உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைக்கலாமா... ஆம்...இல்லை?: கட்சி நிர்வாகிகளிடம் கேட்கிறார் ராகுல்

ஆம்ஆத்மி உடன் கூட்டணி வைக்கலாமா... ஆம்...இல்லை?: கட்சி நிர்வாகிகளிடம் கேட்கிறார் ராகுல்

புதுடில்லி: ஹரியானா சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி உடன் கூட்டணி வைக்கலாமா வேண்டாமா என்பது குறித்து அம்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசித்து கூறும்படி ராகுல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி குறித்து கெஜ்ரிவாலுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என ஆம் ஆத்மி தெரிவித்திருக்கிறது.90 தொகுதிகள் கொண்ட ஹரியானா சட்டசபைக்கு ஆக.,5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டாக போட்டியிட்டு 10ல் காங்., 5 தொகுதிகளில் வென்றன. ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், இத்தேர்தலில் தனித்து போட்டியிட போவதாக காங்கிரஸ் மாநில தலைவர் புபேந்தர் சிங் ஹூடா கூறியிருந்தார்.

ஆலோசனை

தேர்தலை எதிர்கொள்வது குறித்து, மாநில தேர்தல் குழுவினருடன் நேற்று( செப்.,02) ராகுல் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தலில், ஆம் ஆத்மி உடன் கூட்டணி வைப்பது குறித்து ஆலோசித்து சொல்லும்படி ஹரியானா மாநில காங்., நிர்வாகிகளிடம் ராகுல் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 3- 4 தொகுதிகளை அக்கட்சிக்கு ஒதுக்க காங்., முன்வந்துள்ளதாகவும், முதற்கட்டமாக 30 தொகுதிகளுக்கு வேட்பாளரை முடிவு செய்துவிட்டதாகவும் , ஓரிரு நாளில் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

கூட்டணி ஏன்

லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தலில் ‛ இண்டியா ' கூட்டணி வெற்றி பெற்றால், பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என ராகுல் நம்புகிறார். பார்லிமென்ட் உள்ளேயையும், வெளியேயும் பா.ஜ.,வுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் ‛இண்டியா' கூட்டணியை வலுப்படுத்த காங்., விரும்புகிறது. இங்கு வெற்றி பெறுவதற்கு, எதிர்க்கட்சிகளின் ஓட்டு ஒன்று சேர்வது முக்கியம் என நினைக்கும் காங்கிரஸ், கூட்டணி குறித்த முடிவை எடுக்கும்படி மாநில நிர்வாகிகளிடம் அறிவுறுத்தி உள்ளது.

ஆம் ஆத்மியின் நிலை என்ன

இது தொடர்பாக ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கூறியதாவது: காங்கிரஸ் முடிவை வரவேற்கிறோம். பா.ஜ.,வை வீழ்த்துவது மிகவும் முக்கியமானது. கெஜ்ரிவாலுடன் ஆலோசனை செய்து இது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kasimani Baskaran
செப் 04, 2024 06:03

மெத்தப்படித்த திருடனை விட அதைவிட குறைவாக படித்த திருடன் அதிக யோக்கியன் என்று கொள்ள வேண்டும்.


rsudarsan lic
செப் 03, 2024 19:25

உங்களுக்கு வசதிப்பட்டா அவாமிலீக் , காலிஸ்தான் கூட கூட்டணி வைப்பீங்க


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 03, 2024 19:23

ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்கலாமா ???? வேண்டாமா ???? ஐம்பத்து நான்கு வயதானாலும் ஷேஜதி க்கு - இளவரசருக்கு - இன்னமும் தெரியல ..... அல்லது அதன் லாஜிக் உணரும் அளவுக்கு மூளை வளர்ச்சி அடையலை ..... காங்கிரஸ் கூட்டணி அரசின் ஊழலை எதிர்த்துதான் ஆம் ஆத்மி கட்சி உருவானது என்று .....


Selvasubramanian Chelliah
செப் 03, 2024 18:59

ரெண்டு சேரும் போது ஒரே கூத்து தான் போங்க


nagendhiran
செப் 03, 2024 18:57

அதற்கு இந்த துடைப்பம் கையோடு போய்" சேர்ந்திடலாம்?


Balasubramanian
செப் 03, 2024 18:55

இல்லை கூடவே கூடாது


தாமரை மலர்கிறது
செப் 03, 2024 18:51

ஊழல் ஆம் ஆத்மீயோடு கூட்டணி வைத்தால், காங்கிரஸ் கட்சியின் ஊழல் பெரிதாக தெரிந்து, அழிந்துவிடும்.


பேசும் தமிழன்
செப் 03, 2024 18:45

பப்பு.... கூட்டணி இல்லையென்றால்.... உங்களை யாரும் சீண்ட மாட்டார்கள்.... அந்தளவுக்கு கட்சியின் செல்வாக்கு.... படுபாதாளத்தில் இருக்கிறது.....வாழ்வா சாவா என்ற நிலையில் தான் கான் கிராஸ் கட்சி இருக்கிறது.


GMM
செப் 03, 2024 18:15

வீதியில் கிடந்த காங்கிரஸ் வீட்டில் இருக்க புள்ளி கூட்டணி காரணம். ராகுல் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கைப்பற்றி கொண்டார். மாநில அளவில் கூட்டு பதவி, செல்வாக்குள்ள கட்சிக்கு முக்கியம் காங்கிரஸ் தராது. திமுக இதே கொள்கை தான். காங்கிரஸ் திமுக தனித்து நின்று 10 சதவீதம் கூட வெல்லாது. இந்த இரு கட்சிக்கும் பல்லக்கு தூங்குவதை விட தனித்து நிற்பது மேல். தமிழக நாம் தமிழர் கட்சி புரிந்து கொண்டது.


ayen
செப் 03, 2024 17:51

தனித்து நின்றால் வெற்றி பெறுவது நிச்சயம் கிடையாது. கூட்டணி வைத்தால் சில தொகுதிகள் தேறும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை