உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதிகள் நடுநிலை தவறக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

நீதிபதிகள் நடுநிலை தவறக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி வலியுறுத்தல்

ஆமதாபாத் : நீதித்துறை ஒழுக்க நெறிகள் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவை நீதித்துறையின் அடிப்படை தூண்களாகும். பாரபட்சமாக செயல்படுகிறார் என்ற பேச்சுக்கு இடம் கொடுக்காமல், நடுநிலையுடன் நீதிபதிகள் செயல்பட வேண்டும், என, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் வலியுறுத்தினார்.குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த, நீதிபதிகளுக்கான ஆண்டு கருத்தரங்கில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் பேசியதாவது: நீதித்துறை ஒழுக்க நெறிகள் மற்றும் ஒருமைப்பாடு ஆகியவையே, நீதித்துறையின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் அடிப்படை தூண்களாகும். நீதிமன்றத்தில் இருக்கும்போதும், வெளியே இருக்கும்போதும், நீதிபதிகள், இந்த உயர்ந்த குணங்களை கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும்.வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது, அரசியல்வாதிகளை, அதிகாரிகளை புகழ்வது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதுபோலவே, பாலினம், மதம், ஜாதி, அரசியல் உள்ளிட்டவை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும்.தற்போது நீதிமன்ற விசாரணைகள், நேரடியாக ஒளிபரப்பாகின்றன. அதனால், கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் ஒரு பகுதியை மட்டும் வெளியிட்டு, சர்ச்சை உருவாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.நீதிபதிகள் பாரபட்சமாக செயல்படுவதாக சந்தேகம் எழும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. உதாரணத்துக்கு, நீதிபதி பதவியை ராஜினாமா செய்து, உடனே தேர்தலில் பங்கேற்பது, அந்த நீதிபதி வழங்கிய தீர்ப்புகள் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தும்.விசாரணை தாமதமாவது, இழுத்தடிப்பு செய்வது போன்றவை, நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்துவிடும். இது, நீதித்துறைக்கு வெளியே நீதியைத் தேடுவதாக அமைந்துவிடும். இது பல மோசடிகளை, பிரச்னைகளை உருவாக்கிவிடும்.இவ்வாறு பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

NATARAJAN R
அக் 25, 2024 19:41

உச்சநீதிமன்ற நீதிபதி அவர்களே முதலில் நீங்கள் நடுநிலை தவறாது செயல்படுங்கள். சென்னை உயர்நீதிமன்றம் திரு பொன்முடி மற்றும் அவரது மனைவி இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியது. திரு பொன்முடி பதவி பறிக்கப்பட்டது. மேல் முறையீடு வந்த போது எந்த அடிப்படையில் உங்கள் நீதிமன்றம் அவரது தண்டனையை நிறுத்தி வைத்தது என்று உங்கள் நீதிபதி சொல்வாரா? கீழமை நீதிமன்றம் இரு அமைச்சர்களை விடுதலை செய்தது தவறு என்று உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்தால் அதை நீங்கள் தடை செய்வீர்கள். இவை எல்லாம் சரியான தண்டனை என ஒவ்வொரு குடிமகனும் உயர் நீதிமன்றத்தை பாராட்டி மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் தடை ஏன் விதிக்க வேண்டும்? ஊருக்கே ஊழல் செய்தது தெரியும்.நீதிமன்றம் ஆதாரங்கள்பார்த்துதண்டனைவிதித்தஆனால் உச்சநீதிமன்றம் ஏன் தண்டனையை நிறுத்தி வைத்தது? எனவே உச்ச நீதிமன்றம் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளும் நிலை வரட்டும்.


R.Varadarajan
அக் 25, 2024 02:15

உண்மை நிலை என்ன?


s madhavan
அக் 22, 2024 21:16

எனது பணிநீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாலா அவர்கள் நான் கொடுத்த மத்தியப் பிரதேச நீதிமன்றத் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு, குஜராத் நீதிமன்ற வழக்கிற்கு சம்பந்தமில்லாத தீர்ப்பை எடுத்துக்கொண்டு நடஉநஇலஐ தவற எனது மனுவை தள்ளுபடிசெய்தார்.


Selvaraj
அக் 22, 2024 18:21

நடுநிலை தவறாமல் தீர்ப்பு அளித்தால் நீதிபதிகளுக்கு என்ன பிரயோஜனம். அப்புறம் மேல்முறையீடே இருக்காதே...?


Kanns
அக் 21, 2024 19:25

Dist/HC/SC CJs Must Concentrate Only Improving Justice Administration v.imp/ sensitive Cases involving Nation-People may be attended. For Most World Maladies esp False Cases, Crl Case Hungry Criminals police & magistrates, NewsHungry Biased Media, VoteHungry MegaLoot Parties are Responsible. Sack & Punish All Judges Not Giving Unbiased-Quality-Fast Judgements at Cheaper Costs Jr advocates and Not Punishing them, PowerMisusing Rulers, their Stooge Officials & Vested False Complainant Gangs women, unions/groups, SCs, advocates etc. Appoint Only Acquitted NonAdvocate Citizens as Judges with postSelection Law Trainings & Promotions till SC purely on above Merits.


R.RAMACHANDRAN
அக் 21, 2024 09:42

நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோர் குற்றங்கள் செய்வதற்க்கென்றே மேலுலகத்திலிருந்து வந்துள்ளனர் அவர்களை யாரும் எதுவும் செய்யமுடியாது என இறுமாந்திருக்கும் காலத்தில் இத்தகையை அறிவுரைகளை கடைபிடிப்பார்கள் நேர்மையாக கடமைகளை செய்வார்கள் என்றெல்லாம் எதிர் பார்க்க முடியாது. இந்திய தண்டனை சட்டம் பிரிவு 219 ஐ அமல்படுத்த இந்த நாட்டில் யாரும் விரும்பாததால் இந்நிலை.இந்திய அரசமைப்பு உறுப்பு 366 க்கு மாறாக குற்றவாளிகளை காப்பாற்றுவதில் குறியாக உள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை