உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்

லக்னோ: நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை' என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில், கேள்வித்தாள் கசிந்தது, குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, இதுவரை இல்லாத அளவாக, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றது, அதிகளவு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது என, பல முறைகேடுகள் நடந்து உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்தாண்டு நடத்தப்பட்ட 'நீட்' தேர்வை ரத்து செய்து, புதிதாக நுழைவுத் தேர்வு நடத்தக் கோரியும், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், மாணவர்கள் சிலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை' என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வை கை விடுங்கள்!

இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வை கைவிட வேண்டும். இது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. தேவைப்பட்டால் நுழைவுத்தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

ram
ஜூன் 17, 2024 15:34

முறைகேடு எல்லாத்துலேயூம் தான் நடக்குது.. ஏன் உங்களோட ஆட்சியிலேயூம் தான்.. அதுக்காக உங்களோட ஆட்சியையும் ரத்து பன்னிடலாமா..


கண்ணன்
ஜூன் 17, 2024 06:17

ஏன், எல்லாத் தேர்வுகளையும் ரத்து செய்துவிடலாமே!


Krish
ஜூன் 16, 2024 20:50

படிச்சவுக்குதான் படிப்பின் அருமை புரியும். சரியான அரை வேக்காடு. மக்களை ஏமாத்தியே பிழைக்கும் புல்லுருவிகள்


தமிழ்வேள்
ஜூன் 16, 2024 20:36

திருட்டு திராவிட வைரஸ்/ திராவிஷக்கிருமிகள் பாரதம் முழுதும் பரவத்துவங்கி விட்டன.. முளையிலேயே கிள்ளி எறிந்தால் நாட்டுக்கு நல்லது...


Maheesh
ஜூன் 16, 2024 20:22

வாரிசு அரசியல்வாதிகள் எப்பொழுதும் உணர்த்தி பூர்வமாக பேசி மக்களை குழப்புவதிலேயே தங்கள் வாழ்க்கையை செலுத்துகின்றனர். இந்த வருடம் நடந்த நீட் தேர்வில் மிக அதிக பேர் தேர்வு பெற்றது UP மாநிலத்தில் தான் மிக அதிகபட்சமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். UPயை பொறுத்தவரை நீட் தேர்வு அவர்களுக்கு மிக நன்மை தரும் விதமாக உள்ளது.


S Sivakumar
ஜூன் 16, 2024 20:17

இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய பிரச்சினை தனியார் பள்ளிகள், கோட்சிங் நிறுவனங்கள் இதை தடுக்க அனைத்து பள்ளிகளையும் அரசுடைமை ஆகும் வரை மீள் துயர் பாமர மக்களை வாட்டும்.


Indian
ஜூன் 16, 2024 19:53

மொக்கை கமெண்ட் ..


அருண் பிரகாஷ் மதுரை
ஜூன் 16, 2024 19:20

உண்மையில் நீட் ரத்து செய்ய வேண்டும் என்றால் அதே போல மத்திய அரசுப் பணியிடங்களில் உள் மாநில ஆட்களை மட்டும் தேர்வு முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வரலாம்.உங்கள் உள்ளூரில் தேர்ச்சி பெற்று இங்கு வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு உங்கள் ஊருக்கு மாற்றல் ஆகிச் செல்கிறார்கள்.கல்வியில் முன்னேறிய நாங்கள் வெற்றி பெறத் தடுமாறும் தேர்வில் எப்படி உங்கள் மாநிலத்தில் உள்ளவர்கள் வெற்றி பெற முடிகிறது.அதில் எதுவும் முறைகேடு இல்லையா.இந்த சந்தேகமும் எங்களுக்கு பல ஆண்டுகளாக உள்ளது.இப்போது கூட நீட் தேர்வு முறைகேடு தமிழ்நாட்டில் இல்லை.எனவே மத்திய அரசுப் பணியில் உள் மாநில ஆட்கள் மட்டுமே நியமனம் செய்யும் சட்டம் கொண்டு வர அழுத்தம் கொடுங்கள்.


Bala Paddy
ஜூன் 16, 2024 18:57

கிரிமினல்ஸ் எல்லாம் ஒன் ஆ கூடிட்டிங்களா ?


Kumar Kumzi
ஜூன் 16, 2024 18:45

இது விடியலின் கோரிக்கையாக இருக்கும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ