உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை கண்டுகொள்ளாத கெஜ்ரிவால்: பா.ஜ., விமர்சனம்

3வது முறையாக அமலாக்கத்துறை சம்மனை கண்டுகொள்ளாத கெஜ்ரிவால்: பா.ஜ., விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 3வது முறையாக அமலாக்கத்துறை அனுப்பியிருந்த சம்மனை டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும் என பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.டில்லி அரசின் மதுபான கொள்கை மோசடி வழக்கில், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வருகிறது. இரண்டு முறை சம்மன் அனுப்பியபோது, இரண்டு முறையும் அவர் புறக்கணித்திருந்தார்.

சட்டவிரோதமானது

இன்று(ஜன.,03) ஆஜராகும்படி 3வது முறையாக கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. 3வது முறையும் இன்றும் அவர் ஆஜராகாமல் புறக்கணித்துள்ளார். அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் சட்டவிரோதமானது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார்.

குற்றவாளியா?

கெஜ்ரிவால் ஆஜராகாத நிலையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூணவல்லா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அமலாக்கத்துறையின் 3வது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் புறக்கணித்துள்ளார். அங்கே ஏதோ மறைக்கப்படுகிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. இல்லையெனில் குற்றவாளி போன்று அவர் ஏன் மறைய வேண்டும். நீதிமன்றங்கள் மணிஷ் சிசோடியா மற்றும் சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஜாமின் வழங்கவில்லை.

சஞ்சய் ராவத் 'சர்டிபிகேட்'

அரவிந்த் கெஜ்ரிவாலையும் அவரது துணிச்சலையும் நான் அறிவேன். அவர் யாருக்கும் பயப்படமாட்டார் என உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

K.Ramakrishnan
ஜன 03, 2024 22:36

எப்போதாவது சம்மன் வந்தால் பரவாயில்லை. இதெல்லாம் அமலாக்கத்துறைக்கு எப்படி ஒரு பொழுதுபோக்கோ.. அதே போலத்தான் அரசியல்வாதிகளுக்கு சம்மனும் ஒரு பொழுது போக்காகி விட்டது.


தாமரை மலர்கிறது
ஜன 03, 2024 21:41

விரைவில் கெஜ்ரி சிறைசெல்ல போகிறார். மோடி ஆட்சியில் பணக்காரர்களுக்கு ஒரு சட்டம், ஏழைகளுக்கு ஒரு சட்டம் என்ற வேறுபாடில்லை.


sankaranarayanan
ஜன 03, 2024 21:28

அமலாக்க துறையின் விஜயாரணைக்கு ஆஜராகாத முதல்வர் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார் முதல்வர் எவ்வழியோ அவ்வழிதான் அவருடைய சகாக்களும்...


J.Isaac
ஜன 03, 2024 18:39

கைது செய்யவேண்டியது தானே.


V Gopalan
ஜன 03, 2024 16:57

It is between the Enforcement Directorate and the person/s involved in the case. Why at all the BJP should provoke like Frogs. Because of these unwanted speech, give ammunition to Opposition party/ties stating that the ED is a tool of BJP. In Karnataka, two Karsevaks were arrested after thirty years, BJP should ensure that these persons are freed from the court case instead go on giving statements after statements, the stage has come to such a worst position that there is a chance of Godhra replay et all. Where the country is heading, instead of achieving development at par with China, in our country abundant natural resources, man power, know how tech et all, still we are in developing country only. Dirty politics, mud-slinging, appeasement politics, freebies etc is going to push our country like Somalia. The persons who have amassed wealth will survive but what about the middle class and below poverty? BJP is yet to learn many things and they are sailing in the MODI brand boat and once he step down, BJP will stand no where. The position will come in such a way for BJP, how a National party is just for the sake of double digit seats stands the same position will come to BJP, if they go on make frog mouth speech, no performance, corruption, because of drum beating of corruption by opposition party, lost in Karnataka.


அப்புசாமி
ஜன 03, 2024 12:47

10 வருஷமா ரெண்டு கோடி வேலை கொடுக்கறேன்னு சொல்லிட்டு டபாய்க்குறவங்களுக்கு யார் சம்மன் அனுப்புறது கோவாலு?


Sridhar
ஜன 03, 2024 16:30

அப்போ "ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பென்னு" சொல்லிட்டு அந்த ஏழைகளை சிரிக்கவே விடாம செஞ்ச கும்பலை என்ன செய்யலாம்


duruvasar
ஜன 03, 2024 11:31

அய்யா இந்தமாதிரி சட்டவிரோத பி எல் எம் ஏ வழக்குகளை வாதாடி உள்ளே தள்ளுவதற்கென்றே அண்ணன் கபில்சிபல் அடுத்த தெருவில் தானே இருக்கிறார். வழக்கை தொடுத்து ஸ்டே வாங்கிவிடுங்கள். வெரி சிம்பிள்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை