உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இது என்ன நியாயம்?

இது என்ன நியாயம்?

உத்தரகண்டில், காங்., தேசிய தலைவர் கார்கே பங்கேற்ற பொதுக்கூட்டம் நடந்த மைதானத்தில், சுத்திகரிப்பு யாகம் நடத்தியவர்கள் மீது ஆளும் பா.ஜ., அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு குரல் கொடுத்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயம்? குமாரி செல்ஜா காங்., மூத்த தலைவர்அற்ப அரசியல்! உத்தரகண்ட் உட்பட ஐந்து மாநிலங்களில், அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை மனதில் வைத்தே ஹல்த்வானியில் சுத்திகரிப்பு யாகம் நடந்த விவகாரத்தில், காங்., அற்ப அரசியலில் ஈடுபடுகிறது. தலித்துகளுக்கு எதிரானவர் ராகுல். இது, நம் நாடு மட்டுமின்றி உலகுக்கே தெரியும். கவுரவ் பாத்தியா செய்தித் தொடர்பாளர், பா.ஜ.,பாலமாக செயல்படுவேன்! எஸ்.டி., - எஸ்.சி., பிரிவினரின் நலன்களை நாம் பாதுகாக்க வேண்டும். அதே சமயம், உயர் ஜாதியினரின் அச்சங்களையும் போக்க வேண்டும். ஒரு ஜாதியின் நலனை பாதுகாப்பது மற்றொரு ஜாதியை சுரண்டுவதாக இருக்கக்கூடாது. உயர் ஜாதியினருக்கு நீதி தேவைப்பட்டால் உதவுவது என் கடமை. பல்வேறு சமூகங்களை இணைக்கும் பாலமாக செயல்படுவேன். சிராக் பஸ்வான் மத்திய அமைச்சர், லோக் ஜனசக்தி கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி