உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தோ - திபெத் படையில் 545 காலிப்பணியிடம்: பத்தாம் வகுப்பு முடிச்சிருந்தாலே போதும்!

இந்தோ - திபெத் படையில் 545 காலிப்பணியிடம்: பத்தாம் வகுப்பு முடிச்சிருந்தாலே போதும்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) 545 கான்ஸ்டபிள் ( டிரைவர்) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 6.இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படையில் (ஐ.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 545 'கான்ஸ்டபிள்' (டிரைவர்) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் எஸ்.சி., பிரிவினருக்கு 70 காலியிடங்களும், எஸ்.டி., பிரிவினருக்கு 40 காலியிடங்களும், ஓ.பி.சி., பிரிவினருக்கு 165 காலியிடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 55 காலியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

கல்வித் தகுதி என்ன?

அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://recruitment.itbpolice.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்

பொது பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.100. எஸ். சி, எஸ்.டி., மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுள்ளது.

தேர்வு செய்வது எப்படி?

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்

வரும் அக்டோபர் 8ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி நவம்பர் 6.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை