் என, யோசித்தால், அதை கைவிடவும். அம்மாநிலத்தில், சிறப்பு திருத்த பணியால், முதல் முறையாக, 71.60 சதவீத பெண் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர்' என, 'இண்டி' கூட்டணி கட்சிகளுக்கு, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது. தமிழக பா.ஜ., அறிக்கை: ஒவ்வொரு முறை தேர்தலில் தோற்கும் போதும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை போலியாக குறைகூறி வந்த 'இண்டி' கூட்டணியினர் பீஹார் தேர்தல் தோல்விக்குப் பின், புளித்து போன பொய்யை, இன்றைய ஏ.ஐ., காலத்திலும் கூற முன் வரக்கூடாது. ஒரு வேளை தேர்தல் கமிஷனின் வழக்கமான நடைமுறையான, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியை, தோல்விக்கு கை காட்டலாம் என யோசித்தால், அதை கைவிடுங்கள். ஏனெனில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியால், ஓட்டுகள் நீக்கப்பட்டுள்ளன எனும் இண்டி கூட்டணி பொய்யை தவிடுபொடியாக்கும் வகையில், பீஹாரில் 71.60 சதவீத பெண் வாக்காளர்கள் ஓட்டளித்துள்ளனர். இனியும் ஓட்டு திருட்டு என்னும் நமத்து போன உருட்டை 'இண்டி' கூட்டணியினர் கொண்டு வர வேண்டாம். இனியாவது, தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் இல்லை என்றால், திசை திருப்பும் பொய்யை கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க.,விடம் கேளுங்கள். பொய் வித்தையில், அவர்களை மிஞ்ச ஆளில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

முருகன்
நவ 15, 2025 19:33

பெண்களுக்கு கொடுத்த 10000 செய்த வேலை இது இதில் என்ன பெருமை வேண்டி உள்ளது


Balasubramanian
நவ 15, 2025 17:22

தேர்தல் மையில் வசிய மருந்து வைத்து வாக்காளர்களை ஏமாற்றி - ஓட்டு பெற்றனர் - என்று இனி பப்பு சொல்லலாம் - அதை பகுத்தறிவு திமுக - தங்கள் ஊடகங்களில் பகிரலாம்!


T.sthivinayagam
நவ 15, 2025 17:04

தமிழகத்தில் பாஜக வெற்றி பெற்றதே இல்லையே.


Thravisham
நவ 15, 2025 19:48

ஒரு ஊசிப்போன பிரியாணிக்கும் 200ரூவாவுக்கும் உங்களை கமல் போல் விற்காதீர். காலம் வெகு சீக்கிரமே மாறும் பாஜக கண்டிப்பாக அண்ணாமலை தலைமையில் ஆட்சியை அமைத்தே தீரும். திருட்டு த்ரவிஷன்கள் இல்லா தமிழகம் உருவாகும்


Sundar R
நவ 15, 2025 09:52

தமிழகம் வந்து பணிபுரியும் பிஹாரிகளால், நம் தமிழக பொருளாதாரம் உயர்கிறது. உள்ளூரிலேயே அறுபது, எழுபது வருடங்களுக்கு மேலாக குடியிருந்து கொண்டு, ஒரே குடும்பத்திற்கு நெற்றி வியர்வை சிந்தும்படி அசகாய வேலைகளைச் செய்யும் கொத்தடிமைகளால் நம் தமிழகத்திற்கும், நம் பாரத நாட்டிற்கும் எந்த பயனும் இல்லை. பொதுமக்கள் பணத்தைக் கொள்ளையடித்து வாழும் இந்த கொத்தடிமை அயோக்கியர்களிடம் தான் "இண்டி" கூட்டணி கட்சியினர் ஆலோசனைகளை கேட்க வேண்டும்.


Mennon Kasirajam
நவ 15, 2025 09:07

ஒரு ரூபாய்க்கு மூன்று படி அரிசி & அடைந்தால் தனித் தமிழ்நாடு இல்லை இன்று ஸ்டாலின் என தொடர் கதை. திருந்தாத ஜென்மங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை