உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார்த்தி வெளிநாடு செல்வது எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., முறையீடு

கார்த்தி வெளிநாடு செல்வது எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., முறையீடு

'ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கு சர்வதேச அளவில் தொடர்புடையது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காங்., - எம்.பி., கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது எங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ., தரப்பு முறையிட்டுள்ளது.

அன்னிய முதலீடு

ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்துக்கு வெளிநாடுகளிலிருந்து அன்னிய முதலீடு பெற்றுக்கொடுத்ததில் முறைகேடு நடந்ததாக காங்.,கைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.இதில், இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்ட நிலையில் கார்த்தி வெளிநாடு செல்லும் முன் சி.பி.ஐ.,யிடம் அனுமதி பெற வேண்டும் என, நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.இந்த நிபந்தனையை தளர்த்தக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு மீதான விசாரணை நேற்று நடந்த போது கார்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'கார்த்திக்கு எதிராக எந்த விசாரணையும் நிலுவையில் இல்லை. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தளர்த்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தார்.அப்போது குறுக்கிட்ட சி.பி.ஐ., தரப்பு வழக்கறிஞர், 'இந்த விவகாரத்தில் விசாரணை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும் இந்த வழக்கு சர்வதேச அளவில் தொடர்புடையது.

அனுமதி

'எனவே குறைந்தபட்சம் கார்த்தி வெளிநாடு செல்ல அனுமதிக்க முடியுமா, முடியாதா என்ற கட்டுப்பாட்டை சி.பி.ஐ., வசம் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது' என வாதிட்டார். இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய அனுமதி வழங்கி, வழக்கின் விசாரணையை மார்ச் 3ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

subramanian
பிப் 12, 2025 16:53

சட்டத்தில் என்ன சொல்லி இருக்கிறது அதன் படி நீதிபதிகள் தீர்ப்பு தரவேண்டும்.


அப்பாவி
பிப் 12, 2025 15:56

வழக்கை மட்டும் பதிஞ்சுருவாங்க. எத்தனை வருஷம் விசாரிப்பீங்க?


ஆரூர் ரங்
பிப் 12, 2025 11:49

பல அன்னிய அரசுகளும் அங்குள்ள கிரிமினல் வணிகர்களும் இங்கு நடக்கும் ஊழல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதற்கு தீர்வு காணும்வரை கார்த்திக் போன்ற ஆட்களுக்கு ஜாலி.


appaavi
பிப் 12, 2025 11:00

கார்த்தி கூட ஒரு சி.பி.ஐ அதிகாரியை ஃபெவிகால்.போட்டு ஒட்டிரலாம். அப்பதான் தப்பிக்க முடியாது.


sankaranarayanan
பிப் 12, 2025 10:27

ஒரு இந்திய பாராளுமன்ற உறுப்பினர் அடிக்கடி வெளிநாடு செல்ல என்ன காரணம் தொழில்த்துறையிலா அப்படி என்ன தொழில் செய்கிறார் எங்கே செய்கிறார் இவைகளை எல்லாமே விவரமாக இந்திய அரசுக்கு தெரிவித்தால்தான் நல்லது அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரையில்தான் இந்த சட்டம்


Laddoo
பிப் 12, 2025 08:07

சுரண்டி கொழுத்த பணத்தை/பெண்ணை அப்பப்ப பார்த்துட்டு வர வேணாம்மா? லண்டன்க்கு கூட போய் வர முடியாதா? செல்வப் பெருந்தகை பணமும் சொத்து அங்கேதானே இருக்கு.


Admission Incharge Sir
பிப் 12, 2025 10:13

செல்வபெருந்தகை ஒன்றும் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. சிதம்பரத்தின் சொத்துக்களின் கேர்டேக்கராக அல்லது பினாமியாக கூட இருக்கலாம்.


Kasimani Baskaran
பிப் 12, 2025 06:25

உள்ளே தூக்கி வைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும். வெளியே விட்டு அணைத்து ஆதாரங்களையும் அழிக்க விட்டால் வேறு என்ன செய்வானாம்? நீதித்துறையும் விசாரணை அமைப்புக்களும் குற்றவாளிகளின் நலனில்த்தான் அதிக அக்கறை காட்டுகின்றன.


hariharan
பிப் 12, 2025 06:20

கன்னித்தீவு. ஆயிரத்தெட்டு சட்டங்கள் இருந்தும், அந்த சட்டங்களின் பெயர்களை மாற்றியும் ஒரு பயனும் இல்லை. இவர் மேல் வேறு எந்த வழக்குளும் இல்லையென்று சொல்வதை எங்களைப்போல உள்ள பாமர மக்களே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வெளிநாட்டினருக்கு கடவுச்சீட்டு, விசா முறைகேடுகள் செய்த விஷயங்கள் என்ன ஆயிற்று? மக்களுக்கு நீதிமன்றங்களின் மேல் வைத்திருக்கும் மரியாதை குறையத்தொடங்குகிறது. இந்த வழக்கில் சிதம்பரதிற்கும் தொடர்பு உண்டு. இந்திராணி முக்கர்ஜியின் வழக்கறிஞர் இதில் தலையிட மாட்டாரா? அப்பட்டமாக குற்றவாளிகள் சுதந்திரமாக அதுவும் ஒரு MPயாக வலம்வந்து கொண்டு இருப்பதும் சமுதாயத்திற்கு இழுக்கு அல்லவா? என்னென்ன விளையாட்டுகள் நடக்கின்றன?


Mani . V
பிப் 12, 2025 05:38

கட்டாயம். பார்ட்னர்களுக்கு தெரியத்தானே வேண்டும்.


seshadri
பிப் 12, 2025 05:07

சிபிஐ விசாரணையை முடிக்காது. தீர்ப்பும் வராது. இப்படியே இன்னும் இருபது வருடங்களுக்கு இது இழுத்துக்கொண்டு இருக்கும். இறுதியில் ஒன்றும் இருக்காது. நமது நாட்டில் பணம் மற்றும் பலம் உள்ளவர்கள் நீதி மன்றத்தையோ அல்லது நீதியையோ மதிப்பதில்லை. இது இந்த வழக்கில் மட்டும் இல்லை. அரசியல் வியாதி எல்லோருக்கும் பொருந்தும்.


புதிய வீடியோ