உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இடைக்கால பட்ஜெட்; டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்

இடைக்கால பட்ஜெட்; டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்

புதுடில்லி: பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு, டில்லியில் உள்ள பார்லி., நூலகக் கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. காங்கிரஸ், தி.மு.க.,, அ.தி.மு.க, இடது சாரி கட்சிகள், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், வரும் பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள இடைக்கால பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் ஆறாவது மத்திய பட்ஜெட்டை வரும் 1ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை ஜனவரி 31ம் தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் துவங்குகிறது. கூட்டத் தொடர் துவங்கும் நிலையில், இன்று(ஜன.,30) டில்லியில் உள்ள பார்லி., நூலகக் கட்டடத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடியது. காங்கிரஸ், திமுக, அதிமுக, இடது சாரி கட்சிகள், ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டத்தை புறக்கணித்துள்ளன. கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

குமரி குருவி
ஜன 30, 2024 13:34

தேர்தல் நெருங்கி வருவதால் பட்ஜெட் மக்களுக்கு நல்லதாகவே இருக்கும் எதிர் கட்சிகள் வம்பு வளர்க்காது..


Palanisamy Sekar
ஜன 30, 2024 12:24

வயிற்றில் புளியை கரைக்கவிட்டால் யார் தான் வருவார்கள். மக்களை கவர்ந்திடும் அபாரமான பட்ஜெட் இடைக்கால நிகழ்வாக தாக்கல் செய்வதை பொறுக்க மாட்டாமல் ஓடுவது திராவிட கட்சிகளின் கேவலமான செயல். நல்ல திட்டங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். குறிப்பாக பெட்ரோல் விலையில் அதிரடி மாற்றம் இருக்கக்கூடும். சிலிண்டர் விலையிலும் மாற்றம் வரலாம். விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உதவித்தொகை நிரப்பப்படலாம்.இப்படி நல்லது செய்தாலும் கூட எதிரி கட்சியினர் தேர்தலுக்காக என்றுதான் கூவப்போகிறார்கள். அது யார் காதிலும் விழாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை