உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரளாவில் கால்பந்து போட்டி: மெஸ்ஸி ஆட்டம் உறுதி செய்தது அர்ஜென்டினா

கேரளாவில் கால்பந்து போட்டி: மெஸ்ஸி ஆட்டம் உறுதி செய்தது அர்ஜென்டினா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா கால்பந்து அணி நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடும் என அர்ஜென்டினா கால்பந்து சங்கம் உறுதி செய்துள்ளது.உலக கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அணி. கடந்த 2022ல் கத்தாரில் நடந்த பைனலில் பிரான்சை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலக கோப்பை வென்றது அர்ஜென்டினா (1978, 1986, 2022). இதையடுத்து கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, இந்தியாவில் (கேரளா) நட்பு போட்டியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த போட்டி நவம்பர் மாதம் நடக்க இருக்கிறது.இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 23) உலக கால்பந்து சாம்பியன் லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா தேசிய கால்பந்து அணி இந்த ஆண்டு நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடுவதை உறுதி செய்துள்ளது. இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி நவம்பர் மாதம் கேரளாவில் விளையாடும்'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மெஸ்ஸியின் இந்திய பயணத்தை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

M. PALANIAPPAN, KERALA
ஆக 23, 2025 14:18

கடைசியாக இதற்கு ஒரு முடிவு வந்தது, வருவாரா, மாட்டாரா, வருவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள் என்று மிக அதிகம் முரண்பாட்டுக்கு முடிவில் வருவது உறுதியானது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை