உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றிகரமாக நிறைவு பெற்றது மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம்!

வெற்றிகரமாக நிறைவு பெற்றது மும்பை-ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம்!

மும்பை: கன்சோலி சுரங்கப்பாதை நிறைவடைந்ததன் மூலம் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வெளியிட்ட அறிக்கை:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3flmmk88&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாராஷ்டிரா மாநிலம் ஷில்பட்டா மற்றும் கன்சோலி இடையேயான 4.88 கிமீ நீள சுரங்கப்பாதை இன்று காலை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதன் மூலம் மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் எட்டப்பட்டது. இந்த பணியின்போது மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கன்சோலி தண்டவாளத்தில் இருந்தார். இந்த சுரங்கப்பாதை, பாந்த்ரா-குர்லா வளாகத்தை (பிகேசி) ஷில்பட்டாவுடன் இணைக்கும் 21 கிமீ நிலத்தடி நீளத்தின் ஒரு பகுதியாகும். இதில் தானே க்ரீக்கின் கீழ் 7 கிமீ பகுதியும் அடங்கும். இந்த இணைப்புடன், சுரங்கப்பாதை இப்போது சவாலி தண்டவாளத்தை ஷில்பட்டா போர்ட்டலுடன் இணைக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி