உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுபாஷ் சந்திரபோஸ் முதல் பிரதமரா? : கிண்டலுக்கு ஆளான நடிகை கங்கனா ரணாவத்

சுபாஷ் சந்திரபோஸ் முதல் பிரதமரா? : கிண்டலுக்கு ஆளான நடிகை கங்கனா ரணாவத்

புதுடில்லி : 'இந்தியாவின் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்' என, பா.ஜ., வேட்பாளர் கங்கனா ரனாவத் கூறியதால், சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளானார்.லோக்சபா தேர்தலில் பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்தை ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் லோக்சபா வேட்பாளராக சமீபத்தில் பா.ஜ., அறிவித்தது. அங்கு அவர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், 'டிவி' நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 'நாடு சுதந்திரம் அடைந்தபோது, நம் முதல் பிரதமர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எங்கே போனார்?' என, கேள்வி எழுப்பினார். இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு என தெரியாமல் சுபாஷ் சந்திர போஸ் என கங்கனாவின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. 'இண்டியா' கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டு மின்றி, டில்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிக், நடிகர் பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோரும் சமூக வலைதளங்களில் கங்கனாவின் கருத்தை கிண்டல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kasimani Baskaran
ஏப் 06, 2024 00:33

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது சுபாஷ் சந்திர போசால்த்தான் என்பது அனைவருக்கும் தெரியும் பிரிட்டன் அரசுடன் நேரு போட்ட நாடகத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டன அதை விட காமடி காங்கிரஸ் தேசத்தின் சொத்துக்களை ஏறாளமாக ஆட்டையைப்போட்டது உதாரணத்துக்கு பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஹெரால்டு ஹவுஸ் இதில் வேடிக்கை என்னவென்றால் கம்மிகளுக்கு உளவாளியானவரே நேரு குடும்பத்துக்குள் இன்றுவரை உறுப்பினராக இருக்கிறார்- கட்சியின் முழு கட்டுப்பாடும் அவர்கள் கையில்த்தான் காங்கிரஸ் முழுமையாக அழிக்கப்பட்டு அதன் கிளைக்கட்சிகளும் சேர்த்து ஒழித்துக்கட்டப்பட வேண்டும் பல கட்டமைப்புக்களை வசதியாக இன்னும் கூட வைத்திருக்கிறார்கள் அவை அனைத்தும் ஒழித்துக்கட்டினால்த்தவிர இந்தியாவை முன்னேற விட்டு விட மாட்டார்கள் மூன்றாவது தவணையில் மோடி அதை சாதிப்பார் என்று நம்பலாம்


jeyakumar
ஏப் 05, 2024 23:34

% உண்மை பொய் சொல்பவர்களுக்கு இந்த உண்மை செய்தி பொய்யாகத்தான் தெரியும்


sankaranarayanan
ஏப் 05, 2024 22:40

நடந்திருக்க வேண்டியதை முன்கூட்டியே அவர் சொல்லிவிட்டார் என்றோ நேதாஜி இந்திய பிரதமராகிவிட்டார் என்பது இந்திய மக்களின் எண்ணம் ஆனால் அதை நிறைவேற முடியாமல் செய்தது நேருவின் சூழ்ச்சி இதைத்தான் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்


தாமரை மலர்கிறது
ஏப் 05, 2024 22:27

கங்கனா சொன்னதில் தவறில்லை எல்லாம் எல்லோருக்கும் தெரியாது


Venkataraman
ஏப் 05, 2024 22:11

சிங்கப்பூரில் ல் நடந்த ஒரு மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸ் தன்னை ஆஜாத் ஹிந்த் அல்லது சுதந்திர இந்தியாவின் பிரதமராக அறிவித்தார் அத்துடன் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேறும்படியும் கட்டளையிட்டார் எனவே கங்கனா அவர்கள் கூறியதில் தவறு ஏதும் இல்லை


Venkataraman
ஏப் 05, 2024 22:03

கங்கனா அவர்கள் சொன்னதில் தவறு எதுவும் இல்லை சுபாஷ்சந்திர போஸ் அவர்கள் ஆஜாத் ஹிந்த், அதாவது சுதந்திர இந்தியா என்ற ராணுவ அமைப்பையும் அரசையும் நடத்தி வந்தார். அவர் சிங்கப்பூரில் ஒரு கூட்டத்தில் தன்னை பிரதமராகவும் ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து வெளியேறும்படியும் ஆணையிட்டார் அதற்கு முன்பே அவர் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஆங்கிலேயர்களிடமிருந்து கைப்பற்றினார் எனவே சுபாஷ்சந்திர போஸ் இந்த நாட்டின் முதல் பிரதமராக இருந்தது உண்மைதான்


சிந்தனை
ஏப் 05, 2024 22:03

முன்பே நேதாஜி போரிட்டு இது சுதந்திர நாடு என்று அறிவித்துவிட்டார் ... இனி வெள்ளையர்கள் வெளியேறலாம் என்றும் அறிவித்துவிட்டார்.... இனிமேல் தங்க முடியாது என்று வெள்ளையர்கள் புரிந்து கொண்டார்கள்...


பாரதி
ஏப் 05, 2024 21:59

அவர் சரியாகத்தான் பேசியுள்ளார் மற்றவர்கள் தான் சரித்திரம் தெரியாமல் உளறுகிறார்கள் வருந்துகிறார்கள்... Netaji Subhash Chandra Bose formed a Provisional Government of Free India, also known as Azad Hind, on October 21, 1943, Staying in Singapore.


Govind
ஏப் 05, 2024 21:55

For those of you who didnt understand the context Netaji, established a government of Azad Hind Free India in Singapore on October , i,e way before India got freedom in Subhas Chandra Bose d himself as the Prime Minister, the Head of State, and the Minister of War, announcing World War II Kangna Renavat only mentioned this So get your facts right before you say anything about her


ஆரூர் ரங்
ஏப் 05, 2024 21:51

சரியாகத்தான் பேசியுள்ளார் கங்கணா. நேதாஜி 1943 இல் ஆஸாத் ஹிந்த் என்ற நாடு கடந்த சுதந்திர இந்திய அரசை நிறுவினார். அதன் பிரதமராக தலைமைப் பதவியையும் வகித்தார். நேரு பிரதமாராக ஆனது நான்காண்டுகளுக்குப் பிறகே.


தமிழ்
ஏப் 05, 2024 21:59

ரங்கிடு,உன்னோட சமாளிப்பு சூப்பர்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ