உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீர் அரசு தமிழக நிறுவனத்துடன் ஒப்பந்தம்

ஜம்மு - காஷ்மீர் அரசு தமிழக நிறுவனத்துடன் ஒப்பந்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் அரசின் திறன் மேம்பாட்டு இயக்குநரகம், தமிழகத்தின் ஆசிரியர் - மாணவர் திறன் வளர்ச்சி நிறுவனமான ஐ.சி.டி., அகாடமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள ஐ.சி.டி., அகாடமி மத்திய மற்றும் மாநில அரசின் உதவியுடன் செயல்படும் லாப நோக்கமற்ற நிறுவனம். தொழில்துறைக்கு எத்தகைய திறனுடையவர்கள் தேவை என்பதை ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உயர்மட்ட பயிற்சி வாயிலாக இந்நிறுவனம் விளக்குகிறது. அதற்கு ஏற்ப கற்பித்தலை மாற்றியமைக்கிறது. இந்நிறுவனத்துடன் ஜம்மு - காஷ்மீர் அரசு ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டுஉள்ளது. தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் நிர்வாகவியல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொழில்துறைக்கு ஏற்ற பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் கிடைக்கும். இது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாலிடெக்னிக் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களே இத்திட்டத்தின் இலக்கு.புரிந்துணர்வு ஒப்பந்தப்படி ஐ.சி.டி., அகாடமி, ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் இரண்டு முதல் ஆறு உயர்மட்ட பயிற்சித் திட்டங்களை நடத்தும். அதில் வளர்ந்து வரும் தொழில்துறை தரநிலைகளுக்கு ஏற்ப கற்பித்தல் முறைகள் மாற்றியமைக்கப்படும். திறன் வளர்ச்சி மற்றும் ஆசிரியர் மேம்பாட்டுக்கு இந்த ஒப்பந்தம் நிலையான சூழலை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
மே 29, 2025 03:52

ஊழல் இல்லை என்றால் சிறப்பு.


மீனவ நண்பன்
மே 29, 2025 03:11

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரமும் குண்டுவைக்கும் திறனும் வளர்ச்சியடையும் பெரும்பாலான காஷ்மீர் மாணவர்கள் டில்லி பெங்களூரு அலிகர் மற்றும் ஹைதராபாத் தான் படிக்க செல்கிறார்கள்


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மே 29, 2025 01:39

கண்கானிப்பு அவசியம்.... தெனமாநிலங்களுக்கு ஊடுருவ வாய்ப்பு..... ஆபரேஷன் செந்தூர் நிகழ்விற்கு பிறகு பாகிஸ்தான் ஆதரவு குரல்கள் அதிகம் எழுந்தது தமிழ் நாட்டில் தான்....!!!


புதிய வீடியோ