உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாகிஸ்தான் ஆதரவு பேச்சு : சர்ச்சையில் பரூக் அப்துல்லா

பாகிஸ்தான் ஆதரவு பேச்சு : சர்ச்சையில் பரூக் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர் : 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் பேசினார்.அப்போது, 'பாகிஸ்தானில் தற்போதுள்ள நிலைமையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் தாங்களாகவே,இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவிப்பர்' என, குறிப்பிட்டார்.நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், 'பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் முன்பும், தற்போதும், எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்' என,கூறியிருந்தார்.இது குறித்து, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா கூறியுள்ளதாவது:பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவுடன் இணையும் என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். அப்படி அவர் கூறுவது உண்மையானால், இணைப்பதற்கான நடவடிக்கையை எடுக்கட்டும்; யார் அவரை தடுக்கின்றனர். ஆனால், ஒன்றை அவர் நினைவில் வைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் கைகளில் வளையல் அணிந்திருக்கவில்லை. மேலும் அவர்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. அது நம் தலையில்தான் விழும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். இவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

P VENKATESH
மே 11, 2024 22:37

... தானே சேரும்


ksethuramalingam
மே 08, 2024 10:39

இவனை பாகிஸ்தானுக்கு anupungal


subramanian
மே 07, 2024 22:47

வளையல் போட்டு கொண்டு, முகத்திரையை போட்டு கொண்டு, அன்னியனுக்கு கழுவும் நீ அங்கேயே ஓடிவிடு


Senthil K
மே 07, 2024 21:19

அணு ஆயுதங்கள் தயாரிக்கும் அளவிற்கு நம்ம மூர்கனுங்களுக்கு அறிவு இருந்தால்.. உலகத்தில் பிரச்சினையே இல்லையே பாஸ்...


subramanian
மே 07, 2024 22:41

செந்தில் , இந்தியா அணு ஆயுத நாடாக மாறி வருஷம் ஆகிறது ஒண்ணும் தெரியாமல் பதிவு போடாதே


ArGu
மே 07, 2024 15:11

இந்த மர்மநபர்கள் எல்லாம் எங்க போனாங்க? ஏன் இன்னும் விட்டு வெச்சு இருக்காங்க?


panneer selvam
மே 07, 2024 12:52

Farook Abdulla ji , India knows about, so called nuclear weapons of Pakistan and also India made Pakistan to be aware the consequences if they try Just recollect the meeting between Nawaf Sheriff and Bill Clinton on the final days of Kargil war Scare mongering will not work with present India


தத்வமசி
மே 07, 2024 12:42

காஷ்மீரின் விசேஷ அந்தஸ்து சட்டத்தால் அதிகம் பயன்பெற்றவர்கள் இவர் குடும்பத்தினரும், முப்தி குடும்பத்தினரும் தான் அங்குள்ள இடங்களை தன்னிச்சையாக பல நூறு ஏக்கர் கணக்கில் வளைத்துக் கொண்டனர் அரசின் கஜானா கேட்கவே வேண்டாம் காஷ்மீர் இவர்களது குடும்ப சொத்து போல நடந்து கொள்கின்றனர் பாக்கிஸ்தானுடன் எப்போதும் கரிசனம் அதனால் தான் காஷ்மீரில் தீவிரவாதம் முடிவுக்கு வரவில்லை இவர்களை சுதந்திரமாக விடுவது காஷ்மீருக்கும் அதன் மக்களுக்கும் நல்லதல்ல


V RAMASWAMY
மே 07, 2024 08:49

இவர் பாகிஸ்தானியரா இந்தியரா என்று சந்தேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது. அப்படி இவருக்கு அந்த எதிரி நாட்டின் மீது தான் அன்யோன்யம் என்றால் இங்கேயிருந்துகொண்டு எல்லா சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு அவர்களைப்பற்றி புகழவேண்டிய அவசியமென்றால் அங்கேயே சென்று வசிக்க வேண்டியது தானே என்று மக்கள் கேட்டால் அதில் நியாயமிருக்கிறது


karthik
மே 07, 2024 08:35

காஷ்மீரின் அணைத்து பிரச்சனைகளுக்கும் இந்த ஆளு குடும்பம் மட்டுமே காரணம்


R SRINIVASAN
மே 07, 2024 08:21

இவர் அப்பா ஷேக் அப்துல்லா காஷ்மீரி resettlement பில் என்ற சட்டத்தை கொண்டு வர முயற்சி செய்து பாகிஸ்தானியர்களுக்கு மாத்திரம் காஷ்மீரில் குடியேற அனுமதித்தார் ஆனால் அன்றய பிரதமர் இந்திரா காந்தி இதை அனுமதிக்கவில்லை


மேலும் செய்திகள்





புதிய வீடியோ