உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி!

பீஹார் தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி!

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 243 தொகுதிகளில், 200க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி, பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, அசுர பலத்துடன் ஆட்சியை தக்க வைத்துள்ளது. தேர்தல் சமயத்தில் பீஹார் பக்கமே எட்டி பார்க்காமல், கடமைக்கென வந்து பிரசாரத்தில் ஈடுபட்ட காங்., - எம்.பி., ராகுலை நம்பிய ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி, மண்ணை கவ்வினார். 'தேர்தல் வியூக வகுப்பாளர்; பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தவன்' என, மார்தட்டிய பிரசாந்த் கிஷோரை, பீஹார் மக்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு அனுப்பினர். பீஹாரில் மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, கடந்த 6 மற்றும் 11ல் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. பல ஆண்டுகளுக்கு பின், அதிகபட்சமாக 67 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேலும், ஆண்களை விட பெண் வாக்காளர்கள் அதிகளவில் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கும், காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய, 'மஹாகட்பந்தன்' கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்ததால், பிரசாரம் அனல் பறந்தது.தே.ஜ., கூட்டணியின் கீழ், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வாகாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகியவை தேர்தலை சந்தித்தன. பா.ஜ., மற்றும் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், லோக் ஜனசக்தி, 29ல் களமிறங்கியது. மஹாகட்பந்தன் கூட்டணியில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் 143; காங்., 61 தொகுதிகளில் போட்டியிட்டன.இந்நிலையில், இரு கட்டங்களில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. தபால் ஓட்டுகள் எண்ணத் துவங்கியதில் இருந்தே தே.ஜ., கூட்டணி ஆதிக்கம் செலுத்தியது. தொடர்ந்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. அப்போதும் தே.ஜ., கூட்டணியே பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் வகித்தது. கடும் போட்டி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட மஹாகட்பந்தன் கூட்டணி, பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஜன் சுராஜ் கட்சியும் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி, 202ல் அபார வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., 89; ஐக்கிய ஜனதா தளம் 85 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன. 143 தொகுதிகளில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம், 25; 61ல் களமிறங்கிய காங்., 6 தொகுதிகளையும் வென்றுள்ளன. மூன்றில் ஒரு பங்கு தொகுதிகளை இந்த கூட்டணி கைப்பற்றவில்லை. இதனால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது. கடந்த, 2020 சட்டசபை தேர்தலில், 75 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவான ராஷ்ட்ரீய ஜனதா தளம், இந்த தேர்தலில் அவற்றில் பாதியை கூட வெல்லவில்லை.

தே.ஜ., கூட்டணியின் வெற்றிக்கு காரணம் என்ன?

* சட்டசபை தேர்தலுக்கு முன்பே, அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., சார்பில், ஜாதி மதிப்பீடு நடத்தப்பட்டது. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டாலும், தேர்வு செய்யப்படும் வேட்பாளர் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பதில் பா.ஜ., மிகுந்த கவனத்துடன் இருந்தது. இதன் அடிப்படையில் தான், வேட்பாளர் தேர்வும் இருந்தது.* கடந்த 2020 சட்டசபை தேர்தலில், சிராக் பஸ்வானால் ஐக்கிய ஜனதா தளத்துக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதை உணர்ந்த பா.ஜ., மேலிடம், சிராக்கின் அனைத்து கோரிக்கைகளுக்கும் சம்மதம் தெரிவித்தது.* அனைத்து தொகுதிகளிலும் கட்சி சார்பில் அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொண்டர்களிடையே மன உறுதியை பா.ஜ., ஏற்படுத்தியது.* மற்ற மாநிலங்களை போலவே, மோடி - நிதிஷ் குமார் ஆகியோரை முன்னிறுத்தியே தேர்தலை பா.ஜ., எதிர்கொண்டது.* கடந்த, 2020 தேர்தலில், மகத், ஷாபாத் பிராந்தியங்களில் ராஜ்புத், குஷ்வாகா சமூகங்களிடையே பிரிவினை ஏற்பட்டதால், அப்பிராந்தியத்தில் உள்ள, 24 தொகுதிகளில், 2ல் மட்டுமே தே.ஜ., கூட்டணி வென்றது. இந்த தேர்தலில், ராஜ்புத், குஷ்வாகா ஓட்டுகளை ஒருங்கிணைக்க பவன் சிங் மற்றும் உபேந்திர குஷ்வாகா போன்ற தலைவர்களை பா.ஜ., பயன்படுத்தியது* கிராமப்புறங்களில் மக்களுக்கு உடனடி தீர்வு தேவை என்பதை உணர்ந்த பா.ஜ., ரேஷன் பொருட்களை வழங்கியதோடு, கொஞ்சம் பணத்தையும் கொடுத்து அடிப்படை உதவிகளையும் செய்தது. ஆனால், இலவசம் என்ற வார்த்தையை பா.ஜ., பயன்படுத்தவே இல்லை 7 பிரசாந்த் கிஷோரை பா.ஜ., வேண்டுமென்றே கண்டுகொள்ளவில்லை. அவரை பற்றி பேசி வீண் விளம்பரம் கொடுக்க அக்கட்சி மேலிடம் விரும்பவில்லை

கை கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்

* பீஹாரில், சுய தொழில் துவங்க, பெண்களுக்கு தலா 10,000 ரூபாய் அளிக்கும் திட்டத்தை தே.ஜ., கூட்டணி அரசு தேர்தலுக்கு முன் அமல்படுத்தியது. இதன்படி, 1.3 கோடி பெண்களுக்கு தலா 10,000 ரூபாய் அளிக்கப்பட்டது. இது, பெண் வாக்காளர்களின் ஓட்டு சதவீதத்தை அதிகரித்தது; மேலும் நம்பிக்கையையும் விதைத்தது. * 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கியது, கிராமப்புறங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. * முதியோர் ஓய்வூதியம் 400- ரூபாயில் இருந்து 1,100 ஆக உயர்த்தப்பட்டது. * பீஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அனைத்து பொதுக்கூட்டங்களிலும், லாலு பிரசாத் யாதவின் ஆட்சியை காட்டாட்சி என குறிப்பிட்டார். * வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராகவே எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. ஆனால் அதிலுள்ள நன்மை பற்றி பா.ஜ., எடுத்துரைத்தது.Gallery

வென்ற வி.ஐ.பி...; உருண்ட தலைகள் வென்ற வி.ஐ.பி.,

* விஜய்குமார் சின்ஹா, பா.ஜ., - பீஹார் துணை முதல்வர். * சம்ரத் சவுத்ரி, பா.ஜ., - பீஹார் துணை முதல்வர்.* தேஜஸ்வி யாதவ், ரா.ஜ.த., , - முன்னாள் துணை முதல்வர். * மைதிலி தாக்கூர், பா.ஜ., - பாடகி. * விஜய்குமார் சவுத்ரி, ஐ.ஜ.த., - நீர்வளத்துறை அமைச்சர் உருண்ட தலைகள். * ஜகீல் அகமது கான் - காங்., தேசிய செயலர். * சத்ருகன் யாதவ், ரா.ஜ.த., - போஜ்புரி நடிகர். * அவாத் சவுத்ரி, ரா.ஜ.த., - முன்னாள் சபாநாயகர். * தேஜ் பிரதாப் யாதவ், ஜனசக்தி ஜனதா, - முன்னாள் முதல்வர் லாலுவின் மகன்

நீடிக்கும் நிதிஷ்குமார் ராஜ்யம்; 10வது முறையாக முதல்வராகிறார்

பீஹாரின் நீண்டகாலம் ( மொத்தம் 19 ஆண்டு, 84 நாட்கள்) முதல்வராக இருப்பவர் நிதிஷ்குமார். தற்போது 10வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். இவரது அரசியல் பயணம்; 1951 மார்ச் 1: பீஹாரின் நாளந்தா மாவட்டத்தில் பஹ்தியாபூரில் பிறந்தார். * 1972: பாட்னா என்.ஐ.டி.,யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்து மின்வாரியத்தில் பணியில் சேர்ந்தார். 1973ல் மஞ்சு குமாரி சின்ஹாவை திருமணம் செய்தார். * அரசு பணியில் விலகி, அரசியலில் நுழைந்தார். 1974 - 77: நெருக்கடியை நிலைக்கு எதிரான ஜெயப்பிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். * 1985 : பீஹார் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆனார். 1987ல் யுவ லோக் தளம் கட்சி தலைவரானார். * 1989: ஜனதா தளத்தில் சேர்ந்து அதன் பீஹார் பொதுச் செயலரானார். 1994ல் ஜார்ஜ் பெர்ணான்டஸ் உடன் இணைந்து சமதா கட்சியை துவக்கினார். 1996: பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இணைந்தார்.* 2000 மார்ச் 3 -10 : முதன்முறை பீஹார் முதல்வரானார். 7 நாளில் பதவி இழந்தார். * 2003: இவரது சமதா கட்சி, ஐ.ஜ.த., வுடன் இணைப்பு. 2005: தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர். * 2010 : தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர். 2013: பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, 17 ஆண்டுகால தே.ஜ., கூட்டணியை முறித்தார். 2014 மே 20: தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து விலகி, ஜிதன்ராம் மஞ்சியை முதல்வராக்கினார். * 2015 பிப்.,22: ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ரா.ஜ.த.,) கூட்டணி சார்பில் முதல்வர். 2015 நவ., 20: ரா.ஜ.த., ஆதரவுடன் முதல்வர். * 2017 ஜூலை 27: ரா.ஜ.த., கூட்டணியில் இருந்து விலகி, மீண்டும் தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர். * 2020 நவ., 16: தே.ஜ., கூட்டணி சார்பில் முதல்வர்.* 2022 ஆக. 9: தே.ஜ., கூட்டணியை முறித்து மீண்டும் ரா.ஜ.த., - காங்., கூட்டணி சார்பில் முதல்வர். * 2024 ஜன. 28: ரா.ஜ.த., - காங்., கூட்டணியில் இருந்து விலகல். மீண்டும் தே.ஜ., கூட்டணி(பா.ஜ.,) சார்பில் முதல்வர்.* 2025 நவ. 14: 2025 சட்டசபை தேர்தலில் ஐ.ஜ.த., - பா.ஜ., கூட்டணி வெற்றி. நிதிஷ் மீண்டும் முதல்வராகிறார்.

எடுபடாத 'வியூகம்'

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமுல் காங்கிரஸ், தமிழகத்தில் ஆளும் தி.மு.க., என பல்வேறு கட்சிகளுக்கு தேர்தலின் போது வியூகம் வகுத்து கொடுத்து வெற்றி பெறச் செய்தவர் பிரசாந்த் கிஷோர். பல கட்சிகளை வெற்றி பெறச் செய்தோம்; நாம் ஏன் கட்சி துவங்கி தேர்தலில் வென்று முதல்வர் ஆகக்கூடாது என, அவர் மனதில் தோன்றியதோ என்னவோ, சொந்த மாநிலமான பீஹாரில் ஜன் சுராஜ் கட்சியை துவங்கினார். பீஹார் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரம் செய்தார். 'ஹீரோ' ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரசாந்த் கிஷோர், கடைசியில், 'ஜீரோ' தான் ஆனார். 238 தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி ஓரிடத்தில் கூட தேறவில்லை. பல தொகுதிகளில் டிபாசிட் இழந்தது.

ராகுலால் மண்ணை கவ்விய தேஜஸ்வி?

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தேதியை, அக்., 6ல் தேர்தல் கமிஷன் அறிவித்தது. தேர்தல் கமிஷன் உதவியுடன் ஓட்டுகளை பா.ஜ., திருடுவதாக குற்றஞ்சாட்டிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், அதை கண்டித்து, பீஹார் முழுதும், ஆக., - செப்., வரை வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில் பேரணி நடத்தினார். அதாவது, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் இந்த பேரணி நடந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், பீஹார் பக்கமே ராகுல் தலைகாட்டவில்லை. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நட்டா என, பா.ஜ., நட்சத்திர பட்டாளமே பீஹார் தேர்தல் பிரசாரத்தில் முழு வீச்சில் ஈடுபட்ட நிலையில், ராகுலோ வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றார். அவரை நம்பி கூட்டணி வைத்த லாலு மகன் தேஜஸ்வி, தனி ஆளாக பீஹாரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். செல்லுமிடங்கள் எல்லாம், ராகுல் எங்கே என்றே பலரும் அவரிடம் கேள்வி எழுப்பினர். சொந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை நிகழ்வில் கூட ராகுல் பங்கேற்வில்லை. அந்தளவுக்கு அவர் 'தீவிரம்' காட்டினார். கடைசியாக, செப்., 1ல் வாக்காளர் உரிமை யாத்திரையை முடித்த ராகுல், 56 நாட்களுக்கு பின், பெயரளவுக்கென்று, அக்., இறுதியில் பீஹாரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போதும், ஓட்டு திருட்டு என்ற அரைத்த மாவையே அரைத்தார். தனித்து போட்டியிட்டு இருந்திருந்தால் கூட, கடந்த முறை போல் தேஜஸ்வி வெற்றி பெற்றிருக்கலாம் என, பீஹார் அரசியலை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ஆச்சரியம் அளிக்கிறது

பீஹார் தேர்தல் முடிவுகள் உண்மையிலேயே ஆச்சரியம் அளிக்கின்றன. நியாயமற்ற முறையில் தேர்தல் நடப்பதால் நாம் வெற்றி பெற முடியவில்லை. தோல்விக்கான காரணங்கள் குறித்து நாங்கள் ஆராய்வோம். - ராகுல், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Barakat Ali
நவ 15, 2025 08:20

மத்திய ஆட்சிக்கு அழைத்துவந்த ஆதரவிலிருந்து நிதிஷும், சந்திரபாபுவும் புட்டுக்குவாங்க என்று எதிர்பார்த்தவர்களின் ஆசை நிராசை ஆனது .......


Barakat Ali
நவ 15, 2025 08:15

பிஹார் மக்களைப் பற்றி “படிப்பறிவு குறைவு... இலவசத்துக்கு வாக்களிப்பவர்கள்..." என்று தசாப்தங்களாக பேசப்பட்ட கதையை, இன்றைய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் முழுவதுமாக தலைகீழ் புரட்டிவிட்டன. இந்த தீர்ப்பு ஒரு மாநிலத்துக்கானது மட்டும் அல்ல - தமிழகம் உட்பட இந்தியா முழுவதுக்கும் ஒரு சத்தமிட்ட எச்சரிக்கை. ஒருபுறம் பாஜக - வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், வேலைவாய்ப்பு போன்ற நம்பிக்கை தரும் உறுதிகளை கொடுத்தது. மறுபுறம் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான இந்தியா கூட்டணி - “ஒவ்வொரு வீட்டுக்கும் அரசு வேலை + மாதம் ரூ.10,000 இலவசம்” என்ற மிகப்பெரிய கவர்ந்திழுக்கும் வாக்குறுதியை கொடுத்தது. ஆனால்... பிஹார் மக்கள் ஆசை, பேராசை, கோபம், ஏமாற்றம் எதற்கும் அடிமையாவதைத் தவிர்த்து... ஆழ்ந்து யோசித்து, எது நாட்டு வளர்ச்சி? என்று கணக்கிட்டு வாக்களித்திருக்கிறார்கள். இப்ப சொல்லுங்க… யார் சார் நிறைய படிச்சிருக்காங்க? இலவச வாக்குறுதிகளுக்கு அடிமையாகாமல், நாட்டின் எதிர்காலத்தை முன்னிலைப்படுத்தி ஓட்டு போட்ட பிஹாருக்கு வணக்கம். மரியாதை செலுத்த வேண்டும். இந்த உணர்வு... நம் தமிழ்நாடு உட்பட மற்ற மாநில மக்களும் ஒருநாள் வர வேண்டும். இதையே பிஹார் தேர்தல் முடிவுகளில் இருந்து பார்க்கும் பார்வை...


தியாகு
நவ 15, 2025 07:50

வடக்கன் பீடா வாயன் என்று நாம் கிண்டல் செய்துகொண்டிருந்தாலும் அவர்கள் தெளிவாக ஊழல் செய்யாத லஞ்சம் வாங்காத மோடிஜியின் தலைமைக்கு ஓட்டு போட்டுள்ளார்கள். ஆனால் தற்குறி டுமிழர்கள் ஊழலில் லஞ்சத்தில் திளைத்து தங்கள் குடும்பங்களுக்கு சொத்து சேர்க்கும் கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்திற்கும் குறுநில மந்திரிகள் குடும்பத்திற்கும் சிறுகுறுநில எம் எல் ஏக்கள் குடும்பத்திற்கும் தலைமுறை தலைமுறையாக வாக்களித்து தங்களை ஆள வைத்து அழகுபார்த்து தாங்கள் தற்குறிகள்தான் என்று நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள். விளங்கிடும் டுமிழகத்தின் எதிர்காலம்.


Oviya Vijay
நவ 15, 2025 07:43

2026 தமிழக தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழகத்தை ஆச்சர்யமாகப் பார்க்கும்... மற்ற மாநிலங்களில் பாஜக தன்னுடைய மாயாஜாலத்தை காட்டினாலும் அவர்களது ஜாலம் தமிழகத்தில் மட்டும் எடுபடவில்லை என்பதினால் தான் அந்த ஆச்சரியம்... ராகுல் முன்னொரு முறை நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டது போல என்றைக்குமே பாஜக தமிழகத்தை ஆளவே முடியாது...


தியாகு
நவ 15, 2025 08:22

சரியா சொன்னீங்க போங்க, என்னங்க பண்றது தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு ஊழலில் லஞ்சத்தில் திளைக்கும் கட்டுமர திருட்டு திமுகவிற்கு வாக்களிப்பார்கள். அதனால் நீங்க சொன்னதுமாதிரி என்றைக்குமே பாஜக தமிழகத்தை ஆளவே முடியாது. உங்களுக்கு தேள் கொட்டியது மாதிரி இருக்குமே. ஹி...ஹி...ஹி...


Muralidharan S
நவ 15, 2025 08:57

ஆமாம்.. பீஹார் மக்களை கேவலமாக பேசிக்கொண்டு திரிந்த கூட்டம் திகைத்து நிற்கிறது இப்பொழுது.. பீஹார் மக்கள் கூட துஷ்டர்களை ஒட்டுமொத்தமாக வழித்து தூர தூக்கி எறிந்துவிட்டார்கள்.. தமிழக திரவிஷ வாக்காளர்கள்தான் இன்னமும் குவாட்டருக்கும், பிரியாணிக்கும் , இலவசங்களுக்கும், பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்து திராவிஷன்களை தொடர்ந்து ஆட்சியில் வைத்து இருக்கிறார்கள்.. இதை கண்டு இப்பொழுதே நாடே ஆச்சரியமாகவும், அருவருப்பாகவும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.. என்ன செய்ய.. தமிழக திராவிஷத்திற்கும் வாக்களிக்கும் வாக்காளர்கள் திராவிஷன்களின் கட்டவிழ்த்துவிடப்பட்ட பொய்களுக்கும், மதுவுக்கும், இலவசங்களுக்கு, பிரியாணிக்கும் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்.. திராவிஷங்களும் மக்களை போதை தெரியாமல் வைத்து இருப்பதால் தொடர்ந்து வெற்றி....


Kasimani Baskaran
நவ 15, 2025 06:57

திராவிட மந்திரிகள் பெனாத்திய வட மாநிலத்தவர் - குறிப்பாக பீகாரிகள் - பற்றிய வெறுப்பு வீடியோக்களை வெகுவாக பிரச்சாரத்துக்கு உபயோகித்தார்கள். ஹிந்தி தெரியாது போடா என்று டி ஷர்ட் போட்ட கட்சியினர் பிரச்சாரத்துக்கு சென்றால் என்னவாகும்? மொத்தமாக நக்கிக்கொண்டு போய் விட்டது.


ராஜ்
நவ 15, 2025 06:54

அடுத்தது மேற்கு வங்கம் தமிழ்நாடு 2031


Palanisamy Sekar
நவ 15, 2025 06:40

பெண்களின் கதாநாயகன் நிதீஷ் இந்த தேர்தலில் முக்கிய பங்காற்றினார். காரணம் தனது ஆட்சியில் சுமார் ஒன்றரை கோடி பெண்களுக்கு 10,000 ரூபாய் கொடுத்து சுயமாக சிறு சிறு வியாபாரம் செய்ய ஊக்குவித்ததை பெண்கள் பெரிய அளவில் வரவேற்றினர். இலவசங்களை அவர்கள் விரும்பவே இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாக காட்டிவிட்டன . தமிழகத்தை போல ஆயிரம் கொடுத்துவிட்டு அதனை அந்த பெண்ணின் கணவர்கள் டாஸ்மாக்கில் விட்டுவிட்டதை போல அலலாமல் சிறு சிறு வியாபாரங்களில் தங்களின் கவனத்தை செலுத்தியதும் ஒரு காரணம் இந்த வெற்றிக்கு. தேர்தல் காலங்களில் அண்டா குண்டா மூக்குத்தி என்று யாரும் கொடுக்க முன்வரவில்லை. காரணம் பீகார் பெண்கள் தன்மானத்தில் முதலிடத்தில் இருக்கின்றதுதான் காரணம். ஓட்டுக்களை விற்று அவர்கள் தங்களை அவமானப்படுத்திக்கொள்ளவில்லை. சுயகவுரவமிக்கவர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் பீகார் பெண்கள். S I R சீர்த்திருத்தம் காரணமாக செத்துபோன மனிதர்கள் பெயரில் வாக்களிக்க முடியவில்லை. ஒரே வீட்டில் இருநூறு பேர்வரை இருந்த தமிழ்நாட்டை போல அங்கே யாரையும் விடவில்லை. கள்ள ஓட்டுப்போடாமல் கண்கொத்தி பாம்பாக செயல்பட்ட தேர்தல் கமிஷனை நூறுமுறை தாராளமாக பாராட்டலாம். குவாட்டர் பிரியாணி என்று யாரும் பிச்சைக்காரனாக தங்களை அடையாளம் காட்டிகொள்ளாத பீகார் இளைஞர்களையும் ஆண்களையும் தாராளமாக பாராட்டலாம். வெளிநாட்டிலிருந்து வரவைக்கப்பட்ட பங்களாதேசிகளும் மியான்மர் ரோஹாங்கியறைகளையும் விரட்டியடித்ததால் இந்தியர்கள் மட்டுமே வாக்களித்த தேர்தலாக பாராட்டப்படுகின்ற்து இந்த தேர்தல். நியாயமாக இந்தியர்களை மட்டுமே வாக்களிக்க வைத்தால் தேச துரோக கும்பல்கள் காணாமல் போகும் என்பதற்கு இந்த பீகார் தேர்தல் சிறந்த உதாரணமாக காலமெல்லாம் சுட்டிக்காட்டப்படும்


Palanisamy Sekar
நவ 15, 2025 06:30

ஆப்பரேஷன் சிந்தூர கொடுத்த வெற்றியில் பீகார் மக்களின் தேசபக்தியானது போலி அரசியல்வாதிகளை அடையாளம் கண்டுகொண்டதால் வந்த தோல்விதான் இந்த பாஜகவின் வெற்றி. ஆரம்பத்திலிருந்தே தேஜஸ்வியின் போக்கை ஏற்க முடியாத காங்கிரஸ் அவரை முதல்வர் பதவிக்கு பரிந்துரை செய்ய்யவில்லை. காரணம் ஒன்பதாம் வகுப்பில் பாஸ் செய்யாத தேஜஸ்வி தமிழ்நாட்டு ஸ்டாலினை ஆகச்சிறந்த முதலமைச்சர் என்று கூறியதும் ஒரு காரணம். தான் படிக்காதவன் என்பதை நிரூபித்த அந்த ஸ்டாலின் மீதான விமர்சனத்தை பீகார் மக்கள் ஏற்கவில்லை. அதேபோல தமிழ்நாட்டில் செல்லவேண்டிய முக்கிய நிகழ்வுகள் நடந்த இடங்களுக்கெல்லாம் செல்லாத ஸ்டாலின் பீகாருக்கு சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார் பீகாரில் காங்கிரஸ் அடியோடு நாசமாயிற்று. காரணம் அங்கே சென்று எனது அருமை சகோதரன் ராஜீவ் காந்தி அவர்களே என்று சொன்னதும் பீகாரில் உள்ள ஒட்டுமொத்த மக்களும் இதனையே தேர்தல் முடியும் வரை சொல்லி சொல்லி தேஜஸ்வியை கேலி கிண்டல் செய்தார்கள். அடுத்து பிரதமர் தனது தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக திமுக பீகாரிகளை கேவலம் செய்தார்கள் என்று துணிச்சலாக பிரச்சாரம் செய்ததும் ஒரு காரணமாக கூறலாம். பீகார் மக்கள் சுயகவுரவம் பார்ப்பவர்கள் தான் அதற்காக தன்மானத்தை விட்டுவிட மாட்டார்கள் என்பதை வாக்களித்து நிரூபித்துவிட்டார்கள். அடுத்த காரணமாக சொல்வதென்றால் பிரஷாந்த் கிஷோர் கட்சி செய்த வாக்குப்பிரிப்பில் பல தொகுதிகளில் காங்கிரசும் தேஜஸ்வி கட்சியும் தோல்வியை தழுவின என்றால் அது மிகையல்ல. இதேபோலத்தான் அடுத்து தமிழகத்தில் விஜய்யின் நிலைமையும். பிரஷாந்த் கிஷோரின் நிலைமையை போலத்தான் இங்கேயும் விஜய்க்கு நடக்கும். பல இடங்களில் திமுக தோல்வியை தழுவ விஜய் கட்சியின் வாக்கு சிதறல்தான் காரணமாக நிச்சயம் இருக்கும். பொதுவாக சொல்வதென்றால் பிரதமர் மோடிஜியின் தனிப்பட்ட செல்வாக்கு மக்கள் மத்தியில் அபரிமிதமான அளவுக்கு பெருகியதும் ஒரு காரணம். அதுவே முக்கியமான காரணமாகவும் இந்த பீகார் தேர்தலில் ஜொலித்தது. பிரதமரின் குடும்பத்தை பற்றி இப்போது பலரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். எளிமை ஏழ்மையோடு இருந்தாலும் பிரதமர் அவர்களுக்காக எந்த ஒரு சலுகையும் கொடுக்கவில்லை. மாறாக மக்கள் இப்பொது ஒப்பீடு செய்துபார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக ஸ்டாலினின் குடும்பத்தோடு ஒப்பீடு செய்து அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். மோடியின் சிஷ்யன் உ பிரதேச முதலவர் யோகியின் பிரச்சாரமும் அவரது எளிமையும் பீகார் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அவரது சகோதரியின் கிராமத்து சிறு கடையை பற்றி நிறைய பேசினார்கள். யோகியின் சொந்த சகோதரியின் சொத்து மதிப்பானது அந்த கதையோடு சேர்த்து வெறும் ஓரிரு ஆயிரங்கள் மட்டுமே என்கிற விமர்சனத்தை தேஜ்சிவியின் குடும்பத்தோடு ஒப்பீடு செய்தார்கள். பிற கட்சியினரின் சொத்து மதிப்போடு பிரதமரின் குடும்பமும் யோகியின் குடும்பமும் பீகார் மக்களின் மனதை வென்றுவிட்டதால் பாஜகவை வெற்றிபெறவைத்துவிட்டது. இதனையே இங்கே தமிழகத்தில் பிரச்சாரம் செய்தால் அதிமுக பாஜக கூட்டணி வெற்றிகாண்பதை எந்த கொம்பனாலும் தடுக்கவே முடியாது. பீகார் வெற்றி தமிழக பாஜகவுக்கு கொடுக்கும் தெம்பு.


தாமரை மலர்கிறது
நவ 15, 2025 02:59

அமித் ஷாவின் அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான். தமிழகத்தில் பிஜேபி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும். பிஜேபி மட்டுமே நூறு இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ளது. எடப்பாடி முதல்வர் ஆவார். தமிழக அமைச்சர்களை அமித் ஷா தீர்மானிப்பார்.


சமீபத்திய செய்தி