உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பழங்குடியினர் ஹிந்துக்கள் அல்ல: ம.பி., எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை பேச்சு

பழங்குடியினர் ஹிந்துக்கள் அல்ல: ம.பி., எதிர்க்கட்சி தலைவர் சர்ச்சை பேச்சு

சிந்த்வாரா: ''பழங்குடியினர் ஹிந்துக்கள் அல்ல,'' என, மத்திய பிரதேச சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் உமாங் சிங்கர் கூறியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ம.பி.,யில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரசைச் சேர்ந்த உமாங் சிங்கர், எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். பெருமை நான்கு முறை எம்.எல்.ஏ.,வான இவர், ம.பி.,யின் மிகப்பெரிய பழங்குடி குழுவான பில் சமூகத்தைச் சேர்ந்தவர். சிந்த்வாரா மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த பழங்குடி மேம்பாட்டு கவு ன்சில் கூட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உமாங் சிங்கர், ''நாங்கள் ஹிந்துக்கள் அல்ல. ஆதிவாசிகள் என்பதை பெருமையுடன் சொல்வேன். ''இதை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். எந்த மதத்தையும் நாங்கள் அவமதிக்கவில்லை. ''ஆனால், எங்கள் சமூகம், மரபுகள், கலாசாரம், பாரம்பரியம் அங்கீகரிக்கப்பட வேண்டும். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பழங்குடியினருக்கு மரியாதை அளிக்க வேண்டும்,'' என்றார். வெட்கக்கேடு இதற்கு கண்டனம் தெரிவித்து, ம.பி., முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், ''ஹிந்துக்கள், ஹிந்துத்துவாவுக்கு எதிராக காங்., எப்போதும் செயல்படுவது துரதிருஷ்டவசமானது. ''இதற்காக அக்கட்சி தலைவர்கள் வெட்கப் பட வேண்டும். ஹிந்துத்துவா குறித்து கேள்வி எழுப்பினால், மக்கள் மன்னிக்க மாட்டார்கள். உமாங் சிங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார். இதற்கு பதிலளித்த உமாங் சிங்கர், ''பழங்குடி அடையாளத்தை ஹிந்து மதத்தின் கீழ் உட்படுத்த பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., முயற்சிக்கின்றன. ''எங்களின் அடையாளத்தை அழித்து, ஹிந்துக்களாக மாற்ற முயற்சிப்பது ஏன்? பழங்குடியினர் மீது அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்., ஏன் இதுவரை பழங்குடி ஒருவரை அதன் தலைவராக நியமிக்கவில்லை?'' என, கேள்வி எழுப்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

பேசும் தமிழன்
செப் 06, 2025 20:32

பழங்குடியின பெண்ணை ஜனாதிபதியாக்கி அழகு பார்த்தது பிஜெபி.... ஆனால் அதே திரவுபதி முர்மு அவர்களுக்கு எதிராக ஓட்டு போட்டவர்கள் கான் கிராஸ் மற்றும் திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி ஆட்கள்..... நீங்கள் எல்லாம் சமூக நீதி பற்றி பேசலாமா ???


ஆரூர் ரங்
செப் 06, 2025 11:57

ஹிந்து புனித நூலான ராமாயணம் இயற்றிய வால்மீகி கூட வேட்டையாடும் ஆதிவாசி இனத்தார்தான். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில் ஆதிவாசிகள் அதிகம். இவரைப் போன்ற ஆட்களின் பின்னால் மதமாற்ற சக்திகள் உள்ளன.


ஆரூர் ரங்
செப் 06, 2025 11:42

வடகிழக்கு மாநிலங்களில் அன்னிய மிஷநரிகள் ஆதிவாசிகளிடம் இப்படிப்பட்ட பிரச்சாரத்தை செய்துதான் 4 மாநிலங்களை கிறிஸ்தவமயமாக்கி விட்டனர். அங்கெல்லாம் பிரிவினைவாதமும் தலைதூக்கியுள்ளது. முக்கியமாக நாகாலாந்து சட்டசபை அம்மாநில இளைஞர்கள் பலர் கிறிஸ்துவமல்லாத( DEVIL , சாத்தான்?) நம்பிக்கைகளைப் பின்பற்றுவதை எதிர்த்து தனி விவாதமும் நடத்த அனுமதித்துள்ளது . இப்படியேவிட்டால் மத அடிப்படையில் பாகிஸ்தான், காலிஸ்தான் பிரிவினை கேட்டது போல கிறிஸ்தவஸ்தா‌ன் கோரிக்கை கூட எழும். பெரிய பிரச்சனை வருமுன் காப்பது நல்லது .


Kanns
செப் 06, 2025 10:10

Send this Divisive-Destructive Congress Traitor to Entire World-All Continents esp North& South Americas,


Thirumal Kumaresan
செப் 06, 2025 09:37

. மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்


கண்ணன்
செப் 06, 2025 08:53

நல்ல வேளை, பழங்குடியினர் மக்களே அல்ல என்று சொல்லாமல் விட்டாரே)!


M S RAGHUNATHAN
செப் 06, 2025 08:21

இவர் சொல்வதை ஏற்றுக்கொண்டால் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு இருக்காது.


D Natarajan
செப் 06, 2025 08:20

காங்கிரஸ் தலைவராக நியமிக்க வில்லை


Kasimani Baskaran
செப் 06, 2025 07:43

கடவுள் இல்லை என்று கடவுள் பற்றி பேச ஆரம்பித்தவர்


அப்பாவி
செப் 06, 2025 07:29

கரெக்ட். எங்க ஊர் முனீஸ்வரர் கோவிலில் முனீஸ்வரர் கிருஷ்ணரின் அவதாரம்னு கெளப்பி உட்டு சுருட்டு படைக்கிறாங்க. எட்டு ஊருக்கு சுருட்டு வாசனை. உள்ளே கிருஷ்ணர். பக்கத்தில் அரிவாளோடு முனீஸ்வரர்.


ராஜ்
செப் 06, 2025 14:40

அப்பாவி என்ற அமைதி மார்க்கம்