உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் மோடி இன்று காசிக்கு செல்கிறார்; 20 ஆயிரம் கோடி நிதிக்கு அனுமதி

பிரதமர் மோடி இன்று காசிக்கு செல்கிறார்; 20 ஆயிரம் கோடி நிதிக்கு அனுமதி

புதுடில்லி: 3வது முறை வெற்றி பெற்ற பிரதமர் மோடி இன்று (ஜூன்-18) தனது சொந்த தொகுதியான வாரணாசி செல்கிறார். இங்கு இரவில் கங்கை நதியில் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். காலையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கான உதவி தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார். வருமானம் குறைவான விவசாயிகளுக்கு உதவும் விதமாக நிதி வழங்கும் திட்டத்திற்கென முதல்கட்டமாக ரூ. 20 ஆயிரம் கோடியை வழங்கிட அனுமதி அளிக்கிறார். இதன் மூலம் நாடு முழுவதும் 9. 25 கோடி பேர் பயன்பெறுவர். மேலும் தனக்கு ஓட்டளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

RAMAKRISHNAN NATESAN
ஜூன் 18, 2024 11:52

கடந்த பத்துவருடம் பத்தவில்லையா ஊழல்வாதிகளை பந்தாட? அறுதிப் பெறும்பான்மையை மக்கள் வாரி வாரி வழங்கியிருந்தும், நீங்கள் நாட்டின் வளரச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தீர்களேயன்றி, நாட்டு சொத்துக்களை விதவிதமாக திருடியவர்களை விட்டுவிட்டீர்கள். வாய்ப்புகளை அள்ளி அள்ளி கொடுத்திருந்தும், ஏன் அரசியல் கொள்ளையர்களை விட்டுவிட்டீர்கள்? 2G கொள்ளையர்களின் வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு எடுப்பீர்களா, இல்லை எடுக்கமாட்டீர்களா? இப்போ வருமா, இல்லை அப்போ வருமா என ஏங்கியவர்களில் பலபேர் இருக்கிறார்கள். இன்னும் விடை தெரியாமல் விழிக்கிறோம். சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பொன்முடி தீர்ப்பு என்ன ஆனது? உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது என்றால், வழக்கின் தன்மை நீர்த்து போக செய்யப்பட்டதா..இல்லையா? இல்லை அவர் யோக்கியரா? விளக்கம் வேண்டும்.


Narayanan Muthu
ஜூன் 18, 2024 12:18

செலெக்ட்டிவ் amnesiya உள்ளவர்களுக்கு பாஜகவினர் செய்த ஊழல்கள் தெரியவர வாய்ப்பில்லை.


ஆரூர் ரங்
ஜூன் 18, 2024 14:50

2 ஜி மேல்முறையீட்டை உயர்நீதிமன்றம் அனுமதித்து விட்டது. பொன்முடி வழக்கில் அப்பீல் செய்ய வேண்டிய கடமை மாநில அரசுக்குத்தான். அது அப்பீல் செய்யாது என்பது சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்கு தெரியும். ஆனாலும் அமைச்சராக ஆக்க வலியுறுத்தியது எல்லோர் மனத்திலும் நீங்கா இடம்பெற்றுவிட்டது.


Narayanan Muthu
ஜூன் 18, 2024 11:50

காசியிலே கண்ணும் கருத்துமா இருந்தாத்தான் பின்னடைவை சரிக்கட்ட முடியும். தலைக்கே தண்ணி காட்டிய தொகுதியாச்சே. தேர்தல் ஆணையம் புண்ணியம் தலை தப்பியது தம்பிரான்ன்னு அடிச்சு புடிச்சு ஜெயிச்சாச்சு.


Senthoora
ஜூன் 18, 2024 19:07

வர, வர கூனுகிறார், தமிழ்நாடு வந்தால் இனி 45 பாகையில் கூனுவார்


Svs Yaadum oore
ஜூன் 18, 2024 11:28

ராமேஸ்வரத்திற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லையாம் .. இந்த விடியல் மதம் மாற்றி திராவிடனுங்க ராமேஸ்வரத்திற்கு எதை செய்ய வேண்டுமானாலும் அதற்கு விடியல் மத சார்பின்மையாக முட்டுக்கட்டை போடும் .... ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி வரை, 18 கி.மீ., துாரத்திற்கு புது ரயில் பாதை அமைக்க, மத்திய அரசு முடிவு .... இத்திட்டத்துக்கு பிரதமர் மோடி, 2019 இல் அடிக்கல் நாட்டினார். மொத்தம் 733 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆனால் விடியல் அரசு கடலோர சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்றும், ரயில் போக்குவரத்துக்கான தேவையும் அதிகளவில் இல்லை என்றும், இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் ...ஐந்து ஆண்டுகளாக விடியல் அரசால் இந்த திட்டம் முடக்கம் ..ஆனால் விடியல் எதற்கு இந்த திட்டம் வருவதை தடுக்கிறது என்பது மக்கள் அறிந்ததே ...


Velan Iyengaar
ஜூன் 18, 2024 11:57

அதிகாரத்த குவித்து வைத்துக்கொண்டிருக்கும் ஒன்றியம் இதை சீர் செய்ய இத்தனை வருடங்களை எடுத்துக்கொள்ளுமா ?? சும்மா அறிவிப்போடு எத்தனை திட்டங்கள் காற்று வாங்கி கொண்டிருக்கின்றன என்பது மதுரை AIIMS விஷயத்திலேயே புலப்படவில்லையா?? இவனுங்களுக்கு தமிழக வரி வசூல் மட்டும் இனிக்கும்... நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் என்றல் கசக்கும் ...


Velappan Vedanayagam
ஜூன் 18, 2024 10:55

While writing the headlines, News papers should write the headline as it should give the gist of the news and should not rise any confusion. For attracting readers it should not give confusing head lines. Modiji is going to varanasi for thanks giving to the voters who voted for him. Apart from he is relasing money to the farmers which will get credited directly to the accounts of the farmers in the entire country. Papers should improve their presentation.


ராம்பண்டிட்
ஜூன் 18, 2024 10:44

கங்கையில் பணத்தைக் கொட்டினால் மக்களுக்கு என்ன பிரயோஜனம்?


Sampath Kumar
ஜூன் 18, 2024 10:28

காசிக்கு மட்டும் தான் போல


Velan Iyengaar
ஜூன் 18, 2024 09:44

ராமேஸ்வரத்துக்கு? இது வரை என்ன செய்துள்ளார்?? அப்பட்டமான ஒருதலைபட்சம் .....


Veeraputhiran Balasubramoniam
ஜூன் 18, 2024 10:26

மோடி ஜி ராமேஸ்வரத்துக்கு மட்டும் பிரதமர் அல்ல ... இந்த 20,000 கோடியில் ராமேஸ்வரம் விவசாயிக்கும் வரும் கன்யாகுமாரி விவசாயி க்கும் போய் நேரடியாக சேரும் ... மேலும் வார்டு, வட்டம் கவுன்சிலர் , எடுபிடிகள் , அமைச்சர் என் யாரிடமும் கைகட்டி நிற்கும் நிலை விவசாயிகளுக்கு ஒரு போதும் வராது...


N Sasikumar Yadhav
ஜூன் 18, 2024 10:29

ராமேஸ்வரம் என்ன செய்தது. தமிழகத்துக்கு நிறைய செய்திருக்கிறார் ஆனால் தமிழகம் எத்தனை உறுப்பினர்களை கொடுத்தது சொல்லுங்க


Mario
ஜூன் 18, 2024 09:18

பாவங்களை சரி செய்ய


Ramesh Sargam
ஜூன் 18, 2024 12:13

இல்லை, உங்களைப்போன்ற பாவிகளை ரட்சிக்க.


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ