உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: 4வது முறை சம்மன் அனுப்ப முடிவு?

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு: 4வது முறை சம்மன் அனுப்ப முடிவு?

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என டில்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கெஜ்ரிவாலின் வீடு மற்றும் கட்சி அலுவலகங்களில் குவிந்து வருகின்றனர். மேலும் வீட்டிற்கு செல்லும் முக்கிய சாலைகள் மூடப்பட்டுள்ளன. போலீசார் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கெஜ்ரிவாலுக்கு 4 வது முறை சம்மன் அனுப்ப முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் உறுதி செய்யப்படாத தகவல் தெரிவிக்கிறது.

அன்னா ஹசாரேயின் உதவியாளர்

கெஜ்ரிவாலை பொறுத்தவரையில் ஆரம்பகட்டத்தில் சமூகநீதி போராளி அன்னா ஹசாரேயின் வலது கரமாக இருந்து வந்தார். ஊழலுக்கு எதிராக போராடுவதை உயிர் மூச்சு கொள்கையாக வைத்து ஹசாரேயிடம் இருந்து விலகி , தாமும் ஊழலை ஒழிப்பதாக சொல்லியே கட்சியை உருவாக்கியவர் ஆம்ஆத்மி தலைவர் கெஜ்ரிவால். ஆனால் அவரே ஊழல் செய்து கைது வரை செல்லும் அளவிற்கு சென்றிருப்பது பெரும் அதிர்வை ஏற்படுத்துகிறது. புதுடில்லியில் 2021 - 2022 நிதியாண்டில், மதுபான விற்பனை தொடர்பான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்குக்குப்பின்னர் பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. மதுபான கொள்கை உருவாக்கியதில் இவருக்கும் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் அதிக பங்கு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

ஆஜராகாமல் தவிர்ப்பு

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி , புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை கடந்த 2023 நவ.2-ம் தேதியும் தொடர்ந்து டிச.21-ம் தேதியும் சம்மன் அனுப்பியது. பல்வேறு காரணங்களை கூறி ஆஜராவதை தவிர்த்து வந்தார். இதையடுத்து மீண்டும் ஜன. 3-ம் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் எனவும் இல்லையெனில் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தது. நேற்றும் ஆஜராகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 32 )

Ramesh Sargam
ஜன 05, 2024 00:59

நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை சரியில்லை. இதுபோன்று மற்ற சாமானியர்களுக்கு 'சலுகை' கொடுக்குமா இந்த நீதிமன்றம். மூன்றுமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாமல் இருக்கும் ஒரு அரசியல்வாதிக்கு, மீண்டும் நான்காவது முறை சம்மன். சட்டத்தில் என்ன அரசியல்வாதிகளுக்கு சலுகை கொடுக்கவேண்டும் என்று ஏதாவது குறிப்பு இருக்கிறதா? நீதிமன்றங்களின் போக்கே சரி இல்லையே...


Anbuselvan
ஜன 04, 2024 19:14

பொதுவாக ஆட்சி பொறுப்பில் இருப்பவர்களை நள்ளிரவுதான் கைது செய்து பார்த்து இருக்கிறோம். இன்றிரவு என்ன நடக்குதுன்னு பார்ப்போம். இல்லையேல் நான்காவது சம்மன் அனுப்பியும் ஆஜராகாவிடில் அன்றிரவு என்ன நடக்குதுன்னா பார்க்கணும்


ram
ஜன 04, 2024 17:45

அவரும் மனுஷன் தானே..


Jai
ஜன 04, 2024 17:27

அன்னா கசரேடன் சேர்ந்து ஊழலுக்கு எதிரான போராட்டத்தால் பிரபலமடைந்து போராட்டத்திலிருந்து விலகி கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தார். அதுவரை ஓகே. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அவரால் ஊழலுக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை. அரசியலில் தன்னை காப்பாற்றி கொள்ள இலவசங்களை அள்ளி வீசி மறுபடியும் டில்லியில் ஆட்சி. அதே இலவசத்தை காட்டி, பழைய பென்சன் என்று பொய்யான வாக்குறுதியில் பஞ்சாப்பில் ஆட்சி. இப்போது ஊழழின் நட்சத்திரம் திமுகாவுடன் கூட்டணியில் சேர்ந்ததால் சராசரி ஊழல் கட்சி ஆகிவிட்டார்கள். பிறகு மனைவியை அரசியலில் இறக்குவதில் குடும்ப ஆட்சிக்கும் அடித்தளம் இடுகிறார். அரசியலில் பிரகாசமான நம்பிக்கையை கொடுத்து ஏமாற்றியதில் இவர் மீது மட்டுமல்லாமல் சீமான் போன்றோருக்கு ஆதரவு கொடுப்பதில் தயக்கமும் வருகிறது. சீமான், ஆடு மேய்ப்பவர்களை அரசு ஊழியர் ஆக்குவோம் என்று கூறுவதில் கெஜ்ரிவால்தான் ஞாபகம் வருகிறது.


Velan Iyengaar
ஜன 04, 2024 16:08

ஆடுபுலியாட்டம் நடக்குது யார் அரசியல் ரீஎதியாக பலனடைவது?? எப்படி பலனடைவது என்று ஒரு ஆட்டம் நடக்குது இதில் சந்தேகம் இல்லாமல் கெஜ்ரிவால் வெற்றி பெறுவார்... இந்த விஷயத்தில் BJ பார்ட்டி அசிங்கமாக மண்ணை கவ்வ்வும்


நாஞ்சில் நாடோடி
ஜன 04, 2024 14:38

கெஜ்ரிவாலின் முன்னோடி கருணாநிதி...


Velan Iyengaar
ஜன 04, 2024 16:17

அதில் பெருமை கருணாநிதிக்கே இப்ப்போது சாணக்யத்தனமாக கெஜ்ரிவால் நடந்துகொள்கிறார்...


Hari
ஜன 04, 2024 18:02

கருணாநிதியை வூலலில் வெல்ல யாருக்கும் திறமை இல்லை கனி அக்காவைத்தவிர,


rsudarsan lic
ஜன 04, 2024 14:38

Body language- what is the score


Velan Iyengaar
ஜன 04, 2024 16:18

Advantage Kejriwal Not even deuce


rsudarsan lic
ஜன 04, 2024 14:36

Modi vaazhga jananayagam vaazhga


Velan Iyengaar
ஜன 04, 2024 16:19

You should really hang your head in shame


Velan Iyengaar
ஜன 04, 2024 16:20

I read you wrong.. Did not understand the euphemism


Raj
ஜன 04, 2024 14:36

How many times issued a summons to appear in a court law, that means they don't have capability to arrest him. Because of politician. If it is normal person they arrest immediately. This is Indian Law, that's why politicians are doing fraud frequently.


Suppan
ஜன 04, 2024 16:20

இல்லை. அமலாக்கத்துறை கைது செய்ய முடியும். ஜார்கண்டில் சோறெனுக்கு ஏழு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அங்கு சட்டம் ஓழ்8உங்கு பாதிக்கப்படும் என்ற அச்சம் உள்ளது, தில்லியில் அந்தப் பிரச்சினை இல்லை. காங்கிரஸ் கெஜ்ரிவாலுக்கு ஒத்துழைப்பு தராது.


செந்தமிழ் கார்த்திக்
ஜன 04, 2024 14:14

இருந்தாலும், எங்கள் ஊர் சீமான் போல, சில நூறு பேரை திரட்டி கொண்டு, அமலாக்க துறை அலுவலகத்திற்கு சென்று விட்டு தான் வாருங்களேன். குற்றம் செய்ய வில்லை என்றால் பிறகு ஆஜராவதில் என்ன தயக்கம். ?


Velan Iyengaar
ஜன 04, 2024 16:12

அரசியல் கணக்கு இருக்கு அன்பரே கைது செய்வதிலும் அந்த கைதை நியாயப்படுத்துவதிலும் அரசியல் சூட்சுமம் இருக்கு அன்பரே இந்த அரசியல் சித்து விளையாட்டில் disadvantage நிலையில் BJ பார்ட்டி இருக்கு அதனால் தான் இத்தனை சம்மன் அனுப்பிய பின்னரும் கைது செய்யவோ இல்லை வலுக்கட்டாயமாக ஆஜராக்குவதையோ தவிர்க்கிறார்கள் இனி மேலும் இந்த விளையாட்டை கண்டு ரசியுங்கள் கெஜ்ரிவால் இந்த விஷயத்தில் சாணக்யத்தனமாக விளையாடுகிறார் அது நாட்டுக்கு நல்லது பிற அரசியல் பழிவாங்கும் செயல்கள கையாளுவதற்கு ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்துகிறார்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை