உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி

பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ‛‛ மத்திய பட்ஜெட்டில் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளது'' என ராஜ்யசபாவில் எதிர்க்கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டினார். அதனை மறுத்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‛‛ பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை. பாரபட்சம் காட்டவில்லை'' என பதிலடி கொடுத்தார்.

வெளிநடப்பு

ராஜ்யசபா கூடியதும் எதிர்க்கட்சி தலைவர் கார்கே பேசும் போது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டப்பட்டு உள்ளது. மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. சில மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இது நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட். இவ்வாறு அவர் கூறினார். பிறகு எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=q53eheya&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

வாய்ப்பு கிடைப்பதில்லை

அப்போது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்த பதில்: பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்கவில்லை. எந்த பாரபட்சமும் காட்டவில்லை. எனது பதிலுரையை கேட்காமல் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். முந்தைய பட்ஜெட்டில் ஒவ்வொரு மாநிலமும் குறிப்பிடப்பட்டதா? பட்ஜெட் உரையில் எல்லா மாநிலங்களின் பெயரையும் குறிப்பிட வாய்ப்பு கிடைப்பதில்லை. மாநிலங்களின் பெயரை குறிப்பிடவில்லை என்றால், அது புறக்கணிப்பு ஆகாது.

பலன்

இடைக்கால பட்ஜெட், பொது பட்ஜெட்டில் மஹாராஷ்டிராவின் பெயர் குறிப்பிடவில்லை. அங்கு ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பில் மிகப்பெரிய துறைமுகம் அமைப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. பல மாநிலங்களுக்கு பெயரை குறிப்பிடாமல் திட்டங்களுக்கு நிதி வழங்கப்படுகிறது. பட்ஜெட்டில் மாநிலங்களின் பெயரை குறிப்பிடாவிட்டாலும், திட்டங்களின் பலன்கள் மக்களை சென்றடையும்.

திட்டமிட்டு

எதிர்க்கட்சிகள் திட்டமிட்டே மத்திய அரசு மீது குற்றம்சாட்டுகின்றன. மக்களை தவறாக வழிநடத்த காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. மேற்கு வங்கத்தில், நிதி அளித்தும் மத்திய அரசின் திட்டங்களை அம்மாநில அரசு அமல்படுத்தவில்லை. பிரதமரின் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

nizamudin
ஜூலை 25, 2024 10:57

தேர்தலில் மக்களால் எடுகாடடவர்களுக்கு எடுக்காதவருக்கு உயர் பதவி நிதி ராணுவம் சட்டம் உள்துறை தரக்கூடாது வேண்டும் என்றால் எம் ஊ எஸ் தரலாம் தேர்தலில் வெற்றி பெறாமல் குறுக்கு வழியில் வந்து அதிகாரம் செய்கிறார்கள்


ES
ஜூலை 24, 2024 23:00

Who ever thinks this is a good budget are totally deluded


bal
ஜூலை 24, 2024 20:16

என்ன சாதித்து கிழித்தார்..


Easwar Kamal
ஜூலை 24, 2024 20:02

ஆத்தா நீ என்ன பண்ணுவ. அவைங்க ரெண்டு பெரு என்ன சொல்றானுங்களோ அதை தானே பண்ண முடியும். அதுக்கு மேல ஏதாவது செஞ்ச வீட்டுக்கு அனுப்பிருவானவனுக. நமக்கு எதுக்கு பொல்லாப்பு.


saravanan
ஜூலை 24, 2024 17:00

எதிர்கட்சியினர் தாங்கள் ஆண்ட போது தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில் மாநில வாரியாக தான் பட்ஜெட் போட்டனரா? மத்திய பட்ஜெட் என்பதே தேசம் முழுவதுக்கும்மானது. பகுதி வாரியாகவோ, பிராந்திய வாரியாகவெல்லாம் போட முடியாது என்பதை கூடவா அறியாத அப்பிராணிகள் அக்கறையுள்ள எதிர்கட்சிகள் என்றால் நிதிநிலை அறிக்கை மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைத்திருக்கும். ஆனால் குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே பொய்மையை பிரதானமாக்கி உண்மையை மறைக்க பார்க்கின்றனர்.


Rengaraj
ஜூலை 24, 2024 14:45

பொருளாதார அடிப்படை தெரியாமல் பிதற்றும் எதிர்கட்சிகளை திருப்திப்படுத்தவே முடியாது. தமிழ்நாட்டின் பெயர் இல்லை என்று புலம்புகிறார்கள். பேரா முக்கியம் சோறுதான் முக்கியம், பொழைப்புக்கு வேலை முக்கியம் . அதுக்கு இவர்கள் என்ன கேட்டார்கள் அவர்கள் என்ன சொன்னார்கள் எவ்வளவு தருவதாக உறுதியளித்திட்டார்கள் , எவ்வளவு தந்தார்கள், எவ்வளவு நிதி குறைவு , இருக்கும் திட்டங்களில் மத்திய அரசின் பங்கை ஏன் குறைத்து தந்தார்கள் இப்போது நமக்காக என்ன பண்ணுகிறார்கள் , இப்படி புள்ளிவிவரத்தோடு மட்டும்தானே மக்களிடம் பேச வேண்டும். பொத்தாம்பொதுவாக கேட்டேன் கிடைக்கலை, கேட்டேன் தரலை இப்படி புலம்புவதற்கா நாற்பது எம்பிக்களை தேர்ந்தேடுத்தோம். ?. இங்கே மத்திய அரசு SC/ST க்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவழிக்காமல் மத்திய அரசுக்கே திருப்பி அனுப்பிய கதையும் நடந்திருக்கிறது. இந்த விஷயத்தில் பொறுப்புணர்ச்சி மிகவும் முக்கியம். மக்களும் முட்டாள்களை போன்று அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் அப்படியே நம்பிவிடக்கூடாது.


VARUN
ஜூலை 24, 2024 14:36

ஆட்சியில் உள்ள கோவெர்னமெண்ட் எப்போது தூக்கிஅடிக்கப்படுகிறதோ அப்போதுதான் இந்தியமக்களுக்கு நன்மை கிடைக்கும்


Santhakumar Srinivasalu
ஜூலை 24, 2024 14:13

நல்ல திறமையான சமாளிப்பு!


venugopal s
ஜூலை 24, 2024 13:46

மஹாராஷ்டிரா மாநில துறைமுகத் திட்டம் போல் தமிழகத்துக்கு பட்ஜெட் அறிக்கையில் சொல்லாமல் என்ன திட்டம் கொடுத்தீர்கள் என்றும் சொல்லி இருக்கலாமே!


Velayutham rajeswaran
ஜூலை 24, 2024 14:06

டிபன்ஸ் கார்டர் சேலம் சென்னை எட்டு வழிச் சாலை சென்னை பெங்களூர் தொழில் கார்டர் மதுரை கன்னியாகுமரி இரட்டை இரயில் பாதை 11 மருத்துவ கல்லூரிகள் இதே போல் திமுக காங்கிரஸ் கூட்டணி காலத்தில் தமிழ்நாட்டுக்கு தரப்பட்ட திட்டங்கள் குறித்து சொல்லலாம்


ஆரூர் ரங்
ஜூலை 24, 2024 14:22

இணையம் துறைமுக திட்டம், எட்டு வழிச்சாலை திட்டமெல்லாம் கொடுத்த போது அரசியலுக்காக நிறுத்தினார்கள். ஆனா மீத்தேன் திட்டம்தான் வேணும்ன்னு ஸ்டாலின் கையெழுத்து போட்டா என்ன செய்ய?


ராமகிருஷ்ணன்
ஜூலை 24, 2024 13:36

அந்த 40 டம்மி பீசுகளிடம் நல்ல தமிழில் சொல்லுங்க அம்மா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை