உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அயோத்திக்கு வருவோர் 23.82 கோடியாக அதிகரிப்பு

அயோத்திக்கு வருவோர் 23.82 கோடியாக அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: உத்தர பிரதேசத்தின் அயோத்திக்கு கடந்த ஆறு மாதங்களில், 23.82 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிந்துள்ளனர். இதன் வாயிலாக, முன் எப்போதும் இல்லாத வகையில் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. உ.பி.,யின் அயோத்தியில் கட்டப்பட்ட பிரமாண்ட ராமர் கோவிலுக்கு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, தரிசனம் மேற்கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, இக்கோவிலுக்கு வழிபட தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இந்நிலையில், உ.பி., சுற்றுலா துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை: அயோத்தி ராமர் கோவிலை காண, உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் மிகவும் ஆர்வமுடன் உள்ளனர். குறிப்பாக இங்கு ஆண்டுதோறும் நடக்கும் தீபத்திருவிழா தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் அயோத்தியின் ஈர்ப்பை அதிகரித்துள்ளது. இதன்படி தீபத்திருவிழாவை காண, முதல் ஆண்டான 2017ல், 1.78 கோடி பேர் வருகை புரிந்தனர். இதுவே, 2018ல் 1.95 கோடியாகவும்; 2019ல் 2.05 கோடியாகவும் உயர்ந்தது. கடந்த ஆண்டு, 16.44 கோடி பார்வையாளர்களாக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை, உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் பார்வையாளர்களின் வருகை அதிகரித்து இருப்பதையே பிரதிபலிக்கிறது. நடப்பாண்டில், ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்த எண்ணிக்கை, 23.82 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களாக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தீப திருவிழா வாயிலாக லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி நகருக்கு வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 26 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனை நடப்பாண்டின் தீபத்திருவிழா, சரயு நதிக்கரையில் உள்ள 56 படித்துறைகளிலும், 26 லட்சத்துக்கும் மேற்பட்ட விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டது. இந்த நிகழ்வை முதல்வர் யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார். 33,000 தன்னார்வலர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, டாக்டர் ராம் மனோகர் லோஹியா அவத் பல்கலை மற்றும் அயோத்தி மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து லேசர் மற்றும் ட்ரோன் நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Venugopal S
அக் 20, 2025 18:00

இதைக் கேட்கும் போது கும்பமேளாவுக்கு வந்தவர்கள் எண்ணிக்கை ஞாபகம் வருகிறது!


Rangarajan Cv
அக் 20, 2025 11:58

Obviously 50% of this data (23.82crs) data could be due to Kumbh function, which had substantial gathering.


Rathna
அக் 20, 2025 11:37

டூரிசம் மூலம் பொருளாதார வளர்ச்சி என்பது தான் இதன் நோக்கம். அயோத்திக்கு ஆப்பிரிக்கா, மோரீஷஸ், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா போன்ற நாடுகளில் இருந்து ஹிந்துக்கள் மட்டும் இல்லாமல், மற்ற மதத்தவர்களும் வருகிறார்கள். இதனால் உள்ளூர் பொருளாதாரம், பண புழக்கம் அதிகரித்து உள்ளது. விடுதிகள், ஹோட்டல்கள், உணவு கூடங்கள், தெருவோர சந்தை, நெசவாளர்கள், சிற்பம் செய்வோர் பலருக்கு வருமானம் சிலருக்கு சில லக்ஷங்கள் முதல் கோடிகள் வரை செல்கிறது. இதேபோல தமிழ்நாட்டில் மதுரை, தஞ்சாவூர், கும்பகோணம் பகுதிகளில் திட்டங்கள் கொண்டு வந்தால், அப்பகுதிகள் பல மடங்கு வளர்ச்சி பெரும்.


Priyan Vadanad
அக் 20, 2025 07:13

உசுப்பிவிடுங்கள். சென்ற தேர்தலில் நடந்ததைவிட வரப்போவது ......


Gnana Subramani
அக் 20, 2025 07:11

திருப்பதி கோவிலுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 60,000 பக்தர்கள் வருகிறார்கள். ஏறத்தாழ ஆறு மாதத்திற்கு 1.20 கோடி பக்தர்கள் வரலாம். அயோத்திக்கு ஆறு மாதத்தில் 23 கோடி பக்தர்கள் என்றால் எவ்வளவு வருமானம் இருக்கும்


பாமரன்
அக் 20, 2025 06:36

கடந்த ஆறு மாதத்தில் கிட்டத்தட்ட 24 கோடி பேர் வந்தாங்கலாம்ல... அதாவது டெய்லி ஆவரேஜா கிட்டத்தட்ட 13 லட்சம் மக்கள்... ஆனானப்பட்ட திருப்பதிக்கு கூட டெய்லி ஐம்பதாயிரம் பேர்தான் வர்றாங்க... சரி சரி நம்பனும்... நம்பலன்னா நம்மை டீம்காரண்னு திட்டுவாங்க...


V Venkatachalam
அக் 20, 2025 15:17

டீம் கான்னு திட்டுவாங்களாமா. ஊழலில் ஆரம்பித்து உய்யலாலா வரைக்கும் கை வைக்காத இடமே இல்லைன்னு தானே திட்டுறாய்ங்க. திருட்டு தீயமுக காரனுங்களுக்கு சொரணை இருக்குன்னா எவனுமே நம்ப மாட்டேன்றாங்க.


Mal
அக் 20, 2025 06:25

ஶ்ரீ ராம ஜெயம் அனுமனுக்கு நன்றி


Mal
அக் 20, 2025 06:24

ஶ்ரீ ராம ஜெயம் அனுமனுக்கு நன்றி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை