உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராமர் பாலம் வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்

ராமர் பாலம் வழக்கு மத்திய அரசுக்கு நோட்டீஸ்

ராமர் பாலத்தை தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கக் கோரியது தொடர்பாக உடனடியாக முடிவெடுக்க உத்தரவிடக்கோரி, பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த மனு மீது பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கடலுக்கடியில் அமைந்துள்ள ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச்சின்னமாக விரைந்து அறிவிக்ககோரி பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.பி., சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையிடம் கோரிக்கை மனு அளிக்கும்படி உத்தரவிட்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகும்படியும் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இதையடுத்து, சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த மனு மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து, உச்ச நீதிமன்றத்தில் அவர் மீண்டும் வழக்கு தொடுத்தார். அதில், ராமர் பாலம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த அறிவுறுத்தலின்படி, மத்திய அரசிடம் கோரிக்கை மனு அளித்ததாகவும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றம் உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்படியும் கோரப் பட்டுள்ளது. இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

சித்தநாத பூபதி Siddhanatha Boobathi
ஆக 30, 2025 03:04

இந்த இடத்தை நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றால் அது கட்டப்பட்டது என்பதை நிறுவ வேண்டும். கட்டப்பட்டது என்பதை நிறுவ ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். ஆய்வின் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அது இயற்கையாக உருவான திட்டுக்கள் என்றால் ராமர் கட்டியது இல்லை என்றாகிவிடும். அவை கட்டப்பட்டது என்றால் அவற்றின் காலம் அறுதியிடப்படும். இதன் மூலம் ராமாயணத்தின் காலம் அறிவியலின் வரையறைக்குள் வரும். இவையெல்லாம் இந்துத்துவர்களுக்கு பிடிக்காத விஷயங்கள். சுப்பிரமணியசாமி அனுகூல சத்ரு . அவரை பாரதிய ஜனதாவில் வைத்திருப்பதே வெளியில் இருந்தால் பாரதிய ஜனதா தலைவர்கள் மீது வழக்கு தொடுப்பார் என்பதால் தான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை